Thursday, April 15, 2004

தொள்ஸி தங்காச்சி, பெரபு அண்ணாத்தே சவாரிக்கு ரெடி

ஆஹா வாள்க்கைலே குப்ஸாமி மொதோ தபா செம்ம குஷியாக்கீறான்பா. முன்னே ஒருக்கா இத்தே கேள்விய வேற எடத்துல கேட்டப்போ பத்து நாளு தப்பு தப்பா அல்லாரும் பதிலு சொன்னாங்கோ. ஒர்த்தரு தேவான்னாரு, ஒருத்தரு இல்லபா காளிதாசன்னு சொன்னாரு. அல்லாருக்கும் தேவா பயாஸ்கோப்புல சொன்ன மேட்டரு நாபகம் வந்திச்சு, ஆனா மீசக்கார நண்பன அல்லாரும் மறந்துபூட்டாங்கபான்னு ஒரே ஃபீலாய்டுச்சு என்க்கு.

ஆனா இந்தத் தபா கேள்விய கேட்ட ஒடனேயே பெரபு அண்ணாத்தே கரீட்டா பதில சொல்லிப்புட்டாரு. தொள்ஸி தங்காச்சி (வய்ஸுல யக்கா) "குப்ஸாமி பதிலு இன்னாபா பதிலு, நா ஒனக்கு பாட்டையே எட்த்து வுடுறேன்"னு கரீட்டா பாட்டையும் எட்த்துவுட்டாங்கோ. ரெண்டு பேருக்கும் நெம்ப டாங்ஸுபா.

மீசக்கார தோஸ்துங்காட்டியும் எங்கக் குப்பத்துல பொறந்துருந்தா "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்"ன்னு பாடாம "டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா"ன்னு தான் ஃபீலாய்ருப்பாரு. மிஸ்ஸாயிடுச்சுபா.

குப்ஸாமிப்ரியரு "நீ போட்டுக்கீற பாரதி படம் ஞாநிக்கு சொந்தம்"ன்னு சொன்னதால வேற படம் மாத்தியாசுபா


இன்னிக்கு குப்ஸாமி ரிக்ஸாவிலே பெரபு அண்ணாத்தேக்கும் தொள்ஸி தங்காச்சிக்கும் ஒரு சூப்புரு சவாரி.

வர்ட்டா....

No comments: