Monday, April 26, 2004

ஓட்டு கேக்குறாங்கப்பா

கட்சிக்காரங்களுக்கு எப்டில்லாம் ஓட்டுக் கேக்றதுன்னு ஒரு ரேஞ்சே இல்லாம பூட்ச்சுபா.

நம்ம தெலுங்கு தேச நாயுடுகாரு இண்டெர்நெட்டு, ஈமெயிலுன்னு ஓட்டுக் கேக்க ஆரம்பிச்சிட்டாரு. நாயுடுகாரு ஓட்டுக் கேக்கப் போற எடத்துலல்லாம் தெலுங்குதேசத்துக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்றாரோ இல்லியோ "மறக்காம ஈமெயிலு ஒண்ணு வெச்சிக்கோங்கோ"ன்னு சொல்றாராம். இன்னா கொடுமைன்னா அவரோட தொகுதிலக்கீற மக்கள்ஸ்க்கு ஈமெயிலு, கொசுமெயிலுல்லாம் ஒண்ணுமே தெர்யாது. நாயுடுகாருவுக்கு ஐத்ராபாத்து தான் ஆந்திரான்னு நெனப்பு.

நாயுடுகாரு ஈமெயிலு, இண்டர்நெட்டுன்னு போன நம்ம காவிக்கட்சி சொம்மா குந்திக்கின்னு இர்க்குமா. நைனா நீ இஸ்டேட்டு, நானு ஒட்டுமொத்த இந்தியாவையே கைல வெச்சிக்கீறேன், இன்னா செய்றேன் பாருன்னு கெளம்பிட்டாங்க. வூர்ல கொஞ்சநஞ்ச எடம் கெடைச்சாலும் தாமரப்பூவ வரஞ்சி வுட்டுடுறாங்களாம்.

தாமரப்பூவ எதுனா செவுத்துல வரஞ்சிவுட்டா பரவால்ல, ஆர்வக்கோளாறுல பேங்கு பணக்கட்டுல ஒட்டிக்கீற பேங்கு பேப்பருல கூட தாமரப்பூவ அடிச்சி வுட்டுட்டாங்களாம். இத்த விட பெரிய கூத்து இன்னான்னா கேரளாவிலே வூர்லக்கீற வழிகாட்டி கல்லுல்லாம் தாமரப்பூவ வரஞ்சி தள்ளிட்டாங்கோ. கேரளாவிலே இனி ஒரு பயலும் புச்சா ஒரு வூருக்குப் போனா அது இன்னா வூரு, அங்கேர்ந்து அடுத்த வூருக்கு எத்தினி கிலோமீட்டருன்னுல்லாம் தெர்ஞ்சிக்கக்கூடாது.

"அரசாங்க சொத்து நம்ம சொத்து"ன்னு சொல்றதை கரீட்டா புர்ஞ்சிக்கின்னது காவிக்கட்சி தான்பா.

நாளைக்கே நம்ம வெங்காய நாயுடு "தாமரப்பூவ நாங்க பேங்கு பணக்கட்டுல அடிச்சதுக்கும், கேரளாவிலே வழிகாட்டி கல்லுல வரஞ்சி வெச்சதுக்கும் காரணம் எங்க கட்சி சின்னங்கிறதால கெடியாதுபா. தாமரப்பூ நம்ம தேசியப்பூ, அத்த ஆரும் மறந்துடக்கூடாதுன்னு ஃபீலாயி தான் அப்டி செஞ்சோம்"ன்னு டகிலு வுட்டாலும் வுடுவாரு.

No comments: