Monday, October 18, 2004

வீரப்பன படம் புட்ச்ச தினமலரு

ஒரு வழியா செத்த பாம்ப அட்ச்ச கணுக்கா வீரப்பன கொன்னுட்டாங்க, இல்லாங்காட்டி தற்கொல பண்ணிக்கின்னாரு (ரெண்டுல எது நடந்துச்சுன்னு அந்தாளே வந்து சொன்னான்னா தான் தெர்யும்). இனிமே அம்மா கச்சியும் தாத்தா கச்சியும் அவுங்கவுங்க சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு வீரப்பன புடிக்க இன்னா செஞ்சோம்ன்னு லிஸ்ட்டு போடுவாங்கோ. கோபாலண்ணே லைட்டா ஒரு சொட்டு கண்ணீரு வுடுவாரு. நம்ம மரவெட்டி ஐயா "நம்மாளு ஒர்த்தன் பூட்டானேன்னு அளறதா, மத்த கச்சிக்காரங்கோ கூட சேர்ந்து கொரலு வுடுறதா"ன்னு தெர்யாம முளிச்சிக்கின்னு இர்ப்பாரு. இதெல்லாம் சோக்கா நடுக்கும்.

இன்னிக்கு தினமலரு பத்திரிகை "நா தான் மொதல்ல படம் போட்டவன்"னு டமாரம் அட்ச்சிக்கின்னு சின்ன மீச வீரப்பன படம் புட்ச்சி போட்டுக்கீது. கூடவே கடலூர்ல பட்ச்சிக்கின்னு கீற வீரப்பனோட பொண்ணையும் படம் புட்ச்சி போட்டுக்கீது. அத்த பாக்க சொல்லோ தான் மன்ஸு படா ஃபீலாவுது. இன்னா மன்ஸங்கையா நீங்க. தப்பு செஞ்சவன் அவன், அவன் தான் மண்டைய போட்டுட்டான். இந்த சின்னபுள்ள இன்னா பாவம் பண்ச்சு. பன்னெண்டு வய்ஸு கொளந்தப்பா அது. அத்த படம் புட்ச்சி போட்டு அதோட வாள்க்கைய கெடுக்குறிங்களே இத்து நாயமா? இம்மா நாளு அது ஆரோட புள்ளன்னு கூட தெர்யாம வாள்ந்துக்கின்னு இர்க்கும். இப்போ வூரு ஒலகம் முய்க்க தம்பட்டம் அட்ச்சிப்புட்டிங்கோ. இனி அந்தக் கொளந்தைய பாத்து அல்லாரும் கலாய்க்கிறதும் திட்டுறதும் சாபம் வுடுறதுமா இர்ப்பாங்கோ. அந்தப் பிஞ்சு மன்ஸு இன்னாமா ஃபீலாவும். இத்தெல்லாம் ஆரும் ரோசன பண்றதே கெடியாது. வீரப்பன படம் புட்ச்சி போடு, அவன் கூட சேந்து ஆட்டம் போட்டவன எல்லாம் படம் புட்ச்சிப் போடு, இந்தப் புள்ளைய படம் புட்ச்சிப் போட்டு ஏன்யா அதுங்க வாள்க்கைய கெடுக்குறிங்கோ...

Saturday, October 16, 2004

கடிக்குமா காட்டாமணக்கு?

முன்னே ஒருக்கா நம்ம அம்மா "அல்லாரும் மாற்றுப்பயிர் வூஸ் பண்ணுங்கோ, தண்ணி கொறவா இர்ந்தாலும் இத்த செய்யலாம்"ன்னு கொரலு குட்த்தாங்கோ. அத்த பாத்து குப்ஸாமி கூட குஸியா கொரலு வுட்டான். அப்பாலிக்கா அதுலேயும் பாலிடிக்ஸு பண்ண ஆரம்பிச்சாங்கோ. வெவசாயிக்கு நல்லது செய்யலைன்னாலும் பர்வாயில்லே, அத்த போட்டாக்கா இந்தப் பெர்ச்சன வரும் அந்தப் பெர்ச்சன வரும்ன்னு நூஸ் குட்க்க ஆரம்பிச்சாங்கோ செல ஆளுங்கோ.

இப்போ ஸூனியர் வெகடன்ல நம்ம வெவசாய மினிஷ்டரு "அத்தெல்லாம் ஒரு பெர்ச்சனையும் வராது"ன்னு சொல்லி அதுக்கு வெளக்கமெல்லாம் குட்த்துக்கீறாரு. வெளக்கமெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா ஒரு மேட்டரு இடிக்கிது. காட்டாமணக்கு ஆறு வர்ஸம் களிச்சு தான் பைசா குடுக்குமாம். அதுவரைக்கு வளத்துக்கின்னு வரணுமாம். அம்மா கவுருமெண்ட்டு வெவசாயிங்கோ கைலேந்து காட்டாமணக்கு வாங்க தனியார் ஆளுங்கள ரெடி பண்ணிக்கின்னு கீதாம். சரி ரெடி பண்ணிடுறாங்கன்னே வெச்சிக்குவோம். அப்பாலிக்கா இன்னா நடுக்கும்? இன்னும் ஒரு வர்ஸம் களிச்சு எலிக்ஸன் வரும். அப்போ அம்மா கெலிக்காம தாத்தா கெலிச்சா இன்னா நடுக்கும்? அம்மா காட்டாமணக்கு வாங்குவாங்கோன்னு வெவசாயிங்க கைல காட்டிவுட்ட தனியாரு ஆளுங்கள தாத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாரு. அப்பாலிக்கா காட்டாமணக்கு போட்ட வெவசாயிங்கோ கன்னத்துல கை வெச்சிக்கின்னு தாத்தா ஆரைன்னா புச்சா கைய காட்டுவாரான்னு குந்திக்கின்னு இர்க்கோணும். வெளய வெச்ச காட்டாமணக்கு ஒன்னித்துக்கும் ஒதவாம பூடும்.

"வூருக்கு எளச்சவன் புள்ளையாரு கோயில் ஆண்டி"ன்னு ஒரு டயலாக்கு கீது, இனிமே அத்த மாத்தி "வூருக்கு எளச்சவன் எங்கூரு வெவசாயி"ன்னு மாத்திடலாம்.

Wednesday, October 13, 2004

கிரிக்கெட் எம்சியாரு

வர வர நம்மூரு இஸ்டண்ட்டு அர்சியல்வாதிங்கள விட ஆஸ்திரேலியா கிரிக்கெட்டு டீமு சொம்மா சோக்கா படம் காட்டுறாங்கோபா. நம்மூரு ஆளுங்களும் கெலிக்கிற கச்சி தான் என் கச்சின்னு ஆஸ்திரேலியா டீமூக்கு சூடம் காட்டுறாங்கோ. பாண்டிங்கு கட்ட வெரல ஒட்சிக்கின்னு போனாலும் போனாரு கில்கிரிஸ்ட்டு சொம்மா கலாசிக்கின்னு கீறாரு. நம்மூரு கிரிக்கெட்டு டீமுக்கு பத்திரிகைல நூஸ் குட்க்கிறாங்களோ இல்லியோ ஆஸ்திரேலியா டீமு நூஸ் சுகுரா வர்து.

கில்கிரிஸ்ட்டு இப்போ எம்சியாண்ட கணுக்கா ஆகிப்புட்டாரு. கொய்ந்த புள்ளிங்கோ கூட போட்டோ எட்த்துக்கிறது இன்னா, ரோட்டுக்கடையிலே ஆப்பம் பாயா வாங்கி துன்றது இன்னா, செம்ம கலக்கல் தான். நம்ம குப்பத்து சனங்களும் "மவராசன் எம்சியாண்ட செவப்பால்ல இருக்கான்"ன்னு ஃபீலாகிக்கீறாங்கோ. அட்த்த தபா வரசொல்லோ கில்கிரிஸ்ட்டும் அவரோட ஆளுங்களும் நம்ம குப்பத்து பாசைய கத்துக்கின்னு வந்து "இன்னபா எப்டிக்கீறே. நாஸ்தா துன்னியா"ன்னு கேக்கப்போறாங்கோ.

Tuesday, October 05, 2004

அம்மா கொரலு

அடடா வூரு ஒலகமெல்லாம் "அம்மா" இங்கிலிபீஸுல கொரலு வுட்டுக்கீறாராங்கோன்னு பேசிக்கின்னு கீதே குப்ஸாமிக்கு அத்த பாக்குற கொறாம கெடிக்கிலியேன்னு ஃபீலாகி இர்ந்தேன்பா. நம்ம பிபிசி ரொம்ப நல்ல மன்ஸங்கோ, எட்த்த பேட்டிய அப்டியே படமா அவங்க தளத்துலே குட்த்துக்கீறாங்கோ. பாக்கசொல்லோ படா சோக்காக்கீது மேட்டரு. அம்மா கையிலே இர்ந்த பேப்பருங்கள கரண் தப்பார் மேல தூக்கி அடிக்காத கொற தான். அம்புட்டு ஜூடா கொரலு வுடுறாங்கோ.

செல மேட்டருல்லாம் இன்னா பேசணும்ன்னு முன்னாடியே ரோசன பண்ணிக்கின்னு வந்துருப்பாங்கோ போலக்கீது. சம்மந்தமே இல்லாம அஜீத்தும் விஜயும் பயாஸ்கோப்புல டயலாக்கு வுடுற கணுக்கா செல டயலாக்கு வுட ஆரம்பிச்சிட்டாங்கோ. நா தானா வளந்த மரம், நா காலையிலே நாலு மணிக்கு எய்ந்து பல்லு வெளக்கி குள்ச்சி ஜோலிய இஸ்டார்ட்டு பண்ணுனா நைட்டு கட்டைய நீட்டுற வர ஜோலிய தான் பாக்குறேன் அது இதுன்னு செம்ம டயலாக்கு. இத்த மேரி டயலாக்கு வுட்டே செல எடத்துல அம்மா கரண் அண்ணாத்தே கையிலே மாட்டிக்கின்னாங்கோ. "நீ ஏன் அத்த செய்தே"ன்னு கேட்டா கொய்ந்த புள்ள கணுக்கா "அவுரு செய்யலியா, இவுரு செய்யலியா. அவராண்ட போயி கேக்க வேண்டியது தானே"ன்னு எதிர்கொரலு வுடுறாங்க. பேப்பர பாத்து ஏன் படிக்கிறிங்கோன்னு கேட்டா சூடாவுறாங்கோ.

இங்கிலிபீஸு டிவிபொட்டில இஸ்பீச்சு குட்த்து "தமிள்நாட்டுல ஒய்ங்கா இங்கிலிபீஸ்ல கொரலு வுட தெர்ஞ்ச நா ஒருத்தி தான். வோணும்ன்னா தாத்தாவ அப்டி எதுனா பேச சொல்லுங்கோ பாக்கலாம்"ன்னு எலிக்ஸம் டைமுல சீன் போட்றதுக்காக கொரலு குட்க்க தலய ஆட்டிருப்பாங்கோ போலக்கீது. ஆனா அத்தே அவுங்களுக்கு ஆப்பு அட்ச்சி போச்சி. அத்தால கடேசில "ஒண்ணோட பேசுனதே வேஸ்ட்டு நைனா"ன்னு கொரலு வுட்டுட்டு போய்ட்டாங்கோ. யம்மோவ் இந்த மேட்டர லூஸ்ல வுடுங்கோ, நம்ம அப்பாலிக்கா சிஎன்என்ஐ கூட்டியாந்து நாமளே கேள்ளி கேக்குறவனுக்கு கேள்விய குட்த்து எய்தி வெச்சிக்கின்னு வந்த பேப்பர பட்ச்சி பளிக்கு பளி வாங்கிபுடலாம். அப்பாலிக்கா "பிபிசி இப்போ தயாநிதி மாறன் கைல கீது, அத்தால தான் அப்டி என்னிய பளி வாங்கிப்புட்டாங்கோ. நா ஒரு பொம்பளன்னு என்னிய இப்டி எல்லாம் பண்றாங்கோ"ன்னு மூக்கு சிந்தி அட்த்த சிஎம்மு ஆகிப்புடலாம்.

அம்மாவோட கொரலு வீடியோ: http://www.bbc.co.uk/tamil/jaya_thapar.ram
அம்மாவோட கொரலு ஆடியோ: http://www.bbc.co.uk/tamil/jayaaudio.ram
அம்மா கொரலு இங்கிலிபீஸுல படிக்க: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml

அம்மா கொரலு பத்தின சுரேஸு அண்ணாத்தே கருத்து: http://groups.yahoo.com/group/Maraththadi/message/20524