
இன்னா பண்றதுன்னு பாத்தாரு ஐயா. பத்து பேரு எதுத்து நின்னாலும் பக்கத்துல கீறவன் கைய புட்ச்சிக்கின்னா ஒரு தெம்பு வந்துடும்ல. பக்கத்துல இர்க்கிறது நம்ம மீசக்கார நண்பன் தான். இத்தினி காலமா வெட்டிக்கின்னும் குத்திக்கின்னும் இர்ந்தவங்க தான். எலிக்ஸன் வந்தா மீசக்கார ஆளுங்கள ஓட்டு போட வுடாம கூட ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ அட்ச்சி ஆடினா ஆட்டமெல்லாம் வுண்டு. இன்னா தான் பண்ணி இர்ந்தாலும் நமக்கே ஆட்டம் காட்ட ஆளுங்கோ ரெடியானா அப்பாலிக்கா இன்னா பண்றது. அத்தான் "அண்ணா தம்பி"ன்னு பாசமலைய ரெண்டு பேருமா பொளிஞ்சிக்கின்னாங்கோ. கைய குட்த்துக்கின்னப்போவே "தம்பி நீ உள்துறைய எட்த்துக்கோ, எனுக்கு மெயின் சீட்ட வுட்டுப்புடு"ன்னு தான் ஐயா பேசிருப்பாரு. "இந்தாளு கூட சேரமா இர்ந்தா நமுக்கு கெடிக்கிற ஓட்டும் கெடிக்காது, அப்பாலிக்கா நம்ம ஒரு ஆளு மட்டும் தான் எலிக்ஸன்ல ஜெயிச்சு அதையும் அப்பாலிக்கா தார வாக்கணும்"ன்னு நென்ச்சி மீசக்கார நண்பனும் ஆட்டத்துல சேந்துக்கின்னாரு.
இந்தக் கூட்டத்துல ஆருக்கு இன்னா சீட்டு கெடிக்கிதோ இல்லியோ பங்கர் தச்சானுக்கும் அறிவுமதிக்கும் கொளுக பரப்பு செயலாளரு சீட்டு கண்டிப்பா வுண்டு. செம்ம இஸ்பீச்சு வுட்டுக்கீறாங்கோ.
இத்து ஒங்க அர்சியலு, இன்னா வேணா செஞ்சிக்கோங்கபா. இனிமே ஆரும் சாதி பேர சொல்லி அட்ச்சிக்காம இர்ந்த செரி....
No comments:
Post a Comment