Friday, March 19, 2004

ஆப்புக்கே ஆப்பு

வா மாமே ஆப்பு, உன்னிய இத்தன நாளு கண்டுக்காமலே பூட்டேன்பா. சோக்கா தான் வலப்பதிவு பண்ணிக்கீற. நம்ம மர்த்தடி பத்தி கூட குண்ஸா எய்திக்கீறியே மச்சி.

மாமே, எனிக்கொரு கொளுக வுண்டு மாமே. கலாய்க்கிறதா இர்ந்தாலும் தில்லா நேரா கலாய்ப்பேன். நீ சோக்கா கலாய்க்கிற, ஆனா மொகமூடி போட்டுக்கின்னு கலாய்க்கிற. மன்ஸன்னா தில்லு வோணும்பா. சொல்ற மேட்டர, "இத்தோ பார்றா சொல்றவன் நா தான்"னு நேர்ல நிண்ணு சொல்ற தில்லு வோணும். அது இல்லாங்காட்டி பேடின்னு ஒலகம் சொல்லும். பேடின்னா இன்னா மீனிங்குன்னு நா சொல்லி ஒனக்கு தெர்யணும்ன்னு அவசியம் இல்ல, நீ அல்லாம் தெர்ஞ்ச பெருமாளு.

அடுத்த தபா ஆப்பு வெக்கிறதா இர்ந்தா (அத்தானே ஒண்ணோட பொயப்பே) தில்லா மொகமூடி களட்டிப் போட்டுட்டு வெய்யி மாமே, நானும் ஒனக்கு சலாம் போடுவேன்.

வர்ட்டா.....

கொஸப்பேட்ட குப்ஸாமி

No comments: