Friday, May 14, 2004

ஜக்குபாய் ஆட்டைக்கு மறுக்கா வராரு

தலீவரு ஜூட்டு வுட்டுக்கின்னாருக்கு நேத்து நூஸ் பாத்து ஃபீலாகி குப்ஸாமி கொரலு வுட்டுட்டான். இன்னிக்கு மசாலா டைரக்டரு "இன்னாமா கண்ணுங்களா நம்ம பொயப்புக்கே ஒல வெக்கிறிங்கோ. அத்தெல்லாம் அரசியல்ல இன்னா நடந்தாலும் நம்ம தலீவரு படத்த பொங்கலுக்கு வெளில வுடுறாரு"ன்னு பொலம்பிக்கீறாரு.

தலீவா, பாபா மேரி மன்ஸன சுண்டக்கஞ்சி குட்ச்சி சுத்திக்குன்னு இர்க்க வுடாம ஜக்குபாய சொம்மா சுர்ருன்னு ஏறுற பட்டசரக்கு மேரி குடுப்பா. சொம்மா இன்னும் எளம வூஞ்சலாடுதுன்னு நென்ச்சிக்கின்னு ஐஸ்வர்யா, கரீனான்னு கூட்டியாராம ஒன்னோட ரேஞ்சிக்கு ஏத்த மேரி எதுனா ஒரு மீனாவோ ரம்யா கிருஸ்னனையோ புட்ச்சி பட்த்துல போடுபா. இல்லாங்காட்டி சோடிய ஆக்ட்டு கொடுக்கிறங்கோ ஒன்னோட பொண்ணு மேரி தெர்யும். இத்த தலீவரு மட்டும் சொல்லலைபா, அல்லா தாத்தா, சித்தப்பா நடிகருங்களுக்கும் குப்ஸாமி சொல்லிக்கீறேன், அக்காங்.

No comments: