Saturday, May 08, 2004

வருது வருது வீராணம் வருது

நம்மூர்ல பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யணும்ன்னு எளுதிக்கீது போல. வங்கக்கடல்ல பொயல்சின்னம் வந்து அஞ்சு நாளு மள பொலந்து கட்டுனதுல இப்போ அல்லாரும் கொஞ்சம் குஜாலாக்கீறாங்கோ.

மளப் பெஞ்சதுல அம்மாவும் குஷி ஆயிட்டாங்க போல, "வீராணத்துல தண்ணி ஃபுல்லாக்கீது, இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைல குடிக்கத் தண்ணி இல்லேன்னு ஒர்த்தரும் கொரலு வுடாத ரேஞ்சில கொண்டாறேன்"னு சொல்லிக்கீறாங்கோ. வீராணத்துலேந்து தண்ணிக் கொண்டாரது, அத்துக்கு ஒலக பேங்கு துட்டு குட்க்கிறது அல்லாம் சர் தான் தாயி. கேக்க ஜந்தோஷமா தான் கீது.

ஆனா ஒரு மேட்டர மன்ஸுல வெச்சிக்கோங்கபா. பக்கத்து இஸ்டேட்டுப் பார்ட்டிங்கோ தண்ணி தருவாங்கோங்கிற நம்பிக்க இப்போ அல்லாருக்கும் பூட்ச்சு. ஓடுற ஆத்தை எல்லாம் தேசியமயமாக்குறதும் எலிக்ஸன் ஸ்டண்டு மேரி ஆயி பூட்ச்சு. பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யும் ஆயிட்ட நெலமைல பெய்யிற மளய கொஞ்சம் மண்ணுக்குள்ள சேர்த்து வெக்க ஆர்ன்னா முயற்சிப் பண்ணிங்கன்னா நல்லா இர்ப்பிங்கோ.

வூரு ஒலத்துல கீற ஏரி கொளமெல்லாம் தூரு வாராம அடஞ்சி கெடக்குது. அத்த அப்பப்போ தூரு வாறிக்கின்னு இர்ந்தா இப்டி அடிக்கிற மள கொஞ்சமாவது அதுல போய் நிக்கும், அல்லாங்காட்டி அவ்ளோ தண்ணியும் வீணால்ல போவும். அந்தக் காலத்துல ராசாவெல்லாம் கொளம், ஏரின்னு வெட்டி அத்து தூரடஞ்சு பூட்ச்சின்னா தூரு வாரிக்கின்னு இர்ந்தாங்கோ. நீங்கல்லாம் புச்சா ஏரி கொளம் வெட்ட வாணாம். இருக்கிறத பத்திரமா பாத்துக்கின்னு அத்துல எதுனா தண்ணிய புட்ச்சி வெக்க முடியுமான்னு பாருங்கபா. மக்களுக்கு மதமாற்றத் தடைச் சட்டத்தல்லாம் விட குடிக்கிற தண்ணி ரொம்ப முக்கியம்.

No comments: