Tuesday, August 10, 2004

பொடாவுக்கு போடா

எதுனா செய்ய வேண்டியது, அப்பாலிக்கா அத்த வாணாம்ன்னு திர்ப்பி இஸ்துக்க வேண்டியதே நம்ம அம்மாவுக்கு ஜோலியா பூட்ச்சிபா. கோயில்ல ஆடு கோளி வெட்டாக்கூடாது, அத்த செய்யாதே, இத்த செய்யாதேன்னு எதுனா சொல்லிக்கின்னு இர்ந்தவங்கோ எலிக்ஸன்ல ஆப்படிச்சதும் அல்லாத்தையும் ஒவ்வொண்ணா இஸ்துக்கினாங்கோ. இப்போ திடீர்ன்னு வைகோ மேலே போட்ருந்த பொடா கேஸையும் இஸ்துக்கினாங்கோ.

இப்போ குப்ஸாமி கீறான். அவனோட ரிக்ஸாவுல எதுனா புச்சா சேஞ்சு பண்றான். அப்பாலிக்கா கொஞ்சநாளு களிச்சு அத்த வாணாம், பளசே இர்க்கட்டும்ன்னு மாத்துறான்னு வெய்ங்கோ, அப்போ அதுக்கு இன்னா மீனிங்கு. குப்ஸாமிக்கு ரிக்ஸாவ ஒளுங்கா மெயிண்டைன் பண்ண தெர்ல. அத்தானே மீனிங்கு. குப்ஸாமி அப்டி செஞ்சா அவுனுக்கும் ரிக்ஸாவுக்கும் தான் பெரச்சனை. ஆனா அத்தையே அம்மா செஞ்சாங்கன்னா அல்லாருக்கும் பெரச்சனை. இப்போ வைகோ மேட்டர்லியே அவர வுள்ள தூக்கிப்போட்டதால ஆருக்கு லாபம். அவரோட அரசியல் வாள்க்கைல ரெண்டு வர்ஸம் வேஸ்டானது தான் மிச்சம். நஸ்டம் மட்டும் தான் மிச்சம்.

டில்லில குந்திக்கின்னு கீறவங்கோ இன்னும் கொஞ்ச நாள்ல பொடாவுக்கு போடா சொல்லிடுவாங்கோ. அப்பாலிக்கா வைகோவுக்கும் பெரச்சனை வராது. டில்லிலேந்து இந்த மேட்டரு நடக்கிறதுக்கு முன்னால நாமளே செஞ்சிடலாம்னு அம்மா பொடா கேஸை இஸ்துக்கின்னாங்களான்னு தெர்ல. இல்லாங்காட்டி 2006 எலிக்ஸன்ல வைகோவ தன் சைடுக்கு இஸ்துக்கின்னு போற ப்ளானான்னும் தெர்ல. ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே, என்னமோ நடுக்குது மர்மமாய்கீது, ஒண்ணுமே புர்யலே அர்சியல்லே....

No comments: