Tuesday, August 24, 2004

பாவம் தாத்தா

நம்ம சுஜாதா தாத்தா ரொம்ப பாவம்பா. எப்பனா எதுனா எசகுபெசகா எய்தி மாட்டிப்பாரு (இத்த எய்துசொல்லோ எனுக்கு ஒம்போது கெட்டளைங்கோ வேற ஞாபகத்துக்கு வர்து). முன்னே ஒரு தபா கற்றதும் பெற்றதும்ல என்னமோ புச்சா இலங்கைத்தமிழில் இப்போ தான் இலக்கியவாதிகளே உருவாவது மாதிரி படிச்சு பாராட்டி இர்ந்தாரு. இப்போ பாராட்ட கூட செய்யாம குப்ஸாமியும் முன்ஸாமியும் எத்தோ எய்தி வெச்சிட்டு அத்த பத்து பேரு படிக்கணும்ன்னு காத்திருக்க தான் வலைப்பதிவுல எய்துறாங்கோன்னு வலப்பதிவு பத்தி சொல்லிக்கீறாரு. அத்த கூட இன்னமும் புளாக்கு புளாக்குன்னு சொல்லிக்கீறாரு. வாத்யாரே அதுக்கு தமிளு வார்த்த கண்டுபுட்ச்சி ரொம்ப நாளாச்சுபா.

தாத்தா நீங்க கற்றதும் பெற்றதும்ல பத்து வாரம் களிச்சு எய்தப்போற மேட்டருல்லாம் இப்போவே வலப்பதிவுல வர்து. அத்தெல்லாம் பட்ச்சி பாத்துட்டு அப்பாலிக்கா வலப்பதிவு பத்தி சொல்லி இருக்கலாம். அத்த வுட்டுப்போட்டு குப்ஸாமி கொரலு வுடுறத மட்டும் எங்கணா பட்ச்சிப்புட்டு பதிவுன்னாவே இப்டி தான் இர்க்கும்போலன்னு நென்ச்சிக்கின்னு எய்தாத வாத்யாரே.

எனுக்கு இன்னா ஒரு டவுட்டு வர்து தெர்யுமா. இந்த வலப்பதிவு மேட்டரெல்லாம் ஒண்ணாண்ட வந்து எட்த்து சொல்லி அத்த பரப்புறதுக்கு உன்னியவே தலீவரா போட்டு செஞ்சிருந்தா "வலப்பதிவா அது படா சோக்கு மேட்டருபா, அல்லாரும் அத்த ஒரு தபா செஞ்சு பாருங்கோ"ன்னு சொல்லிருப்பிங்களோ. என்னமோ செய்யி வாத்யாரே, நீ எத்த எய்துனாலும் பட்ச்சிக்க தான் நாங்கல்லாம் கீறோம்ல...

பிகு: இதுக்கு முன்ன ஒரு தபா "இணையத்துல தகவல் தான் கிடைக்கும், அறிவு அல்ல"ன்னு புச்சா ஒரு மேட்டர கண்டுபுட்ச்சி சொல்லி இர்ந்தாரு. அத்து இன்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லி இருக்கலாம் அவரு. வர வர அமேரிக்க புஸ்ஸு மேரி பேச ஆரம்பிச்சிட்டாருபா இவுரும்.

2 comments:

இராதாகிருஷ்ணன் said...

:-)

இதப்பத்தி நேத்துதான் பரியோட வலைப்பதிவுல முதன்முதலா படிச்சேன் (http://pari.kirukkalgal.com/index.php?itemid=82). என்னத்தச் சொல்ல!

Anonymous said...

ஜஸ்ட் டெஸ்டிங்....

கொரலு வுட்டது சாகரன்