Saturday, May 01, 2004

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே தண்ணியில்லாம திண்டாட்டம்

நேத்து ஆர்ல்லாம் சண்டிவி நூஸ் பாத்திங்கபா. நேத்திய நூஸ்ல ஒரு மறக்க முடியாத மேட்டர காட்னாங்கோ. வர்ற அஞ்சாந்தேதி டெல்லி பெர்ய தாத்தா ஓட்டுக் கேக்க வர்றாரு. தாத்தா வர்ற நேரத்துல வீராணத்துலேந்து சென்னப்பட்டணத்துக்கு தண்ணி கொண்டாந்துட்டோம்ன்னு காட்ட வேண்டி அம்மா ஒரு ஜூப்புரு ஐடியா பண்ணிக்கீறாங்கோ.

செங்கல்பட்டாண்ட லாரி லாரி கொளாய்ல தண்ணி வூத்தி அத்த அஞ்சாந்தேதி தாத்தா வர்ற நேரத்துல ஓப்பனிங் வுடப்போறாங்களாம். அஞ்சாந்தேதி வரைக்கும் அந்தக் கொளாய்ல எவ்ளோ தண்ணி வூத்துவாங்கோன்னு அம்மாவுக்கும் கார்ப்பரேஸனுக்கும் தான் வெளிச்சம்.

லாரிலேந்து தண்ணி கொளாய்ல வூத்த சொல்ல நமக்கு வயிறு எரியுதுபா. கொளாய்ல பாதி தண்ணி வெளில பாதி தண்ணின்னு ஓடுது. நூஸ்ல காட்டுறப்போவே ஒரு அம்பது லாரி நிண்ணுருக்கும். அப்பாலிக்கா எத்தன லாரியோ.

அவனவன் சென்னப்பட்டணத்துல களுவத் தண்ணியில்லாம கஸ்டப்படுறான். அம்மா இன்னான்னா தாத்தாகிட்டே சீன் காட்றதுக்கு கொளாய்ல லாரி தண்ணி வுடுறாங்கோ. கொளந்தைக்கு சோறு வூட்னதா காட்றதுக்கு அம்மாக்காரி வர்ற நேரத்திலே வேலக்காரி கொளந்த வாயில சோத்துப்பருக்கய தடவி வுட்டாளாம். அந்தக் கதயா தான் கீது நம்ம அம்மா செய்ற மேட்டரும்.

No comments: