Saturday, August 14, 2004

சொதந்திர தெனம்

போன தபா எத்தனாவது சொதந்திர தெனங்கிறத மறந்துபுட்டு இப்போ குந்திக்கின்னு கணக்குப் போட்டு இஸ்கோல் டீச்சருங்கோ கொய்ந்தைங்க கைல "கொய்ந்திங்களா, நாளிக்கு இத்னாவது சொதந்திர தெனம். அல்லாரும் இஸ்கூலுக்கு யுனிபார்ம் போட்டுக்கின்னு வந்துடுங்கோ"ன்னு கொரலு வுட்டுருப்பாங்கோ. "இன்னாபாது, இப்டி ஞாயித்துக்கெளமைல வந்துடுச்சு. எதுனா திங்க, செவ்வான்னு வந்தா ஒரு நாளு லீவு கெடிக்கும்"ன்னு இஸ்கூலு புள்ளிங்களும், ஆபீஸு ஜோலிக்கு போறவங்களும் ஃபீலாவாங்கோ. "இந்த தபா வூட்ல ஒரு வேலியும் செய்யக்கூடாது. சன் டிவில ஒரு புரோகிராமும் வுடாம பாத்துடணும்"ன்னு வூட்டுல கீற பொம்பளிங்கோ ஐடியா பண்ணிருப்பாங்கோ. "தலீவரு வசூல்ராஜாவ வெளில வுட்டுக்கீறாரு. பாட்டெல்லாம் சோக்காக்கீது. டிக்கெட்டு கெடிக்குமா, இல்லாங்காட்டி ப்ளாக்குல எதுனா வாங்க வேண்டி இர்க்குமா"ன்னு நம்ம நாட்டு வருங்கால தூணுங்கோ கன்னத்துல கை வெச்சி ரோசனப் பண்ணும். "இன்னாபாது, நாளிக்கு டாஸ்மாக்கு லீவு வுட்டாங்களா"ன்னு நம்ம தோஸ்துங்கோ ஃபீலாவாங்கோ. அர்சியல்வாதிங்கோ அரத்தூக்கத்துல வந்து காந்தி தாத்தா செலைக்கு மாலப் போடுவாங்கோ. வர்ஸத்துக்கு நாலு தபா மாத்ரம் குளிக்கிற காந்தி தாத்தா ரெண்டாவது தபாவா குளிப்பாரு.

சொதந்திர தெனத்தன்னிக்கு பயாஸ்கோப்பு மேட்டரா டிவில காட்றாங்கோன்னு ஃபீலாவுற நாமளும் இந்தச் சொதந்திர தெனத்துல ஒண்ணும் பெர்ஸா கிளிச்சிடுறது கெடியாது, சொதந்திர தென வாள்த்துகள் சொல்றது தவுர.

அல்லாருக்கும் சொதந்திர தென வாள்த்துகள்பா....

2 comments:

Anonymous said...

Neenga sonnathu romba correct. inthamaathiri ellaam numma makkal vazharathukkuthaan ghandi suthanthiram vaangikkodutharo ennavo.

nalla vealai ghandi ippozhuthu uyirudan illai.

by
shyamee

Anonymous said...

வக்கனையா டயலாக் மட்டும் பேசுரோம் மச்சி உருப்படியா என்ன செயலாம்

நம்ம ஊட்டு கொழன்தைகலுக்கு புர்யவைபோம் நைனா



கொரலு வுட்டது செந்தில்