Friday, April 29, 2005

கோரம்(Quorum) இல்லாத கோரம்

நம்மூருல வெள்ளிக்கெளம அத்தால இஸ்கூலு போவாணாம்ன்னு இஸ்கூலு புள்ளிங்கோ இஸ்கூலுக்கு கல்தா குட்க்க முடியாது. ஆபீஸுல சோலிப் பாக்குற பெர்ய மன்ஸங்கோ எதுனா ரீஜன் சொல்லி லீவு போட முடியாது. ஆனாக்க நம்ம மக்களு ஓட்டுக் குத்தி எலிக்ஸன்ல கெலிச்சி போய் வர டிரெய்னு டிக்கெட்டுலேந்து போட்டுக்குற சொக்க வெரிக்கும் அல்லாத்தையும் கவுருமெண்டு துட்டுல சோக்கு காட்டிக்கின்னு டில்லில குந்திக்கின்னு கீறாங்களே நம்ம எம்பிங்கோ, அவுங்க வெள்ளிக்கெளம அன்னிக்கு பார்லிமெண்டு கூட்டுனா வர மாட்டாங்கோ.

பிஜெபி "நா ஆட்டைக்கு வரல"ன்னு முறுக்கிக்கினு போயி மூலைல குந்திக்கினாங்கோ. காங்கிரஸு கூட்டணில மொத்தமே 36 எம்பிங்க தா வந்தாங்களாம். மத்தவங்க அல்லாம் வெள்ளிக்கெளம நமாஸ் போவணும்ன்னு செலரு, அட்த்த ரெண்டு நாளு லீவுபா அத்தால ரூம்ல சொம்மா சோக்குக் காட்டிக்கினுகீறேன்னு சொல்லிக்கீறாங்கோ. இந்தி பயாஸ்கோப்புல மஞ்ச சட்டையும் பச்சப் பேண்ட்டும் போட்டுக்கினு ஜிகினா டாண்ஸு ஆடுவாரே கோவிந்தான்னு ஒர்த்தரு, அவ்ருக்கு அவரோட படம் ஒண்ணு புச்சா வெளில வர்த்தாம், அத்து இன்னாவுமோ ஏதாவுமோன்னு படா ஃபீலிங்குல கீறாராம், அத்தால வர்லியாம்.

ஒங்கள அல்லாம் சொல்லி மிஷ்டேக்கு கெடியாது, ஒட்டுக் குத்தி கொண்டு போயி ஒக்கார வெச்சோம்ல, எங்கள சொல்லணும்.

Thursday, April 07, 2005

அம்மா Vs பேரன்

முன்னே ஒருக்கா (அம்)மாமமன்றம் கூட்டம் போட்டப்போ ஆரு ஃபோர்டு கொண்டு வந்தாங்கோ, ஆரு ஹுண்டாய் கொண்டுவந்தாங்கோன்னு தாத்தா ஆளுங்களும் அம்மா ஆளுங்களும் அட்ச்சிக்கினாங்கோ. ஹுண்டாய் கம்பெனிக்கு புல்லு வெட்டுனது நானுன்னு ஒருத்தரும் கள புடுங்குனது நானுன்னு ஒருத்தருமா அட்ச்சிக்கினது பாக்க சோக்கா இர்ந்துச்சு. இப்போ அட்த்த அடிதடி ஆரம்பிக்கப் போவுது. இது நோக்கியா மேட்டரு.

நோக்கியா கம்பெனி நம்ம சென்னப்பட்டனத்துல கம்பெனி இஸ்டார்டு பண்ணப் போறாங்களாம். அது அவங்களோட பத்தாவது பிராஞ்சாம். அது பத்தி பேசுறப்போ தாத்தாவோட இந்தி ஷ்பீக்கிங் பேராண்டி மாறரு "தன்னால தான் இந்தக் கம்பெனி நம்மூருக்கு வந்துக்கீது"ன்னு கொரலுவுட்டாரு. "இது மாத்ரம் இல்லபா, இன்னும் நெறியா கம்பெனி என்னாண்ட சிக்னலு குட்த்துக்கீறாங்கோ"ன்னு எக்ஸ்ட்ரா கொரலு வேற வுட்டாரு.

இத்த பாக்கசொல்லோ அம்மா மட்டும் சொம்மா இர்ப்பாங்களா. இன்னிக்கு (அம்)மாமன்றத்துல "தோ பாரு நைனா, நோக்கியா கம்பெனி சென்னைக்கு வர்றதுக்கு ரீஜனு நான் தான்பா"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. அதுவும் சொம்மா கொரலு கெடியாது, ரூல் 110 கீழே வுட்ட கொரலு அது. அந்த ரூலுல அம்மா கொரலு வுட்டா "முட்டாயி குடுக்கல, பிஸ்கோத்து குடுக்கல"ன்னுல்லாம் கோச்சிகினு வூடால கொரலு வுடுற தாத்தா கச்சி ஆளுங்கோ ஆரும் எதிர்கொரலு வுட முடியாது. இப்போல்லாம் அம்மா பேசுனாலே அது ரூலு 110ல தான் பேசுறாங்கோ. அது மரக்கெளைய ஒட்ச்ச நூஸா இர்ந்தாலும் சரி, கம்பெனி இஷ்டார்ட்டு பண்ற மேட்டரா இர்ந்தாலும் சரி.

நம்மூருல பொட்டி தட்டுறவங்கோ நெறியா கீற வூரு மூணு. பெண்களூரு, ஐதராபாத்து, அட்த்து நம்ம சென்னை. இந்த மூணுல கப்பலு, பிளைட்டு, ரோடு ரூட்டு மூணுமா கீற எடம் நம்மூரு தான். கம்பெனி தொறக்க வர்றவங்கோ இத்தெல்லாம் கீதான்னு தான் பாப்பாங்கோ, அம்மா கொரலு வுட்டதால கொண்டாந்தோமா, பேராண்டி கொரலு வுட்டதால கொண்டாந்தோமான்னு ரோசன பண்ண மாட்டாங்கோ. அத்தால ரெண்டு பேரும் இன்னா வேணா கொரலு வுட்டுக்கோங்கோ, ஆரும் கண்டுக்க மாட்டோம். ஆனா கடேசில வாய்க்கும் கைக்கும் சண்ட வந்தது மேரி ஆகி அப்பாலிக்கா இந்த வூரு வாணாம்பான்னு நோக்கியா கம்பெனி பொட்டிய கட்டிக்கின்னு கெளம்பாம இருக்கணும்.

பிட் நோட்டீஸ்: இந்த மேரி பேராண்டி பேசுனதுமே அட்த்து அம்மாவும் கொரலு வுடுவாங்கோ, நீ எதுனா சொல்லுபான்னு நம்ம காதுல வந்து ஓதுன கொல்கத்தா பிரின்ஸு செந்திலுக்கு டாங்க்ஸுபா

Tuesday, April 05, 2005

ஐஸ்பாய் Vs அம்மா

நம்ம ஐஸ்பாய் விவேக்கு எதுனா நல்லது பண்ணி அட்த்த சிஎம்மா வந்துடுவாருன்னு அம்மாவுக்கு பயம் வந்துட்ச்சு போலக்கீது. சுனாமில அடிப்பட்ட மக்களுக்கு வூடு கட்டித் தர விவேக்கு அம்மா கைல எடம் கேக்க, அம்மா "அத்தெல்லாம் முடியாது போபா"ன்னு அட்ச்சி தொர்த்திட்டாங்கோ. மன்ஸன் ஃபீலானானும் வெளில காட்டிக்காம ரீஜண்ட்டா "எடம் கெடிக்கல, அத்தால நா பாண்டிசேரி பக்கமா ஒதுங்கிக்கிறேன்"ன்னு கொரலு வுட்டுட்டுப் பூட்டாரு.

இந்த மேட்டர நம்ம (அம்)மாமன்றத்துல எதிர்கச்சி கொய்ந்திங்கோ கேட்டு வெக்க, அம்மா கபால்ன்னு எய்ந்து (ஆர கேள்வி கேட்டாலும் அம்மா தான் ரிப்ளை வுடுவாங்கோ, அம்மாவையே கேக்குறப்போ வேற ஆரு சொல்லுவா!!!) "தோடா, துக்கடா பையன். இன்னா செஞ்சுட்டான்னு இம்மா ஃபீலாவுற நீயி. அந்தப் பையன் ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடல. கவுருமெண்ட்டு செஞ்சதுல பத்து பர்ஸெண்ட்டு கூட செய்யல. இத்த போயி பெர்ஸா பேச வண்ட்டியா நீயி"ன்னு கேக்குறாங்கோ.

சோக்கா கீதும்மே உன்னோட பேச்சு. (அம்)மாமன்றத்துல பேச எய்தி குடுக்குற கவிஞரு, தாடிக்கார தோஸ்த்து எய்துன கொறள பத்தி அம்மா கைல சொல்லாம வுட்டுட்டாரு போலக்கீது. அத்தால அத குப்ஸாமி இப்போ அம்மாவுக்கு எட்த்து குடுக்குறான்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது