Sunday, March 14, 2004

சலாம் போட்டுகிறேன் நைனா

வண்க்கம் தோஸ்த்ஸ்,

எப்டிபா கீறிங்கோ. ஒலகம் முய்க்க நம்ம தமிளாளுங்க புளாக்கு புளாக்குன்னு ஏதோ சவுண்டு வுட்டிகினுகீறாங்களே, அத்து இன்னான்னு பாக்க வந்துகீறேன்பா. சொம்மா சொல்லக்கூடாது, சோக்கா தான் கீது.

ஒலகம் முய்க்க புளாக்கு (அதுக்கு நம்ம தமிளுல வலப்பதிவாம்ல) கீது, நீ இன்னாடா புச்சா அதுல கிளிக்கப்போறேன்னு கேக்கறிங்களா? நமக்கு தெர்ஞ்சது ரெண்டே ரெண்டு மேட்டரு தான்பா. ஒண்ணு ரிக்ஸா வளிக்கிறது, அப்பாலிக்கா ஊத்திகினு வந்து நம்ம சென்னப்பட்டனத்து தமிள ஒலகம் முய்க்க தெர்ய வெக்கிறது, கூடவே கொஞ்சூண்டு குசும்பு கலாய்ச்சலும். படிக்காத பய, நாலு எய்து தெர்யாதவன். எதுனா எக்குத்தப்பா கலாய்ச்சுபுட்டா மன்ஸ்ல வெச்சிக்காதிங்கபா.

நம்ம கிறுக்கல் பரியண்ணே புளாக்கு சைட்ல நேத்து ஒரு சவாரி இர்ந்துச்சு. போய் பாத்தா நம்ம மாலரு புளாக்குன்னா ஒரு இது வாணாமான்னு (என்னமோ அந்தரங்க தொனியாம்) கேட்டுருந்தாரு. பட்ச்ச நமக்கு ஒரே ஃபீளாய்டுச்சுபா. அத்தான் ஒடனே நமக்குன்னு ஒரு இஸ்பெஸல் புளாக்கு போட்டுட்டேன்.

ரிக்ஸா சவாரி ஒண்ணு வர்து, சோளிய பாக்கணும்பா, அப்பாலிக்கா தோஸ்துங்க கூட சுண்டக்கஞ்சி கூட்டுக்கு வர்றேன். வர்ட்டா.......

கொஸப்பேட்ட குப்ஸாமி

No comments: