Saturday, September 25, 2004

ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே...

ஆட்டோகிராப்பு போட்ட சேரன் மட்டும் தான் பட்ச்ச பளைய இஸ்கூலு, பிரண்ட்ஸுங்கோன்னு பாத்து "ஞாபகம் வர்தே ஞாபகம் வர்தே"ன்னு பாடணுமா. இப்போங்காட்டி நம்ம மன்மோகன் ஐயா கைல "ஒங்க மன்ஸுல இன்னா பாட்டு நைனா ஓடிக்கின்னு கீது"ன்னு கேட்டாக்கா அவுரு மன்ஸுக்குள்ள இத்தே பாட்ட தான் பாடிக்கின்னு இர்ப்பாரு.

பாகிஸ்தானு முசரப்பு ஐயா பாக்க தான் மொரட்டுத்தனமா இர்ப்பாரு போலக்கீது, மன்ஸு சொம்மா கொய்ந்த மன்ஸுபா. அக்காங், இன்னா மேட்டர்ன்னு கேக்குறிங்களா! நம்ம பெரதமரும், முசரப்பு ஐயாவும் அமேரிக்காவுல போயி கை குலுக்கிக்கசொல்லோ முசரப்பு ஒரு போட்டோவ கைல குட்த்துக்கீறாரு. போட்டோவ பாத்த மன்மோகன் ஐயா படா ஃபீலிங்ஸு ஆகிப்புட்டாரு. பின்னா இன்னான்றிங்கோ நாளிக்கு எய்வத்திரெண்டு வயசாவப போற நம்ம பெரதமரு கொய்ந்த புள்ளியா இர்க்கசொல்லோ பட்ச்ச இஸ்கூலு போட்டோவல்ல முசரப்பு குட்த்தாரு. அத்த பாத்து பெரதமரு பீலிங்ஸு ஆவலைன்னா தான் பெர்ய விசியம்.

இப்டி கலக்குனது பத்தாதுன்னு கட்டம் கட்டி கலக்க ஆரம்பிச்சிட்டாரு முசரப்பு. போட்டோ குட்த்த கையோட "இந்தாபா நீயி அந்த இஸ்கூலுல பட்ச்சப்போ எட்த்த மார்க்கு"ன்னு சொல்லி மார்க்கு லிஸ்ட்ட கைல குட்த்துட்டாரு. அமேரிக்கா போயி இப்டி ஆட்டோகிராப்பு ஃபீலிங்ஸு வரும்ன்னு நம்ம பெரதமரு நென்ச்சே பாத்துருக்க மாட்டாரு. முசரப்பு நீயி கில்லாடி நைனா....

கொசுறு: நாளைக்கு இஸ்கூலு சர்ட்டிபிகெட்டு கணுக்குப்படி பொறந்தநாளு கொண்டாடப்போற பெரதமரு ஐயாவுக்கு குப்ஸாமி கைலேந்து பொறந்தநாளு வாய்த்துகள்.

Tuesday, September 21, 2004

கலாசாரம்

நம்மாளுங்கோ கலாசாரம் பத்தில்லாம் பேசிக்கின்னு கீறாங்கோ. ஜந்தோஜம் தான். கூடவே இந்தக் கலாசாரப் பாட்டையும் படிச்சிப் பாருங்கோ. இந்தப் பாட்டு நம்ம அல்வா பார்ட்டி சத்யராஜ் படத்துல வருதாம். நல்ல எலக்கியரசமான பாட்டுபா...

நமீதா

கௌப்பு கௌப்பு கௌப்பு நீ பட்டையத்தான் கௌப்பு

கழட்டு கழட்டு கழட்டு

உன் சட்டையைதான் கழட்டு

பச்ச அரிசி சாப்பாடு

பாடா படுத்துது வேக்காடு

புழுங்கல் அரிசி சாப்பாடு

புகுந்து நீயும் விளையாடு

பதினெட்டு வயசுல

கொழா புட்டு சைசுல

வெச்சிருக்கேன். தலைவாழை இலையில

பதினொரு வயசுல

பாதாம் பருப்பு சைசுல

வெக்கட்டுமா

எவர்சில்வர் தட்டுல.

மும்தாஜ்

வான்கோழி தொடையை நான் வறுத்துத் தரவா

வாழைத்தண்டு பொரியல நான் சமைச்சுத் தரவா

ஆடு முசலு குட்டி

துண்டு துண்டா வெட்டி

உப்புக் கண்டம் போட்டு

ஊட்டி விடவா.



நமீதா

கைமுறுக்கு இது நெய் முறுக்கு _ அட

யாருக்கும் தெரியாம வந்து நொறுக்கு

உன் கூறு கெட்ட உடம்ப _ நானு

ரிப்பேரு செய்யட்டா.

கௌப்பு கௌப்பு கௌப்பு

மும்தாஜ்

கருவாடு நான் காசிமேடு _ நீ

கொஞ்சம் கூட கூசாம பாய் போடு!

நமீதா

சிறுபயறு உளுத்தம் பருப்பு

கடலை பருப்பு சேத்தி இடிச்சு

கட்டி வெல்லம் கலந்து நானும்

உருண்டை செய்யவா!

மும்தாஜ்

வேகாத ஆம்லெட்டு

வெள்ளாட்டு கட்லெட்டு

மரக்காணம் சுறா புட்டு

எறா புட்டுடா

தாலி கட்டாம என்கூட குடும்பம் நடத்துடா!

யக்கோவ் நீயி பெர்யாளுக்கா

நம்மூருல இந்த ஒரு மாசத்துல ஆரோட பேரு நெறியா ஆளுங்கோ வாயிலே வந்துருக்குன்னு ரோசன பண்ணா அது நம்ம போலீஸக்கா செயலச்சுமியா தான் இர்க்கும்போல. ஒரு நாளைக்கு ஒரு நூஸ் வுட்டுக்கின்னே கீது. நம்மூரு அர்சியல்வாதிங்கோ தான் எப்பவும் தன்ன சுத்தி பத்தாளுங்கோ நிக்கணும், பத்து பேரு தன்ன பத்தி பேசிக்கின்னே இர்க்கணும்ன்னு நெனிப்பாங்கோ. அக்கா அவுங்கள தாண்டி போச்சு. நூஸ் பேப்பருங்கோ, டிவிகாரங்கோ அல்லாரும் இப்போ யக்காவ சுத்திக்கின்னே கீறாங்கோ.

செயலச்சுமியக்காவும் எதையும் பெர்ய மேட்டராவே எட்த்துக்க மாட்டங்குது. தெனம் எதுனா புச்சா ஒரு சரக்கு எறக்கிக்கின்னே கீது. இப்போ புச்சா எறக்குன மேட்டரு நம்ம ஓபிஎஸ்ஸு மேட்டரு. மன்ஸன் குந்துற எடத்துல முள்ளு வச்ச கணுக்கா போயி சிஎம்மு சீட்டுல குந்திக்கின்னு இர்ந்த சமயத்துல யக்கா அவராண்ட எதோ துட்டு குட்த்துச்சாம். இந்த நூஸ் இந்தியா டுடேயிலே வந்ததும் நம்ம சன் டிவி சொம்மா இர்க்குமா? நேத்து ஃப்ளாஸ் நூஸ்ல்லாம் குட்த்து "சன் டிவி நூஸ் பாருங்கோ, செயலச்சுமியக்கா கொரலு வுட்டுக்கீது"ன்னு சொல்லிக்கின்னே இர்ந்தாங்கோ. இன்னாடா மேட்டருன்னு பாத்தா கட்ஸீல ஒபிஎஸ்ஸுக்கு ஆப்பு.

ஒபிஎஸ்ஸு "இதெல்லாம் டுபாக்கூரு மேட்டரு, ஆரும் நம்பாதிங்கோ"ன்னு கொரலு வுட்டுக்கின்னு கீறாரு. மன்ஸன் மக்கள் மேல கீற பயத்துல கொரலு வுடுற மேரி தெர்யல, அம்மா கையிலே மேட்டரு போயி நம்மள எதுனா சேஞ்சிட்டாங்கன்னா இன்னா பண்றதுன்னு ஃபீலாகி வுடுற கொரலு மேரி தான் கீது.

முன்னே ஒருக்கா குப்ஸாமி "அடுத்த சிஎம்மு"ன்னு செயலச்சுமியக்காவ சொன்னப்போ நம்ம நாமக்கல் ராசா ரொம்ப ஃபீலானாரு. ஆனா அக்கா போற போக்க பாத்தா பர்கூர் தொகுதில அம்மாவுக்கு ஆப்போசிட்டா நின்னு கொரலுவுடும் போல தான் தெர்யிது. யக்கா நீயி கலக்குக்கா... தமிள்நாட்டோட தலவிதி ஒண்ணோட கையிலே இர்ந்தா அத்த ஆரால மாத்த முடியும்.

Wednesday, September 15, 2004

புள்ளையார் சதுர்த்தி

நம்ம வூருல இன்னா விசேஷம் வந்தாலும் நடக்காத ஒரு கூத்து இந்தப் புள்ளையார் சதுர்த்தி வந்தா மட்டும் நடக்கும்ப்பா. வூருல ஒண்ணுத்துக்கும் ஒதவாம சுத்திக்கின்னு கீற பசங்கோ அல்லாரு வூட்டுலையும் துட்டு வசூல் பண்ணி புள்ளையாருக்கு செலை வைக்கிறது, அன்னிக்கு ஆடாத ஆடமெல்லாம் ஆடுறதை நா கணக்குலியே எட்த்துக்கல. ஆனா கட்டே கடேசியா புள்ளியார கொண்டுபோய் கடல்ல போடுவாங்கோ பாருங்கோ, அத்தான்பா மெய்யாலுமே கொடுமையான மேட்டரு.

கண்ட பெயிண்ட்டு, எதுனா ரசாயனமெல்லாம் கலந்து தான் அந்தப் புள்ளியார செய்றாங்கோ, அத்த கொணாந்து கடல்ல கலந்தா அது மன்ஸனுக்கு மீனுக்கு அல்லாம் எம்மாம் பெரச்சனைய கொணாந்து வுடும். ஆருமே அத்த பத்தி ரோசனப் பண்றது கெடியாது. வூர்வலமா சுத்தி வந்து புள்ளியார கடல்ல வீசிப்புட்டு அத்த ரெண்டு மிதியும் மிதிச்சிட்டு போவாங்கோ. குப்ஸாமி இதையெல்லாம் கேட்டாக்கா ஹிந்து இண்டாலரண்ஸ்ன்னு கூட ஆர்னா சொன்னாலும் சொல்லுவாங்கோ.

இந்த தபா நல்லவேளியா நம்ம வூரு கோர்ட்டுல இது ஸ்டே குட்த்துட்டாங்கோ. ஆரும் இந்த தபா ரசாயனம் கலந்த புள்ளியார் செலைய கடல்ல கலக்கக்கூடாதுன்னு. ஆனாலும் நம்ம காவி கச்சி சிஸ்யப்புள்ளிங்கோ அன்னிக்கு சுகுரா கொண்டுபோயி செலைய கடல்ல கலந்துவுடும். அப்பாலிக்கா பெரச்சனை தான்.

சரி, புள்ளியார கொண்டு போயி இன்னாத்து கடல்ல கலக்கணும். புள்ளியாரு ஒன்னாண்ட வந்து "எனுக்கு கலரு கலரா பெயிண்டு அட்ச்சி நீயும் கொஞ்சம் மூஞ்சில பெயிண்டு தேய்ச்ச்க்கின்னு டமுக்குடப்பா ஆட்டம் போட்டுக்கின்னு போயி என்னிய கடல்ல தூக்கிப்போடு"ன்னு கேட்டாரா? கெடியாதே. இதெல்லாம் நம்மளா செஞ்ச பளக்கம் தானே. ஈ எறும்புல்லாமும் பசி இல்லாம இர்க்கோணும்ன்னு வூட்டு வாசல்ல அரிசிமாவு கோலம் போட சொன்னாங்கோ. நம்மாளு அதுக்கு கலரு குடுக்கிறேன்னு கண்ட கருமாந்திரத்தை எல்லாம் கலந்து போட்டுக்கின்னு கீறாங்கோ. அத்த மேரி தண்ணில கீற உசுருங்களுக்கும் எதுனா குடுக்கணும்ன்னு அரிசிமாவுல புள்ளியாரு செஞ்சி அத்த கொண்டு போயி ஆறு, கொளம், குட்ட, கடலுன்னு எங்க தண்ணிய பாக்குறியோ அத்துல போடுன்னு வெச்சாங்கோ.

குப்ஸாமி வூட்டுல இன்னிய வரைக்கும் களிமண்ணாலையோ, கண்ட ரசாயனத்துலியோ புள்ளியாரு பொம்ம செஞ்சு தண்ணில வுட்டது கெடியாதுபா. எப்பவும் அரிசி மாவு தான். அதுவும் நம்ம ஆத்தா அந்தப் புள்ளியார செய்ய சொல்லோ "நம்மல்லாம் இன்னா கண்ணு புள்ளியாரு செய்றோம். அந்தக் காலத்துல மூணு குறுணி அரிசிய போட்டு புள்ளியாரு செய்வாங்களாம். அது தான் முக்குறுணி புள்ளியார்ன்னு பேரு வந்திச்சி"ன்னு சொல்லிக்கின்னே செய்யும். நம்ம கவுருமெண்ட்டு கூட களிமண்ணால செஞ்ச புள்ளியார தண்ணில தூக்கிப்போட ஒண்ணும் சொல்லல. ஆனா அத்த தூக்கிப்போட்டா தண்ணி இருக்குற எடம் துந்து பூடாதா? அரிசி செஞ்சத போட்டா அங்கே இருக்குற மீனுக்கு நல்லது. களிமண்ணையும் ரசாயனத்தையும் போட்டா அல்லாருக்கும் கெடுதல் தான்பா.

சரி, இப்போ இன்னாதுக்கு இப்டி கூவிக்கின்னு கீற குப்ஸாமின்னு கேக்காதிங்கோ. இத்த படிக்கிற பத்து பேருல ரெண்டு பேராவது களிமண்ணு புள்ளியாரு, ரசாயன பொம்ம புள்ளியாருன்னு போவாம வூட்டுலியே அரிசியிலே செஞ்சு அத்த கொண்டு போயி தண்ணியிலே தூக்கிப்போடுவிங்கன்னு நென்ச்சி தான் சொல்றேன். அல்லாரும் சந்தோசமா புள்ளியாரு சதுர்த்தி கொண்டாடுங்கபா. வர்ட்டா....

Monday, September 13, 2004

தொயில்நுட்ப ஜிகிடி

நம்ம ஆளுங்கோ இந்த புளாக்கருல எதுனா புச்சா செய்துகினேகீறாங்கபா. நம்ம பத்ரி அண்ணாத்த பதிவுல பாக்கசொல்லோ அல்லாரும் எதிர்கொரலு குடுக்க சோக்கா வளி சேஞ்சு வெச்சிக்கீறாரு. ஆனா அவுரு பண்ணி வெச்சதுல ஒரு மேட்டரு இடிக்கிது. நா ஒருக்கா புளாக்கருல உள்ள வந்துட்டா அப்பாலிக்கா கொரலு வுடலாம், இல்லாங்காட்டி வூரு பேரு தெரியாதவனாட்டம் வுடலாம். எனுக்கு அப்டில்லாம் வாணாம், நான் இஸ்ட்டப்பட்ட பேர போட்டுக்கணும்ன்னு நென்ச்சா நடுக்காது. அத்த மேரி புளாக்கருல உள்ள வராம கொரலு வுடணும்ன்னா கண்டிப்பா வூரு பேரு தெர்யாதவனாட்டம் தான் கொரலு வுடணும். அத்தால நம்மாளுங்கோ குட்த்துக்கீற மேட்டருலியே கொஞ்சமா ஜிகிடி வேல காட்டி இங்க குட்த்துக்கீறேன். ஆரு வேணா இன்னா பேருல வேணா கொரலு வுடலாம்.

வெட்டி ஒட்டும்போது <BlogItemCommentsEnabled>லேந்து </BlogItemCommentsEnabled> வரையில கரீட்டா பாத்து ஒட்டணும், இல்லாங்காட்டி மேட்டரு சொதப்பிடும்...

எப்டிக்கீதுன்னு போட்டுப் பாத்துபுட்டு சொல்லுங்கபா...


<BlogItemCommentsEnabled><a name="comments"></a>
மறுமொழி இட:
<p>
<form action="http://www.blogger.com/add-comment.do" method="post" onSubmit="return AddName(this)">
<input type="hidden" name="blogID" value="<$BlogID$>">
<input type="hidden" name="postID" value="<$BlogItemNumber$>">
<textarea name="postBody" id="postBody" rows="10" cols="30" tabindex="1" style"font-family: Latha, TheneeUniTx"></textarea>
<br>
Name: <input type="text" name="strName" tabindex="2" size=30 style"font-family: Latha, TheneeUniTx">
<br>
URL:  <input type="text" name="strURL" tabindex="3" size=30>
<br>
<input type="hidden" name="anonymous" value="y">
<button style="margin-right:.3em; font-family: Latha, TheneeUniTx" tabindex="4" type="submit" name="post">மறுமொழி இடுக</button>
<br />
<br />
தமிழ் யுனிகோடில் தட்டச்ச முடியாதவர்கள் கீழே இருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டினால் மேலே தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் ஆகி வரும்.
<br />
<textarea name="postBody1" id="postBody1" rows="5" cols="30" tabindex="1" style="font-family:Latha, TheneeUniTx;" onkeyup="convertUni('postBody1', 'postBody');" onclick="convertUni('postBody1', 'postBody');" onselect="convertUni('postBody1', 'postBody');"></textarea>
<br />
<font size=1>Thanks to <a href="http://www.suratha.com">suratha.com</a></font>
<form>
</p>

<script type="text/javascript" language="javascript" src="http://www.geocities.com/kvraja/uniconvertor.js"></script>

<script>
function AddName(form)
{
if (form.postBody.value == "")
{
alert("Please enter some message")
return false;
}
else if (form.strName.value == "")
{
alert("Please enter your Name")
return false;
}
else
{

form.postBody.value = form.postBody.value + "\n" + "\n" + "posted by: <a href=" + form.strURL.value + ">" + form.strName.value + "</a>";
return true;
}
}

</script>

மறுமொழிகள்:
<BlogItemComments>
<div class="blogComment">
<a name="<$BlogCommentNumber$>"></a>
<$BlogCommentBody$>
<script>
var CommentUser = '<$BlogCommentAuthor$>';
if (CommentUser.indexOf('Anonymous') == -1)
{
document.write('<br /><br />posted by: <$BlogCommentAuthor$>')
}
</script>
<br />
<div class="byline"><a href="<$BlogCommentPermalinkURL$>" title="permanent link">#</a> <$BlogCommentDateTime$> </div>
<$BlogCommentDeleteIcon$>
</BlogItemComments>

</BlogItemCommentsEnabled>

Sunday, September 12, 2004

சேது சேது சேது.....

நம்மூருல இப்போ ஆரெல்லாம் சேதுவா அலஞ்சிக்கின்னு கீறாங்களோ இல்லியோ நம்மூரு அர்சியல்வாதிங்கோ சேதுவா மாறிட்டாங்கோ. ஆரப் பாத்தாலும் "நாந்தான் சேது"ன்னு சொல்லிக்கிறாங்கோ. அல்லாருக்கும் ஒரு இஸ்டெப்பு மேல ஏறி நின்னுக்கின்னு "நாந்தான் சேது"ன்னு அம்மா கூவோ கூவுன்னு கூவிக்கின்னு கீறாங்கோ. வுட்டாட்டாக்கா இதுக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி நூஸ் குட்ப்பாங்கோ போலக்கீது.

இப்போ இன்னா மேட்டருன்னா அம்மா கச்சிலேந்தே அம்மாவுக்கு ஆப்பு வெக்க ஆளு ரெடி. திமுக மதிமுகன்னு ஒரு ரவுண்டு வுட்டுப்போட்டு இப்போ அம்மா கச்சில ஐக்கியமான கே எஸ் ராதாகிஸ்ணன் தான் அந்தப் பார்ட்டி. ஆராரு சேது சமுத்திரம் வரணும்ன்னு பேசினாங்கோன்னு புட்டு புட்டு வெச்சிப்புட்டாரு. அவுரு சொல்றத வெச்சி பாத்தாக்கா நடையா நடந்துக்கின்னு கீற வைகோ தான் எதுனா கொஞ்சம் சொல்லிக்கலாம். அம்மா கூட கொஞ்சூண்டு எதுனா பேசிருப்பாங்கோ போல, ஆனா நம்ம தாத்தா அதுக்காக ஒரு கீரைய கூட கிள்ளிப்போடலையாம். ஆனா வூரு முளுக்க போஸ்டரா அட்ச்சி வொட்டிக்கீறாங்கோ. தாத்தா கைல அத்த பத்தி ஆர்னா கேட்டாக்கா பெர்ய மன்ஸன் கணுக்கா "இது எங்க கூட்டணி கெலிச்சதுபா, ஆளாளுக்கு தனித்தனியா கூவாதிங்கோ"ன்னு சொல்லிக்கீறாரு. அதுக்கு மேல எதுனா கொரலு வுட்டா "தோடா இந்தச் சேது வர்றதுக்காக தான் நா டெல்லியிலே கொடி புட்ச்சி கப்பல் துறை அமைச்சரா என்னோட ஆளுக்கு சீட்டு வாங்கி குட்த்தேன்"ன்னு சொல்லுவாரு. தாத்தா பலே கில்லாடி ஆச்சே....

Thursday, September 02, 2004

சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

மர்த்தடி போட்டிக்காக பெரசன்னா நெல்லைய பத்தி வெண்பா எய்திக்கீறாரு. பட்ச்சா சோக்கா கீது. அத்த பாத்து நம்ம சென்னைய பத்தி, அதோட புகள பத்தி ரெண்டு வரி எட்த்து வுடலான்னு ஆச வந்துடுச்சு.

******************************************

அண்ணாந்து பாக்கவைக்கும் எல்ஐசி கட்டடமும்
கண்ணடிக்கும் நேரத்தில் கட்டுவுடும் ஆட்டோவும்
எந்தூரு போனாலு மெங்கேயு மிர்க்காது
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

எண்ணூரு போறதுக்கு எட்டுமணி பஸ்புடிச்சா
பண்ணாட பையனுங்கோ பர்ஸடிக்க சான்ஸுவுண்டு
கொண்டுவந்த பைசாவ கொள்ளையிலே வுட்டவன்நீ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

கொல்லுற வெய்யிலு கொள்த்துறது தெர்யாம
கல்லாட்டம் குந்திகின்னு காதலிப்போம்; அல்பாய்ஸ்ல
கண்ணாலம் கட்டாம கல்ண்டகத எத்தனையோ
சென்னையதான் பாத்துபுட்டு சொல்லு

******************************************

இப்போதைக்கு இவ்ளோ தான். அப்பாலிக்கா என்னிக்காவது மூடு இர்ந்தா மிச்ச மீதி. வர்ட்டா....