Saturday, March 27, 2004

டையலாக்கு மன்னரு



பாளாப்போன அரசியல பேசி ரொம்பவே போரடிச்சிப்பூட்சுபா. சுண்டக்கஞ்சிக்கு ஊறுகா மேரி சொம்மா பயாஸ்கோப்பு பக்கமா ஒரு ரவுண்டு வுடலாம்ன்னு கீறேன்.

நம்ம டையலாக்கு மன்னரு அஜீத்து புச்சா ஒரு டையலாக்கு வுட்டுக்கீறாரு. "அடுத்த வர்சங்காட்டி பாரு நைனா, இந்த அஜீத்து ஆருன்னு காட்றேன்"ன்னு. இந்த வர்சத்துல அண்ணாத்தைக்கு 3 பயாஸ்கோப்பு பொட்டி வெளில வருதாம். அது வந்தா அண்ணாத்தே ரேஞ்சு வானத்த தொட்டுடுமாம்.

ஒரு மன்ஸன் நாளிக்கு இருப்பானா, கட்டைல போவானான்னே எவனுக்கும் தெர்ய மாட்டேங்குது, இவுரு அடுத்த வர்சத்துல தா ஆருன்னு காட்டப்போறாராம். நைனா நீயி எல்லா நல்லா சோக்கா தான் பண்ற. அயகயகா கோட்டும் சூட்டும் போட்டுக்கிற, பயாஸ்கோப்பு மட்டும் காட்டாம சைடு காருல்லாம் ஓட்டுற, பொம்ம பிளைட்டு கூட ஓட்டுற. ஆனா ஓவரா டையலாக்கு வுடுறபா, அத்தான் கேக்க சகிக்கலைபா.

முன்ன ஒரு தபா "ஆஞ்சநேயா" பயாஸ்கோப்பு வெளில வர்ற நேரத்துல "அடுத்த சூப்புரு இஸ்டாரு நா தான்பா"ன்னு டையலாக்கு வுட்ட. இன்னா ஆச்சு, படம் வெளில வந்த வேகமும் தெர்யல, போன வேகமும் தெர்யல. அந்தக் கெரவம்புட்ச்ச படத்த பாத்த எனக்கு படத்தோட பேருக்கு இன்னா மீனிங்குன்னு கூட தெர்யல.

சின்ன சின்ன பசங்கல்லாம் இன்னாமா கெலிக்கிறாங்கோ, இன்னா ரிசல்டு குடுக்கிறாங்கோ, எதுனா உன்னிய மேரி டையலாக்கு வுடுறாங்களா. நம்ம விக்ரமு, சூரியா, ரெண்டு கிலோ எலும்பு ஒரு கிலோ தோளோட பயாஸ்கோப்பு காட்டி நாலு படத்துல மூணு கெலிச்ச தனுசு. அல்லாரும் இன்னாமா பதவுசா குந்திக்கின்னு கீறாங்கோ, நீ மாத்ரம் இன்னாதுக்குபா ஓவரா டையலாக்கு வுடுற.

No comments: