Saturday, December 04, 2004

DPS Dhamakka

இந்தக் காலத்து இஸ்கூலு புள்ளிங்கோ இன்னா கொராமயெல்லாம் செய்யுமுன்னு ஒண்ணுமே பிரியலபா. இந்த ஒரு வாரமா டில்லில கீற டிபிஎஸ்ஸு இஸ்கூலு புள்ளிங்கோ ரெண்டு பண்ணிக்கீற காரியம் அல்லா நூஸ்பேப்பருலையும் போட்டு தாக்கிக்கின்னு கீறாங்கோ. பதினோறாம்ப்பு படிக்கசொல்லோ ஒரு பொண்ணும் பையனுமா சேந்துகின்னு ஜல்ஸா வேல காட்டி அத்த படமும் புட்ச்சி இஸ்கூலுல படிக்கிற மத்த புள்ளிங்களுக்கு நூறு ரூவாய்க்கு வித்திக்கீறாங்கோ. நூறு ரூவாய்க்கு இத்த விக்கிதுங்களே, ஏதோ வயித்து பொளப்புக்கு இல்லாம செஞ்சுபூட்ச்சிங்க போலக்கீது பாவம்ன்னு நெனிக்க வாணாம். பொண்ணோட நைனா ராணுவத்துல இர்ந்தவராம், புள்ளியோட நைனா பெர்ய கையாம். சொம்மா ஒரு குஜாலுக்கு இந்தப் புள்ளிங்கோ ரெண்டுமா சேர்ந்து இப்டி செஞ்சு அத்த வித்துக்கீதுங்கோ.

நம்மூருல தம்மாதுண்டு படம் கெட்ச்சாலே அது வூரு ஒலகமெல்லாம் பூடும். வீடியோ படமா கெட்ச்சா சொம்மா இர்க்குமா. அல்லாரும் அத்த கூவி கூவி விக்கிறாங்கோ, இதுல பெர்ய கொடும இன்னான்னா அந்த விடியோ ஒண்ணு அந்த இஸ்கூலு பிரின்சிபாலுக்கும் கெட்ச்சிக்கீது. போலீஸு கையிலே "இன்னா நைனா இத்தெல்லாம்"ன்னு ஆருனா கேட்டாக்கா "எங்களாண்ட ஆரும் கம்ப்ளையிண்டு பண்ணல, அத்தால நாங்க ஒண்ணும் செய்யல"ன்னு சொல்லுது. கடையிலே அத்த கூவி கூவி விக்கிறவங்கோ "போலீஸ்ல்லாம் ஒண்ணுஞ்ச்செய்யாதுபா, அவுங்களே நம்ம கையிலேந்து வாங்கி போயி பாத்துக்கின்னு கீறாங்கோ"ன்னு கூலா சொல்றாங்களாம்.

பாவம் நம்ம அப்துல் கலாமு, அவுரு இன்னான்னா 2020ல இந்தியா பெர்ய வல்லரசா மாறிப்பூடும்ன்னு கனவு கண்டுகின்னு கீறாரு.