Tuesday, May 11, 2004

அரோகரா ஆந்திரா

எலிக்ஸன் முடிஞ்சி ஆரு லீடிங்ல வருவாங்கோன்னு கோடு போட்டுக் காட்டுற மேரி ஆந்திரா எலிக்ஸன் ரிசல்டு வந்துடுச்சி. கைச்சின்னம் பார்ட்டிங்கோ அவங்களே எதிர்பாக்காத ரேஞ்சில கெலிச்சிப்புட்டாங்கோ. ஆனாலும் இவ்ளோ பெர்ய தர்ம அடிய நாயுடுவுக்கு தெலுகுப் பார்ட்டிங்கோ குட்த்திருக்க கூடாது.

மேட்டர் முடிஞ்சிப்போச்சு, இனி ஆவ வேண்டிய காரியத்த கவனிக்கணும்.

கைச்சின்னம் பார்ட்டிங்கோ இனியாவது அவங்களுக்குள்ள அட்ச்சிக்காம மக்களுக்கு எதுனா செய்ய நெனைக்கணும். கெட்ச்ச சான்ஸ ஊஸ் பண்ணி எவ்ளோ துட்டு சம்பாரிக்கலாம்ன்னு நெனிக்காம மக்களுக்கு எதுனா செய்யணும்.

நைனா நாயுடு, நீ கவலப்படாத நைனா. இத்த விடப் பெர்ய அடியெல்லாம் தமிள்நாட்டு தாத்தா வாங்கிக்கீறாரு. ஆனா இந்த எலிக்ஸன்ல பாத்தல்ல, ஒரு மாசம் சொம்ம பம்பரம் கணக்க சொலண்டு ஓட்டு சேகரிக்கிறாரு. தமிள்நாட்டுல காமராஜருக்கே ஆப்பு அட்ச்சாங்கோ. ஆந்திராவுல அத்த மேரில்லாம் இல்லாம குப்பம் ஆளுங்கோ ஒன்னிய கெலிக்க வெச்சாங்களே, அத்த நென்ச்சி சந்தோஷப்படுபா.

இந்த தபா பூட்ச்சின்னா இன்னா அட்த்த தபா பாத்துக்கலாம். இனிமேலாவது சினிமாக்காரங்கள நம்பாம ஒன்னிய நம்பு நைனா. ஒரு நல்ல எதிர்கச்சிக்காரன்னா எப்டி இருக்கணும்ன்னு காட்டு, அப்டி செஞ்சின்னா அட்த்த தபா சோக்க கெலிக்கலாம். ரிசல்ட்டு வந்ததும் கைச்சின்னங்காரங்களுக்கு வாள்த்து சொல்லிப்புட்டு சலாம் வெச்சி வெளில வந்தியே, மன்ஸன்பா நீயி. நல்ல எதிர்கச்சியா இர்ந்து அட்த்த தபா ஆட்சிய புடிபா. வர்ட்டா...

No comments: