Monday, March 15, 2004

விருது வாங்கலையோ விருது

வண்க்கம் மக்களா,

நம்ம மர்த்தடியாண்ட குந்திகினு இர்ந்தப்போ சுரேசண்ணாத்தே சோக்கா அஞ்சு கேள்வி கேட்டுருக்காரு விருது கெடைக்கிறதப் பத்தி.

1. வெகுஜன பத்திரிகையில் எழுதி பிரபலமான ஒருவர் விருது வாங்கினால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு எழுகிறது?

நைனா, வெகுசனம் படிக்கிற பொஸ்தகத்துல எய்துனவங்கோ விருது வாங்குனா மட்டுமா கொரலு வுடுறாங்கோ, சொம்மா எலக்கியம் பேசுனா கூட தான் கொரலு வுடுறாங்கோ. நம்ம தலீவர் பாட்சா பட்த்துல சொல்ற ஒரு டயலாக்கு தான் நாபகத்துக்கு வருதுபா. "இந்தியாக்காரன் பேசாம இருந்தா செத்துப் போயிடுவான்".

2. விருது வாங்கியவரின் இலக்கியத்தன்மையையும் மட்டும் ஆராயாமல் அவருடைய அரசியல் செல்வாக்கையும் ஆராய்வது அவசியமா? அதில் ஏதாவது உண்மை இருக்கக்கூடுமா?

இனிமே விருது வாங்கணும்ன்னா அவனுக்கு ஒரு அரசியல்வாதியையும் தெர்யக்கூடாதுன்னு ஒரு ரூல் போட்றுங்கபா, அப்பாலிக்கா ஒர்த்தரும் கொரலு வுட மாட்டாங்கோ.

3. மற்ற மாநிலங்களிலும் இந்த மாதிரியான சர்ச்சைகள் வழக்கமான ஒன்றுதானா?

நம்ம வூட்ல குப்ப கெடக்குறது நமக்கு தெர்யும், அடுத்தவன் வூட்ல??????

4. கவிதை எழுதி புகழடைந்தவருக்கு நாவல் பிரிவில் விருது வழங்கப்பட்டிருப்பது விநோதமாக இல்லையா?

இப்டியே கேட்டுகினு போனா, சினிமால கேமராமேனா இர்ந்த பாலுமகேந்திராவுக்கு எப்டி டைரக்ஸனுக்கு விருது கொடுக்கலாம், நடிகனா இர்க்குற ஒருத்தன் நல்லா படம் எடுத்தா அவனுக்கு எப்டி சூப்பர் டைரக்டருன்னு சொல்லலாம்ன்னு கேள்வி கேட்டுகினே போவலாம்பா. நாட்ல கேள்விக்கா பஞ்சம்.....

5. இந்த வருட விருதுக்கமிட்டியில் யார்யார் இருந்தார்கள்?

ஹீ ஹீ ஹீ, இன்னா சார் நீ எதுனா சைட்ல வெட்டி அடுத்த தபா விருத ஜெலிக்கலாம்ன்னு ரோசனையா?? சொம்மா தமாசுக்கு நைனா...

கொஸப்பேட்ட குப்ஸாமி

No comments: