Saturday, May 22, 2004

மக்கள் நலம்

வண்க்கம் மக்களா, எப்டிக்கீறிங்கோ. ஒரு வாரமா வலப்பூவாண்ட சவாரி போனது பெண்டு களண்டு போச்சுபா. குண்ஸா எதுனா வூத்திக்கின்னா தான் சரி வரும் போல.

சிங்கு தாத்தா நேத்தி சோக்கா போயி பெரதமரு சீட்டுல குந்திக்கின்னாரு. ரொம்ப நல்ல மன்ஸன். நம்ம நாடு நல்லா மேலே வர இவரு எதுனா பண்ணுவாருன்னு நம்புவோம்.

சிங்கு தாத்தா பெரதமரு ஆனது இப்போ மேட்டரே கெடியாது. நம்மூரு தாத்தா "எனுக்கு சீட்டு வாணாம் எனுக்கு சீட்டு வாணாம்"ன்னு சொல்லிக்கின்னு இர்ந்தாரு பாருங்கோ, அத்தான்பா செம்ம கலாசல் காமெடி. நம்மூர்ல கண்ணால சோறு போடுறப்போ செலரு "சோறு வோணுமா"ன்னு கேட்டா "வாணாம் வாணாம்"ன்னு பீச்சாங்கையால தள்ளுவாங்க, ஆனாக்கா சோத்துக்கையி "போடுபா போடுபா"ன்னு சிக்னலு குடுக்கும். அப்டி தான் நம்ம தாத்தா செஞ்சாரு.

டில்லிக்கு ஆதரவு கடுதாசி குட்க்கிறேன்னு கெளம்பி போயி அங்கனயே குந்திக்கின்னு இர்ந்தாரு. இன்னா மேட்டருன்னு பாத்தா தன்னோட பேராண்டிக்கு ஒரு காபினெட்டு மினிஸ்டரு வோணுங்கிறதுக்கு தான் இவ்ளோ ஆட்டமும். கூடவே அட்ட கணக்கா பேராண்டியும், மெயின் அல்லங்கை பாலுவும் ஒட்டிக்கின்னே இர்ந்தாங்கோ. தாத்தாவும் போட்ட பிளான்படி பேராண்டிக்கு காபினெட்டு வாங்கி குட்த்துட்டாரு.

தாத்தாவுக்கு கொஞ்சமும் கொறஞ்சவரு இல்ல நம்ம மரவெட்டி ஐயா. அவரும் டெல்லில போயி குந்திக்கின்னாரு. இவுரு தான் கச்சி ஆரம்பிக்க சொல்ல "நானோ என்னோட வூட்ல இர்ந்தோ ஆரும் எந்தப் பதவியும் ஏத்துக்க மாட்டோம்"ன்னு கொரலு வுட்டவராச்சே, இவுரு இன்னாத்துக்கு இப்டி சுத்திக்கின்னு இர்க்காருன்னு குப்ஸாமியும் ரொம்ப அப்பாவியா நென்ச்சிக்கின்னு இர்ந்தான். மரவெட்டி ஐயா மவன எலிக்ஸன்ல நிறுத்தாமலே காபினெட்டு வாங்கி குட்த்துப்புட்டாரு. அத்தான் ராஜ்யசபா எம்பி சீட்டு கீதுல்ல....

இத்தெல்லாம் பாக்குறப்போ நம்ம பொர்ச்சி தலீவரு ஒரு பயாஸ்கோப்புல பாடுன பாட்டு தான்பா நாபகத்துக்கு வர்து. அத்த அப்போவே நம்ம தாத்தாவ பாத்து தான் பாடி வெச்சாரு, ஆனா தாத்தா தான் இன்னிய வர மாறவே இல்ல.

பாட்டு இன்னான்னு தெர்தா????

"மக்கள்நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்"

3 comments:

சுந்தரவடிவேல் said...

//குண்ஸா எதுனா வூத்திக்கின்னா தான் சரி வரும் போல//

இன்னா தலீவா, இப்பால வர்சொல்லோ பேட்ரிக்கட்ட, ஊம்த்தங்காய் மர்ந்து பூட்சா? :))

Unknown said...

நா இஞ்சி கசாயத்த வூத்திக்கணும்ன்னு சொன்னேன்பா....

Anonymous said...

இன்னாபா... சேதுசமுத்திரம் திட்டம், குளச்சல் துறைமுக திட்டம் எல்லாத்தையும் நிறைவேத்து வைக்கிறதுக்குதானே பெரியவர் பிரஷர் குடுத்து சீட் வாங்கியிருக்கு¡ரு.. அதைப்போய் குத்தம் சொல்றீயே...நியாயாமா?