Wednesday, June 30, 2004

வுட்டாச்சு லீவூஊஊஊஊஊ

குப்ஸாமி ஒன் வீக் ரிக்ஸா வளிக்கிற ஜொலிய அப்பாலிக்கா தூக்கிப் போட்டுப்புட்டு குண்ஸா காலாட்டிக்கின்னு வூட்டுல பட்த்து தூங்கப் போறான்பா. இன்னா மேட்டருன்னு கேக்குறிங்களா? ரியாத்ல கீற குப்ஸாமிக்கு ஒன் வீக்கு அவனோட மொதலாளி வூட்ல போயி "என்ஸாய் பண்ணுபா"ன்னு லீவு குட்த்துக்கீறாரு.

ஆருக்குனா குப்ஸாமி கைல எதுனா பேசணும்ன்னு நென்ச்சா 04144-242278 நம்பர்ல கூப்டலாம். இன்னாபா யார்ன்னா குப்ஸாமிக்கு போன் பண்ணுவிங்களா??

Tuesday, June 29, 2004

தமிள் தேதி

நம்ம கிறுக்கு சங்கரு தன்னோட புளாக்குல தமிள் தேதி எப்டி வர வெக்கிறதுன்னு சொல்லிக்கீறாரு. அத்த இன்னும் கொஞ்சூண்டு அஜ்ஜீஸ் பண்ணி குப்ஸாமி எய்திக்கீறான். குப்ஸாமிது வோணும்ன்னா இத்த எட்த்துக்கோங்கோ, கிறுக்குது வோணும்ன்னா அங்கே எட்த்துக்கோங்க.

இத்த எட்த்து புளாக்கோட தலமாட்டுல (<head>) எங்கணா போட்டுக்கோங்கோ.


<script>
function ChangeDatetoTamil(dtmDate)
{
EnglishArray = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

TamilArray = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

for (i=0;i<19;i++)
{
dtmDate = dtmDate.replace(EnglishArray[i], TamilArray[i]);
}

return dtmDate
}
</script>


<$BlogDateHeaderDate$>ன்னு கீற எட்த்துல

<script>document.write(ChangeDatetoTamil("<$BlogDateHeaderDate$>"))</script>


போட்டுக்கோங்கோ. அப்பாலிக்கா தமிளு தேதி தான்.

வாள்க கிறுக்கு சங்கரு.....

Monday, June 28, 2004

கஜேந்திரா

பாபா கவுண்ட் டவுன் இஸ்டாப்பு ஆயி போச்சி, இப்போ கஜேந்திரா கவுண்ட் இஸ்டார்ட்டு ஆயிக்கீது. கஜேந்திரரு மரவெட்டி ஐயாவ சைடு காட்ட மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ சிலுத்துக்கின்னாங்கோ. கஜேந்திரரோட அடிபொடிங்களும் சொம்மா இர்க்குமா, அதுங்களும் "கஜேந்திரரு பவரு காட்றோம் பாரு"ன்னு அட்ச்சி ஆடுதுங்கோ.

கஜேந்திரரு எடுக்குற பயாஸ்கோப்புக்கு ஆப்பு வெக்கிறோம்ன்னு மரவெட்டி சிஸ்யப்புள்ளிங்கோ கொரலு வுடுதுங்கோ. ஒடனே கஜேந்திரரு "நீயி முட்ஞ்சா செய்து பாருபா"ன்னு எதிர்கொரலு வுடுறாரு. பாபா படம் வூத்திக்கின்னது மரவெட்டி ஐயா தான் ரீஜன்னு இன்னமும் சூப்புரு பொலம்பிக்கின்னு கீறாரு. மெய்யாலுமே படம் பாக்குற மேரி இர்ந்தா மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போய்ட்டா மட்டும் படம் புட்டுக்குமா இன்னா? பாபா படமே ஒரு டுபுக்கு படம், அத்த மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போவாம இர்ந்தாலும் படம் பணால் தான்.

