Monday, April 19, 2004

தீரனைய்யா இது கரீட்டா???

எலிக்ஸன் நெருக்கத்துல வர்றப்போ நம்ம விகடன் பார்ட்டிங்கோ எலிக்ஸன் ஜோக்குல்லாம் எட்த்து வுடுறாங்களோ இல்லியோ அரசியல்வாதிங்கோ சொம்மா சோக்காவே ஜோக்கு எட்த்து வுடுறாங்கபா.

மொதோ ஜோக்கு நம்ம காவி வேட்டி பார்ட்டி ராசா (பொது செயலாளராம்ல்ல) "ரஜினி அறிக்கையால் மக்கள் மனதில் மாற்றம் வந்திருக்கிறது"ன்னு சொல்லிக்கீறாரு. நானும் அத்தான்பா சொல்றேன். சூப்புரு கொரலு வுட்டதும் "அட போப்பா, இனிமே நீ கொரலே வுட வாணாம். அல்லாம் எங்களுக்கு தெர்யும். நீ வுண்டு ஒண்ணோட எமயமல வுண்டுன்னு போயி குந்திக்கோ"ன்னு தான் மக்கள்ஸ் மன்ஸுல வுண்டாய்க்கீது. அத்தான ராசா நீங்க சொல்ல வர்றது?

நேத்திக்கி நட்ந்த இன்னொரு ஜோக்கு சொல்றேம்பா. மரவெட்டி கட்சில சீட்டு குட்க்கலைன்னு கோச்சிக்கின்னு போயி காவி வேட்டி கட்டிக்கின்னாரே தீரரு, நாபகம் கீதா. அவுருக்கு காவி பார்ட்டிங்களும் சீட்டு குட்க்கல, அத்து வேற மேட்டரு. அந்தத் தீரரு நேத்து காவிக்காரங்கோ கட்டடத்துல குந்திக்கின்னு "நா பெரிய மரவெட்டியோட ஊளலைல்லாம் வெளில கொணாரப் போறேன்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

நைனா, நா ஒண்ணு கேட்டா கோச்சுக்கக்கூடாதுபா. நீ எத்தினி காலமா அந்த மரவெட்டி கூட குந்திக்கின்னு ஒரே தட்டுல சோறு துண்ணு ஒரே குவாட்டர கட்டிங் வுட்டுக்கின்னு இர்ந்த. அப்போல்லாம் மரவெட்டி செய்த ஊளலு கண்ணுக்கு தெர்யலையா? அவரு புள்ளிங்கோ, கொயிந்த, குட்டிக்குல்லாம் சொத்து சேத்தாருன்னு கண்ணுக்கு தெர்யலையா? வூருல வெட்டுன மரத்துக்கெல்லாம் சேத்து வச்சி தைலாபொரத்துல மரமா வளத்து ஒரு பண்ண வச்சிக்கீறாரே, அத்தெல்லாம் மூணு நாலு வர்சமா சொம்மா குந்திக்கின்னு பாத்துக்கின்னு தான இர்ந்த.

கச்சில சீட்டு குட்க்கலைன்னதும் சொம்மா ஃபீலிங்ஸு பிச்சிக்கிச்சு போல. இப்போ வந்து "நா ஒண்ணோட ஊளலைல்லாம் வெளில கொணாரேம் பாரு"ன்னு ஃபிலிமு காட்றியே இத்து நாயமா நைனா. மன்ஸனா இர்ந்திருந்தா கச்சில குந்திக்கின்னு இர்ந்தப்போவே சொல்லிருக்கணும்பா, இப்போ வந்து கொரலு வுடாதே.

No comments: