Thursday, April 01, 2004

மானம் காத்த மகாராசாக்கள்



நம்ம கங்குலி அண்ணாத்தே என்னிக்கி கீளே உளுந்து முதுவப் பேத்துக்கின்னாரோ அன்னிலேர்ந்து நமக்கு நல்லகாலம் சும்மா அள்ளி அள்ளி குடுக்குதுபா.

தலீவரு இல்லாத கூட்டம் ஒண்ணுமில்லாம பூடும்ன்னு தா அல்லாரும் சொல்லுவாங்கோ, நம்ம இந்தியா கிரிக்கெட்டு டீமுக்கு அத்தெல்லாம் தெர்யாது.மன்ஸு இர்ந்தா அட்ச்சி பின்னி பீறாய்ஞ்சிடுவாங்கோ. மன்ஸு இல்லாங்காட்டி தலீவரு இர்ந்தா இன்னா இல்லாங்காட்டி இன்னா "நா ஏ இஸ்டப்படி தா நயினா ஆடுவேன்"னு அடம் புட்ச்சு புட்டுக்குவாங்கோ.

இந்த தபா கொயிந்திங்களுக்கு மன்ஸு சொம்மா கொளத்துல புட்ச்ச வெராலு மீனு கணக்கா துள்ளிக்கின்னு கீது போல. அட்ச்சி தூள் கெளப்புறாங்கோ. 1954லேர்ந்து இப்போ தா மொத தடவையா நம்ம கொயிந்திங்கோ நம்ம பங்காளி நாட்டுக்காரன கெலிச்சிக்கீறாங்களாம்ல. கேக்கவே குப்ஸாமி மன்ஸு சொம்மா குஜாலாகீதுபா.

இந்த தபா கெலிச்சதுல மெயினு கொயிந்திங்க யாருன்னு பாத்தா ஒரு பெர்ய சிங்கம், ரெண்டு குட்டி சிங்கங்கள தான்பா சொல்லணும். நம்ம கும்ளே சிங்கம் எப்டி பந்து போடும்ன்னு ஆருக்கும் தெர்யாது. காலு பக்கமா குத்தி உள்ளார பந்த இளுக்கும் ன்னு நென்ச்சிக்கின்னு மட்டைய தூக்குன பந்து நேரா வந்து முட்டிக்கால்ல இடிக்கும். இத்த பாக்குற அம்பயரு "ராசா, முட்டிக்கால்ல பந்த வாங்கிக்கின்னியா, வெளில போபா"ன்னு வூட்டுக்கு அனுப்பிடுவாரு. பங்காளி நாட்டுக்காரங்கள்ல பல மக்களுக்கு இந்த டெக்கினிக்கு தெர்யாது, வந்தவன் அத்தன பேரும் முட்டிக்கால்லயே பந்த வாங்கிக்கின்னு வெளில பூட்டாங்கோ.

குட்டி சிங்கம் நம்பர் ஒண்ணு: பதான் தம்பி. சொம்மா சொல்லக்கூடாதுபா, மெய்யாலுமே நம்ம கபீலு அண்ணாத்தேக்கு பெறவு சோக்கான சிங்கம்ன்னா இந்தக் குட்டிச்சிங்கம் தான். மீச கூட இன்னும் மொளைக்க ஆரம்பிக்கல, ஆனா பங்காளிங்க அல்லாரும் நம்ம தம்பிய பாத்தாலே பேண்ட நெனைச்சிக்கின்னு போய்டுறாங்கோ. இந்த மூணு டெஸ்டு இல்ல தம்பி, இன்னும் முண்ணூறு டெஸ்ட்டுல கலக்குபா

குட்டி சிங்கம் நம்பர் ரெண்டு: சேவாக்கு. மச்சி சேவாக்குக்கு இப்போ சுக்ரதச போல. பவுலரு போடுற பந்து குத்தி மேல கெளம்புறப்போவே "நைனா என்னிய அட்ச்சிப்புடாதே"ன்னு கதறிக்கின்னே வர்த்தாம். மச்சி அந்த அடி அடிக்கிறாராம். பந்த மட்டும் அடி நைனா, அரசியல்ல உன்னிய உள்ளார இளுக்கப் பாத்தா மாட்டிக்காதபா.

கங்குலி அண்ணாத்தேக்கு மெயினா ஓ போடணும்பா. காமராசர விட பெர்ய ஆளாப்பூட்டாரு. காமராசரு "பட்த்துக்கின்னே கெலிப்பேன்"னு டையலாக்கு வுட்டு புட்டிக்கின்னாராம். ஆனா நம்ம அண்ணாத்தே அப்படி இல்லே, பட்த்துக்கின்னே ரெண்டு தபா கெலிச்சிப்புட்டாரு. அண்ணாத்தே, நீயி ஆடவே வாணாம், இப்டியே காலாகாலத்துக்கும் முதுவு, களுத்துன்னு எத்தாவது ஒண்ணு ஒட்ச்சிக்கின்னு கெட, அத்தான் ஒனக்கும் நல்லது, நம்ம கிரிக்கெட்டு கொயிந்திங்களுக்கும் நல்லது.

No comments: