Monday, August 30, 2004

அசத்தல் ஆண்டனி

நம்ம ஆண்டனி சேட்டன் கேரளத்து தாத்தா கருணாகரனுக்கு ஆப்போசிட்டா இம்மா நாளு அட்ச்சி ஆடிக்கின்னு இர்ந்ததே பெர்ய விசயம் தான். தாத்தா இன்னா டகுலு வுட்டாலும் அதுக்கு ஒரு கொய்யான் சிரிப்பு மாத்ரம் சிரிச்சிக்கின்னு பதில் சொல்லாம எஸ்கேப்பு ஆவுரதுல அண்டனி அண்ணாத்தே ஆளு பலே கில்லாடி. நம்மூரு தாத்தா கணுக்கா கருணாகர தாத்தாவும் புள்ளிங்கள பாலிட்டிக்ஸ்ல இஸ்துக்கின்னு வந்து வுடணும்ன்னு இன்னா மேரி டகுலு வித்த காட்டியும் ஆண்டனி கைல ஒண்ணும் வேகலை. எதுனா எசகுபெசகா எட்த்து வுடலாம்ன்னு பாத்தாலும் அண்ணாத்தே செம்ம கையி சுத்தம்.

இன்னா இர்ந்து இன்னா பண்றது. நேத்திக்கு சோனியா வந்ததும் ஆண்டனி கைல "இன்னா கண்ணு, ஒன்னோட வூருல நம்ம கச்சிக்காரங்கோ ஒரு சீட்டு கூட எடுக்கல, நீயி இன்னாத்துக்கு சிஎம்மா குந்திக்கின்னு கீறே"ன்னு கொரலு வுட்டுக்கீறாங்கோ. கேரளத்து காங்கிரஸுல இர்க்கிற அடிதடி தெர்ஞ்ச சோனியா அம்மாவே இப்டி கேக்க, நம்ம அண்ணாத்தே படா ஃபீலாயிப்புட்டாரு. "எனுக்கு சிஎம்மு போஸ்ட்டு வாணாம் போ"ன்னு கொய்ந்த புள்ள கணுக்கா சொல்லிப்புட்டு வந்துட்டாரு.

ஆனா ஒண்ணு மட்டும் சொல்லணும் அண்ணாத்தே. எங்க தமிள்நாட்டுல "பதவி எங்க தோள்ல கிடக்கிற துண்டு மாதிரி"ன்னு டயலாக்கு வுட்ட கச்சிலேர்ந்து வந்த பெர்ய மன்ஸங்கோ அல்லாம் அட்தது தன்னோட புள்ளிங்க தான் தன்னோட சீட்டுல குந்தணும்ன்னு சாடையா சொல்லிக்கின்னு கீறப்போ, நீ மாத்ரம் "எனுக்கு அது துண்டு கூட இல்லபா, தொட்ச்சி கீளே போடுற ஐட்டம் மேரி"ன்னு சிஎம்மு போஸ்ட்டுக்கு கல்தா குட்த்த பாரு. மெய்யாலுமே நீயி பெர்ய மன்ஸன்பா.

2 comments:

Anonymous said...

வணகம் அண்ணத்தே!
நாஷ்டா ஆச்சா?
எனுக்குன்னு குந்த குட்ச இல்ல. துட்டு இல்லாதயெ பொரம்க்குல எடம்புட்சி ஒரு குட்ச போட்டுக்லான்னாக எங்க நேரங்கீது. எப்பொனா திண்ணைல போயி கொஞ்ஜங் குந்திக்கிரது உண்டு. அப்பப்பொ தெர்ல் நின்னுகினு அவன்அவன் அடிக்கிற கூத்துங்கள பாத்துங்கீறது தாம் நம்ப வேல. கத, கவித, எலக்கியம், நூஸ், அது இதுன்னு வுட்ற உதாருங்கலுகனா நீ ரொம்ப பேஜார் படாத நாலு பேருகு புரீர மாறி சில்ற சமாசாரங்களகுடோ சுலுவா எய்தரத பட்சாகா மன்சுகு நல்லா கீது. உம் வூடு உட்டா 'ஆப்பு'காரன் வூடு நால்லாதங்கீது. டைம் கீறப்பல்லாம் எய்திகினு இரு. ஆமா கொஸப்பேட்டன்னா எந்த ஊர்ல கீற கொஸப்பேட்ட நம்பள்து?

மெட்றாஸ் தமிய்னு சின்மாவுல பேசரது கேட்டாக்கா, பெரீ, பெரீ எய்த்தாளருங்களும் எய்தறது பட்சாகா பத்திகினு வர்து. சின்மான்னா தேங்கா சீனிவாசன், ஜனகராஜி. எய்தர்தக்கன்னா நீ. கொஸபேட்ட குப்ஸாமி அண்ணாத்தெ வாய்க. ஆப்பு அண்ணாத்தெ வாய்க.

Unknown said...

வா மாமே ஆப்பு, எப்டிக்கீற? வூட்டாண்ட அல்லாரும் சோக்காக்கீறாங்களா? இப்போல்லாம் ஆருக்கும் ஆப்பு அடிக்கிறது இல்லியா வாத்யாரே!!!