Saturday, March 27, 2004

தாத்தாவுக்கு வந்த நானோதயம்

டெல்லிலக்கீற பெர்ய தாத்தாவுக்கு புச்சா ஒரு நானோதயம் வந்துக்கீதுபா. அத்து இன்னான்றிங்கோ "அவசரத்துல அமைச்சா அந்தக் கூட்டனி பாதில புட்டுக்குமாம்". நானோதயம்ன்னா இத்தான்பா நானோதயம். அதுவும் எப்போ வந்துக்கீது தெர்யுமா, முன்ன ஒரு தபா அம்மா கூட கைகோத்துகின்னு நின்னு 13 மாசத்துல அம்மா கலட்டிவுட்டு, இப்போ திரும்பா அம்மா இல்லையேல் தாத்தா இல்லைன்னு டயலாக்குல்லாம் வுட்டப்பொறவு இந்த நானோதயம்.

ஆனா இந்த நானோதயத்த அவரு வேற தெசைல சைடு வுட்டுக்கீறாரு. அதாவது, காங்கிரஸு ஓடி ஓடி கூட்டாஞ்சோறு கூட்டு சேர்க்கிறதை தா தாத்தா அப்படி சொல்லிக்கீறாரு. வயசான கொஞ்சம் ஞாபகசக்தி பீஸாப்பூடுமாம். தாத்தாவுக்கு அப்டி ஆயிடுச்சு போல. ஒரு மாசம் முன்ன போயஸ் கார்டனு வாசல்ல "அம்மா துணை"ன்னு எய்தி வெச்சிக்கின்னு தாத்தாவோட ஆளுங்கல்லாம் நிண்ணதை தாத்தா மறந்துட்டாரு போல. தாத்தா, காங்கிரஸு அவசர கூட்டணின்னா ஒங்க கூட்டனி இன்னா பலகாலமா நெலைச்சி நிக்கிற கூட்டணியா?

"நாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரதநாடு, நாஞ்சொன்னா கேப்பது ஆரு, நாளு நீ பேப்பரப் பாரு"

No comments: