Thursday, May 27, 2004

வெளம்பரமா பிட்டுப்படமா???

நம்ம டிவி பொட்டில வர்ற வெளம்பரம் எல்லா இன்னாமா கீதுபா. வெளம்பரப் படம் எடுக்கிற அண்ணாத்தேங்க ஷகீலாவ வெச்சி எதுனா பிட்டு படம் எட்த்தாங்கோன்னு சொம்மா பிச்சிக்கின்னு ஓடும்.

இப்போ கொஞ்ச நாளா செவனப்புன்னு ஒரு மேட்டருக்கு வெளம்பரம் வர்தே ஆர்னா பாத்திங்களா. செவனப்பு குடிக்கற்த்துக்கு வர்ற வெளம்பரமில்ல அது, பாக்குறதுக்கு தான். வளக்கம் போல செனப்பு பொம்மய காட்றாங்கோ. அப்பாலிக்கா அந்த பொம்ம செம்மய்யா ஜொள்ளு விடுது. இன்னான்னு பாக்க சொல்லோ ஒரு யக்கா இத்துணூண்டு துணிய போட்டுக்கின்னு பீச்சாண்ட நட்ந்து வர்து. வந்து செவனப்ப எட்த்து குடிக்கிது.

குடிக்க சொல்லோ குடிக்கிற பாட்டில டைரக்டரு காட்ட மாட்டேங்கிறாரு. காமிராவ கீள கொண்டாந்துடுறாரு. பிட்டு படத்துல காட்டுற மேரியே நல்லா க்ளோஸப்புல அல்லாத்தையும் காட்ராங்கோ. குட்ச்சி முட்ச்சிட்டு அந்த யக்கா ஒரு இத்துணூண்டு மேல்துணிய எட்த்து சுத்திக்கின்னு போய்டுது. அப்போவும் டைரக்டரு சொம்மா வுடாம, பின்னாடியே காமிராவ அலைய வுட்டுக்கீறாரு.

அட்த்தது இன்னொரு வெளம்பரம். ஒரு சின்ன பொண்ணும் ஒரு ஆண்ட்டியும் கடைக்கு வராங்கோ. ஒரு வெடலப்பையன் குண்சா பின்னாடி வந்துக்கின்னு கீறான். சின்னப்பொண்ணு ஆண்ட்டிய பாத்து "இன்னிக்கி என்க்கு ஓசி சோறு"ன்னு சொல்லி சிரிக்கிது. பையனும் வந்து வழிஞ்சிக்கின்னே எதோ வழி கேக்குறான். பையன் போவ சொல்லோ சின்னப்பொண்ணு ஆண்ட்டிக்கிட்டே "எனுக்கு ஓசி சோறு கண்டிப்பா உண்டு"ன்னு சொல்லிக்கின்னே எஸ்கேப்பாவுது. பையன் இப்போ அண்ட்டி பின்னாடி வர்ற மேரி காட்றாங்கோ. ஒடனே "டொட்டோடைன்ன்ன்ன்"ன்னு ஒரு சத்தம் குட்த்து விஐபி ப்ரான்னு காட்றாங்கோ.

இவுங்களுக்கு கீற கற்பன தெறத்துக்கு வெளம்பரப்படம் எடுக்காம பிட்டு படம் எட்த்தா மெய்யாலுமே படம் வெள்ளி வெளா தான். வாள்க பாரதம்.

1 comment:

Anonymous said...

இனி பிட்டு படம் பாக்க தேவை இல்லை. வெளம்பரம் பாத்த போதும் போலிருக்கே.