Sunday, March 14, 2004

பேட்ட வெண்பாஸ்

வண்க்கம்பா,

நம்ம தோஸ்துங்க நெறியா பேரு மர்த்தடில குந்திகினு கவித எய்துறாங்கபா. அதுவும் மரபு கவுதயாம். மரபு கவுதன்னா அதுக்கு ஒரு ரூல்ஸ் கீதாம். கவுத எய்தணும்ன்னு நெனைக்கிறவங்க மொதல்ல வெண்பா எய்திப்பயகுங்கோன்னு ஒரு தபா நம்ம கவியரசரு சொன்னதா பரட்ட வந்து நம்ம கைல சொன்னான். ஒரு குத்து கானா போட்டா கூத்தடிக்க தெர்யும், கவுதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்பா, அத்தால அத்த நா காதுல போட்டுக்கல.

அப்பாலிக்கா மர்த்தடி பக்கமா ஒரு நாளு சைடு வுட்டா நெறியா பேரு வெண்பா கத்துக்கிறேன்னு சொல்லிகினு குஜாலா எய்திகின்னு கீறாங்கோ. நம்ம குருஜி அரியண்ணாத்தேக்கு சலாம் போட்டு ஒரு நாலு பேட்ட வெண்பா எய்திக்கீறேன்பா. நமக்கு தெர்ஞ்ச எகனமொகன போட்டு எய்தினேன். அத்த மர்த்தடில போட்ட அல்லா பெர்ய மன்ஸங்களுக்கும் நெம்ப டாங்ஸ்பா......


நம்ம பேட்ட வெண்பாஸ்

சல்பேட்டா மாமனுக்கு சல்சலக்குக் காட்டிபுட்டு
குல்கந்து சொர்ணம்நீ குன்ஸாதான் போனீயே
அல்லாரும் பாக்கசொல்ல அல்ட்டாப் இடுப்பசச்சு
சொல்லும்மே ***லைப்பாயி சோப்பு***

(இந்தப் பேட்ட வெண்பா என்னோட கனவு குஜிலி ஈரநில நந்திதாவுக்கு)

o

இல்லாத எல்க்கணத்த இஸ்துகினு வந்துந்தான்
பொல்லாத சேட்டையெல்லாஞ் செய்மாமு - கல்ப்படிச்சி
புண்ணான சோமாறி பிஸ்கோத்து நீயிப்போ
இன்னாத்த ஓண்ணாலும் எய்து

o

டாஸ்மாக்கு பாட்டிலுக்கு டக்கரான பீர்கூட்டி
ராஸ்கோல்நான் ஊத்திகிறேன் ராத்திரி - "இஸ்கூல்போ
ஆடாதே அல்ட்டாதே அடங்கியிரு" சொல்வாராம்
தோடாடேய் வன்ட்டார் தொரை

o

கும்மாளம் போட்டுகினு குஜ்லிபடம் பாத்தவன
அம்சமா இஸ்துகினா ஆண்டாளு - எம்பாவி
மன்ஸ புடிச்சி மயக்கினவ மாய்மாள்த்த
குண்சாதான் எய்தேண்டா குணாலு

ooo

அப்பாலிக்கா பாக்கலாபம்பா. வர்ட்டா.

கொஸப்பேட்ட குப்ஸாமி

No comments: