Sunday, June 04, 2006

டையமண்டு கவிஞரின் கண்ணகி பொராணம்

சிஎம்மு தாத்தாவுக்கு நேத்து பொறந்தநாளு. "வாய்த்த வயசு கெடியாதுபா, வணங்குறேன்"ன்னு அல்லாரும் டயலாக்கு வுட்டுகின்னே காலுல வுய்ந்துருப்பாங்கோ. தாத்தா எலிக்ஸனுக்கு முன்னாடி சொன்ன மேரி அரிசி குடுக்க ஆரம்பிச்சிட்டாரு, கொஞ்ச நாளுல டிவி பொட்டியும் குடுப்பேன்னு சொல்லிக்கீறாரு. கண்ணகி செலைய கூட மருக்கா தொறந்து வெச்சிக்கீறாரு. அல்லாம் சோக்கா தான் கீது.

அல்லா மேட்டரையும் சொம்மானா பாத்துக்கின்னு இர்ந்த குப்ஸாமிக்கு கண்ணகி மேட்டருல தான் ஒரு டகால்டி கெட்ச்சிதுபா. இன்னாங்குறிங்களா? சொல்றேன் சொல்றேன். பகுத்தறிவு பாசறையிலே பாலு குட்ச்சி வளந்துபுட்டு மஞ்சத்துண்டு போட்டா மன்ஸுக்கு எதமா கீதுன்னு சொல்லிக்கின்னு கீற தாத்தா குந்திகின்னு இர்ந்த மீட்டிங்கில கவிப்பேரரசு டயமண்டு கவிஞரு ஒரே டயலாக்கா வுட்டுக்கின்னு கீறாரு.

"கண்ணகி சிலை வெறும் உலோகம் இல்லை, எங்கள் உலகம்".

ஒகே கரீட்டு.

"தலைவிரி கோலத்துடன் கண்ணகி சிலை இருப்பது சென்னை நகரத்திற்கும் தமிழகத்திற்கும் அபசகுணம் என்பதால் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது"

இதுவும் ஒகே, வெச்சுக்குவோம்.

"கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிறகு தான் வங்கக்கடல் சீறி சுனாமி வந்தது"

இது தான் கவிஞரே இடிக்கிது. எங்கேயோ இருக்குற இந்தோனேஷியாவுல பூமி குலுங்க, அதோட அதிர்ச்சி தமிள்நாடு தாண்டியும் அட்ச்சிது. கண்ணகி செலங்காட்டி அங்க இர்ந்தா அம்மிணி டிராஃபிக்கு போலீஸு கணுக்கா சுனாமிய வேற ரூட்டுக்கு டைவர்ட்டு பண்ணி வுட்டுருக்கும்ன்னு சொல்லுறது கொஞ்சம் டூ மச்சா கீது கவிஞரே. அதுவும் பகுத்தறிவு பாசறையிலே தாத்தா குட்ச்ச மிச்ச பால குட்ச்சி வளந்தவரு நீங்க. தாத்தா பக்கத்துல குந்திகின்னே இப்டி பேஸ்றிங்களே, நாயமா கீதா?