இன்னும் ரெண்டு மாசத்துல கஜேந்திரா படம் ரிலீஸ் ஆவும். படம் என்னவோ படா வேஸ்ட்டு படம் தான். பக்கத்து இஸ்டேட்டுல கொய்ந்த பையன் ஜூனியர் எண்டிஆரு ஆக்ட்டு குட்த்த "சிம்மாத்ரி"ய இங்கே தமிளுல கஜேந்திரா ஆக்கிப்புட்டாரு நம்மாளு. படம் முளுக்க வெட்டு குத்து ப்ளட்டு தான். பக்கத்து இஸ்டேட்டுல படா இட்டு குட்த்த ஒரு படத்த நம்ம பிரசாந்து இப்படி கொண்டாந்து இங்கே வூத்திக்கிச்சு. கஜேந்திரரும் இப்டி வூத்திக்க சான்ஸு சோக்கா கீது.

படம் வூத்திக்கின்னா "தன்னோட பவரு"ன்னு மரவெட்டி ஐயா தலக்கீளா டான்ஸு ஆடுவாரு. படம் சோக்கா ஓடுச்சுன்னா கஜேந்திரரு சவுண்டு வுடுவாரு. என்னிய மேரி பாளாப்போன பொதுசனம் மட்டும் எப்பவும் கைய கண்ணத்துல வெச்சிக்கின்னு குந்திக்கின்னு இர்க்கும்.

Thursday, June 24, 2004

டைட்டிலு குட்க்கலாம் வாங்கப்பா

குப்ஸாமி வாய்க்கு அவலு கெடிக்கிலியேன்னு ரொம்ப ஃபீலாகி இர்ந்தான்பா. எய்த்தாளர் பாரா "இந்தா பையா புட்ச்சிக்கோ"ன்னு அள்ளி அவல குட்த்துக்கீறாரு.

தமிளுநாட்டுல கீற வலப்பதிவாளுங்கோ அல்லாருமா ஒரு நாளு மூட்டிங் போடலாம்ன்னு பிளான். அதுக்கு ஒரு நோட்டீஸ் வுட்டுக்கீறாரு. நோட்டீஸ்ல அல்லாரு பேரையும் போட்டுட்டு கூடவே வலப்பதிவு முன்னோடின்னு சொல்லி மாலனைய்யாவை சொல்லிக்கீறாரு. எனுக்கு பயாஸ்கோப்பு பாக்கசொல்லோ குபுக்குன்னு சிரிப்பு வர்ற மேட்டரு இன்னா தெர்யுமா, ஆக்ட்டு வுடுற அண்ணாத்தேங்களுக்கு போடுற டைட்டிலு தான். பாரா வலப்பதிவு முன்னோடின்னு சொல்றப்போவும் அத்தப் போலவே ஒரு சிரிப்பு சிரிச்சேன். மாலனைய்யா வலப்பதிவு முன்னோடின்னா அப்போ அதுக்கு முன்னே வலப்பதிவு செய்தவங்கள இன்னான்னு சொல்வாங்கோ, முன்னோடிக்கு முன்னோடியா? எதுக்கு தலீவா இந்த மேரி டைட்டிலெல்லாம். மாலன்னு சொன்னா ஆருக்கும் தெர்யாதா??

சரி, பாராவோட பதிவு, அவரு ஆரப் பத்தியும் இன்னா வேணா சொல்லலாம்ன்னு வுடுவோம். இத்த பட்ச்சி நம்ம மர்த்தடி சீமாச்சு இன்னும் கொஞ்சம் ஓவரா ஃபீலாயி பூட்டாரு. அரியண்ணாத்தேயை வலையண்ணான்னு டைட்டிலு குடுக்கலாமான்னு கேட்டுக்கீறாரு. வாணாந் தலீவா வாணா. இப்போ நீயி டைட்டிலு குட்ப்ப, அப்பாலிக்கா அந்த டைட்டில வெச்சி ஆர்ன்னா கலாசுவாங்கோ. இத்தெல்லாம் இன்னாத்துக்கு. அவரு செலருக்கு அரியண்ணா, எனுக்கு அரியண்ணாத்தே, இன்னும் செலருக்கு அரி. அப்டியே இர்ந்துட்டுப் போவட்டுமே, இன்னாத்துக்கு ஒரு டைட்டிலு....

Wednesday, June 16, 2004

ஓசி வெளம்பரம்

பயாஸ்கோப்பு எட்த்துபுட்டு அதுக்கு போஸ்டரு அடிக்காம, டிவி பொட்டில காட்டாம, நூஸ் பார்ட்டிங்களுக்கு துட்டு குட்க்காம வெளம்பரம் பண்ணனுமா, மேட்டரு ரொம்ப ஈஸிபா. பட்த்துல படா பேஜாரான மேட்டர்லாம் கீதுன்னு காவிப்பார்ட்டிங்கோ கைல சொல்லிட்டா போதும். படம் தெரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே கொரலு வுட ஆரம்பிச்சுடுவாங்கோ. ஒடனே நூஸ் பார்ட்டிங்களும் "இன்னாபா படம் இது, கண்ட கருமத்தை எல்லாம் புட்ச்சி போட்டு வெச்சிக்கீறாங்கோ"ன்னு எய்த ஆரம்பிச்சிடுவாங்கோ.

மெய்யாலுமே பட்த்துல தம்மாதுண்டு கலீஜி மேட்டரு கூட இர்க்காது, ஆனா இவனுங்கோ வுடுற கொரலுல படத்துக்கு பிரியாவே வெளம்பரம் கெட்ச்சிடும். குப்ஸாமி மேரி நல்லப்புள்ளிங்க அல்லாம் கூட இஸ்கிரீன்ல இன்னா தான் காட்றாங்கோன்னு தியேட்டராண்ட போயி கியூவுல நிண்ணு பயாஸ்கோப்பு பாத்துட்டு வர்வாங்கோ. படத்த எட்த்தவனுக்கு துட்டு செலவு இல்லாம வெளம்பரமும் ஆச்சு, படமும் செம்ம ரன்னிங்கு.

இப்போ புச்சா கேர்ள்பெரண்டுன்னு ஒரு படம் வந்துக்கீது. காவிப்பார்ட்டிங்கோ குதிக்க ஆரம்பிச்சாச்சு. படம் கண்டிப்பா பிச்சிக்கின்னு ஓடும். எட்த்த புண்ணியவானுக்கு நல்ல துட்டு வசூல். தமிளுல இஸ்து போத்திக்கின்னு ஆக்ட்டு வுட்ட இஸாவுக்கு இப்போ செம்ம டைமு போல, வர்மா அண்ணாத்தே ராசி, பார்ட்டிக்கு செம்ம ஓட்டம். இன்னும் நாலு படம் இப்டி ஆக்ட்டு வுட்டு அக்கா அப்டிக்கா எங்கனா போயி செட்டில் ஆயிடும். யக்கோவ் நீயி கலக்கு.......

பிட் நோட்டீஸ்

கெட்டள கேட்டு குப்ஸாமி பீஸாப்பூட்டானான்னு ஃபீலான அல்லாருக்கும் வண்க்கம்பா. குப்ஸாமியாண்ட இந்தக் கெட்டளல்லாம் வேலிக்காவாதுன்னு கெட்டள போட்டவருக்கே தெர்யும். கொஞ்சம் சவாரில பிஸியா இர்ந்தாச்சுபா, அத்தான் மேட்டரு.

Tuesday, June 08, 2004

ஒம்போது கெட்டளைகள்

நம்ம வாத்யாரு பாரா தன்னோட வூட்டுல ஒம்போது கெட்டளைங்கோ எய்திக்கீறாரு. அதுவும் மொதோ நாளே அக்கம்பக்கத்துல வூடு கட்டிக்கீறவங்கள ஒரு சாத்து சாத்துறார். இஸ்கூலுக்கு போவசொல்லோ வாத்யாரு எதுனா சொன்னாக்கா அவுரு அந்தப்பக்கமா திர்ம்பசொல்லோ பிகிலடிப்போம். குப்ஸாமிக்கு பள்ளிக்கொட நெனப்பு இன்னும் மாறல. அத்தான் இங்கயும் ஒரு பிகிலு........... மன்ச்சிக்கோ வாத்யாரே....

1. சொந்தமாக ஒரு வலைப்பதிவு வைத்துக்கொள்ளுவது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக மட்டுமே. நமது மனத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த உபாயம். அவ்வளவே. மற்றபடி ஒண்ணரை மாசம் எழுதிவிட்டு, நாலுபேர் படிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே மனத்துக்குள் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா ரேஞ்சில் உருவகப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லது. எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

இன்னா தலீவா. மன்ஸூக்குள்ளே தானே நென்ச்சிக்கிறாங்கோ, அத்தால ஆருக்கு இன்னா நஸ்டம் வந்துடும். சுசாதா சுரா ரேஞ்சிலே நென்ச்சி எய்துனா அவுங்க எய்துனதுல ஒரு பாயிண்டு ரேஞ்சிக்காவது எதுனா கிறுக்கலாம்ன்னு நென்ச்சிருப்பாங்கோ. இதுக்கெல்லாம் ஃபீலாவாதிங்கோ.

2. முழ நீளக் கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (பெண்கள், ஆண்களில்லாத ஊரில்.) அப்படியே கவிதையை இட்டுத்தான் ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள் முதலில் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு வலையேற்றுவது நலன் பயக்கும். யாஹு குழுமங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் வாசிக்கக் கிடைக்கிற கவிதைகள் நாராசமாக இருப்பது ஏன் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பீட்டாய்வு செய்து பார்த்துக்கொள்ளுவது அவர்களுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு நல்லது.

அல்லாரும் பொற்கசொல்லவே கவுத எய்த பட்ச்சிறாங்களா இன்னா. பத்திரிகைக்கு அனுப்புனா போட மாட்றாங்கோ. குளுவுல எய்துனா யாரும் கண்டுக்க மாட்றாங்கோன்னு தானே தனக்குன்னு ஒரு எடத்த புடிச்சி போட்டு அதுல எய்திக்கிறாங்கோ. புட்ச்சா பட்ச்சு ரஸிக்கலாம், இல்லாங்காட்டி வுடு ஜூட்ன்னு போய்கினே இர்க்கோணும். சரி வாத்யாரே, கவுத தான் பக்கம் பக்கமா வுடக்கூடாது, நாலு பக்க கதிய ஆர்னா பதிவுல போட்டு வெக்கிறாங்களே அவங்களுக்கு ஒண்ணும் சொல்லலியா. வெண்பாம் எய்துறவங்கோ இன்னா பண்ணலாம் தலீவா, அத்தையும் சொல்லிப்போடுங்கோ....

3. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தது பற்றியும் பன்னிரெண்டரையாவது பதிவை வெளியிட்டது பற்றியும் வலைப்பதிவுகளின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்துமே அடிக்கடி எழுதி போரடிக்காதீர்கள். நீங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து உங்களிடமிருந்து ஏராளம் பெறுவதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் வைக்கவும்.

எதுனா உருப்படியா எய்தணும்ன்னு நெனிக்கிற ஆளுங்கோ உண்டு. என்னிய மேரி எதுனா கிறுக்கணும்ன்னே வர்ற ஆளுங்களும் உண்டு. பதிவுங்கற்தே "வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" மேட்டரு தானே. குளுவிலே செல மேட்டரு எய்த முடியாம கீறதால நெறிய பேரு பதிவு பாக்க வந்துட்டாங்க. அங்கேயும் இன்னது தான் எய்தணும்ன்னு ரூல்ஸு போட முடியுமா இன்னா??

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வலைப்பதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது. நாம் வலைப்பதியவில்லை என்பதற்காக ஒருத்தர் கூட ஒரு வேளை சோறைப் புறக்கணிக்கப்போவதில்லை. அப்படியிருக்க, இரண்டு மூன்று நாள் சோம்பலில் எழுதாமல் இருந்துவிட்டு, மீண்டும் எழுதும்போது எழுதாத தினங்கள் பற்றிய லெக்சரைத் தவிர்க்கவும்.

ஹீஹீஹீ, அக்ரீட். அல்லாரும் இத்தெ கேட்டுக்கோங்கபா. ஆனா வாத்யாரே, எய்தாமக்கீற நாளுல இன்னாத செஞ்சோம்ன்னு கொரலு வுடுறதா நென்ச்சிக்கோங்களேன்

5. சக வலைப்பதிவாளர்கள் நமது பதிவைப் படிக்கிறார்களா என்று அறிவதற்காகவே சம்பந்தமில்லாத மேட்டர்களுக்கு அவர்கள் பதிவில் போய் டிராக் பேக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதேபோல் உங்கள் பதிவுக்கு யாராவது ஒருவர் அவரது பதிவில் லிங்க் கொடுத்ததற்காக ஒரு பக்கம் செலவழித்து நன்றியறிவிப்புப் பொதுக்கூட்டம் நடத்தாதீர்கள்.

பாரா மேரி ஒரு பெர்ய எய்த்தாளரு அவரோட பதிவுல குப்ஸாமி மேரி குண்ஸு பார்ட்டியோட லின்க் குட்த்துக்கீறாருன்னு வெய்ங்கோ, குப்ஸாமிக்கு ஒரு டாஸ்மாக்க ஜோடா கலக்காம அட்ச்ச மேரி இர்க்கும். ஒடனே இன்னா பண்ணுவான் "தலீவா நெம்ப டாங்ஸு தலீவா"ன்னு கொரலு வுடுவான். இத்தெல்லாம் மிஷ்டேக்கா எடுக்காத வாத்யாரே....

6. பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லி போரடிக்காதீர்கள். அடுத்தவரின் பின்னூட்டப் பெட்டிகளை மூத்திரச் சந்துகளாகக் கருதி அங்கே பத்துப் பத்து வரிகளில் சாராயச் சண்டை போடாதீர்கள். அப்படியே சண்டை போட்டே தீருவேன் என்பீர்களானால் யுனிகோடில் மட்டும் போடுங்கள். உங்கள் சோம்பலால் திஸ்கியில் சண்டை போட்டு அடுத்தவரை அவதிக்கு உள்ளாக்காதீர்.

பதிவுக்கு போனோமா மேட்டர பட்சோமான்னு வந்துரலாம் வாத்யாரே. ஆரு இன்னா சொன்னா நம்க்கு இன்னான்னு வந்துகினே இர்ந்தா சொல்றவன் திஸ்கில சொன்னா இன்னா உனிகோடுல சொன்னா இன்னா... இன்னா நாஞ்சொல்றது...

7. பிரபலங்களைத் தாக்குவதற்கும் பொத்தாம்பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தாதீர். வலைப்பதிவுகளுக்கு வருவோர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளரின் எழுத்துகளைப் படிக்க மட்டுமே அங்கே வருகிறார்கள். வாசிக்கும்போது ஒவ்வொருவரும் அவருடன் அந்தரங்கமாகப் பேசுவதாக, புரிந்துகொள்வதாக உணருகிறார்கள். இந்த அந்தரங்கத் தன்மையை உங்களது 138வது வட்டப் பொதுக்கூட்ட மைக் வீச்சுப் பேச்சாலும் எழுத்தாலும் அழித்து ஒழிக்காதீர்கள்.

"வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" பாலிஸி தான் இதுக்கும்.

8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையத்தளங்களிலிருந்தும் ரீடிஃப், எண்டிடிவி, சிஎன்னென் போன்ற செய்தித் தளங்களிலிருந்தும் செய்திகளை வெட்டி ஒட்டி பஜனை பண்ணாதீர்கள். எழுத விஷயமில்லை என்றால் எழுதாமலிருப்பது உத்தமம்.

நாலு எட்த்துக்கும் போயி படிக்க வசதி இல்லாதவங்கோ இங்க வந்து நூஸ் பாத்துக்கலாம்ன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருப்பாங்கோ. வுட்டுத்தள்ளுங்கோ.

9. வெப் கவுண்ட் என்பது மிகப்பெரிய மாயை மற்றும் மோசடி. அந்த எண்ணிக்கையைப் பார்த்துப் பார்த்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். திரும்பத்திரும்ப ஐம்பது பேர்தான் சின்சியராக வலைப்பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் இருத்தவும்.

வாத்யாரே, டெக்னிகல் மேட்டர்ல வுள்ள போறிங்களே. வெப் கவுண்ட மாயை ஆக்குறதும் ஆக்காததும் அத்த போடுறவன் கைல தான் கீது. எதுனா பெர்ய எணைய பத்திரிகைல "நைனா இங்க பாருபா நா முண்ணூத்தி முப்பத்தோறாவது கோடிய தொட்டுட்டேன்"னு சீன் போடுறதுக்கு வூஸ் பண்ற கவுண்ட்டு வேற. நம்ம பதிவுல எத்தன பேரு வராங்கோ, இதுல ஆராரு புச்சா வராங்கோன்னு தெர்ஞ்சிக்க தான் பதிவுல கவுண்ட்டு போட்டு வெச்சிக்கறதே. அத்த நென்ச்சில்லாம் ஃபீலாவாதிங்கோ.

Wednesday, June 02, 2004

கேள்வி கேக்குறவன் கேனையன்

கேள்வி கேக்குறவனையும் குந்திக்கின்னு பாக்குறவனையும் கேனையனா ஆக்குற டிவி நிகள்ச்சி எது தெர்யுமாபா. லைவ்வா காட்டுறேன்னு சொல்லிக்கின்னு ஆர்னா ஒரு பெர்ய மன்ஸாள கூட்டியாந்து ஒக்கார வெச்சி கேள்வி கேக்குறாங்கோ பாருங்கோ அத்தான் அந்த நிகள்ச்சி.

நம்ம பொதிக டிவி கீதே, அதுல ராத்திரி ஆனாக்கா யார்ன்னா சினிமாக்காரங்களையோ இல்ல வேற ஆரையாவது கூட்டியாந்து கேள்வி கேப்பாங்கோ. நேத்தி நைட்டும் அப்டி ஒரு பெர்ய மன்ஸன கூட்டியாந்தாங்கோ. ஐயா மெய்யாலுமே பெர்ய ஆளு தான். மொனைவரு கொய்ந்தசாமி அய்யா. அய்யா அண்ணா பல்கலைக்களகத்துல இர்ந்தவரு, இப்போ எணைய தமில் பல்கலைக்கழகத்த நட்த்திக்கின்னு வர்றவரு.

முன்னால குந்திக்கின்னு இர்ந்து கேள்வி கேட்டவரும் சொம்மா இல்ல, அவரும் எதோ பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சவராம். இந்த மேரி லைவ்வா காட்ட சொல்லோ முன்னால குந்தி இர்க்குறவங்கோ டெலிபோன்ல ஆர்ன்னா கேள்வி கேக்கசொல்லோ வந்துக்கீற பெர்ய மன்ஸனுக்கு புர்யாங்காட்டி எட்த்து சொல்லோணும். ஆனா முன்னால குந்திக்கின்னு இர்ந்த ஆளு அத்த ஒய்ங்காவே செய்யல.

ஒரு ஆளு "கணினில தமிளு தான் சுலுவா கொண்டு வர்ற மேரிக்கீதுன்னு சொல்றாங்களே, அத்த பத்தி கொஞ்சம் வெளக்குங்கோ"ன்னு கேக்குறாரு. ஒடனே நம்மாளு கேள்விய ஒளுங்கா வெளங்கிக்காம அய்யாகிட்டே வேற என்னமோ மாத்தி எட்த்து சொன்னாரு. சரி அத்த வுட்டுத்தள்ளுன்னு வுட்டாச்சு. மறுக்கா ஒர்த்தரு "ஐயா, நா சொவடில்லாம் ஆராய்ச்சி பண்றவனுங்கோ. எனுக்கு அத்த பத்தி செல பொஸ்தகமெல்லாம் தேவப்பட்து. இண்டர்நெட்டுல போயி தேடுனாலும் ஒய்ங்கே கெடிக்க மாட்டேங்குது. அதுக்கு எதுனா சொல்லுங்கய்யா"ன்னு கேட்டாரு. முன்னால குந்திக்கீறவரு "அதுல்லாம் மேட்டரே இல்லபா, நீயே ஒரு மென்பொருள எய்திடு"ன்னு சொல்லி லைன கட் பண்ணிட்டாரு.

கேள்வி கேக்குறவன் இன்னா கேக்குறான்னு பிர்யாம நீயா பதில் சொல்லி லைன கட் பண்ண இன்னாத்துக்குபா நீயி குந்திக்கின்னு கீற. கேள்வி கேட்டவன் எம்மா முக்கியமா கேக்குறான். அதுவும் அய்யா எணைய தமிளு பல்கலைக்களகமெல்லாம் வெச்சிக்கீறாரே, அவுருக்கு எதுனா தெர்யும்னு தானே கேக்குறான். கேள்வி கேக்குறவனுக்கு சம்மந்தமே இல்லாம நீயா ஒரு பதில சொன்னா இன்னாபா மீனிங்கு.

இத்த பாக்கசொல்லோ "கேள்வி கேக்குறவன் தான் கேனையன்"னு நென்ச்சிக்க வேண்டியதா கீது. டிவி பொட்டில எதுனா இத்த மேரி நிகள்ச்சி பண்றவங்கோ எதுனா சினிமா நடிகய கொண்டாங்கபா, அவுங்க கிட்டே எதுனா மக்கள பேச வுட்டுடுங்கோ. அத்த வுட்டுப்போட்டு ஆர்னா பெர்ய மன்ஸன கொண்டாந்து அப்பாலிக்கா அவங்களாண்ட கேள்வியும் கேக்க வுடாம பண்ணாதிங்கோ......