Sunday, September 12, 2004

சேது சேது சேது.....

நம்மூருல இப்போ ஆரெல்லாம் சேதுவா அலஞ்சிக்கின்னு கீறாங்களோ இல்லியோ நம்மூரு அர்சியல்வாதிங்கோ சேதுவா மாறிட்டாங்கோ. ஆரப் பாத்தாலும் "நாந்தான் சேது"ன்னு சொல்லிக்கிறாங்கோ. அல்லாருக்கும் ஒரு இஸ்டெப்பு மேல ஏறி நின்னுக்கின்னு "நாந்தான் சேது"ன்னு அம்மா கூவோ கூவுன்னு கூவிக்கின்னு கீறாங்கோ. வுட்டாட்டாக்கா இதுக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி நூஸ் குட்ப்பாங்கோ போலக்கீது.

இப்போ இன்னா மேட்டருன்னா அம்மா கச்சிலேந்தே அம்மாவுக்கு ஆப்பு வெக்க ஆளு ரெடி. திமுக மதிமுகன்னு ஒரு ரவுண்டு வுட்டுப்போட்டு இப்போ அம்மா கச்சில ஐக்கியமான கே எஸ் ராதாகிஸ்ணன் தான் அந்தப் பார்ட்டி. ஆராரு சேது சமுத்திரம் வரணும்ன்னு பேசினாங்கோன்னு புட்டு புட்டு வெச்சிப்புட்டாரு. அவுரு சொல்றத வெச்சி பாத்தாக்கா நடையா நடந்துக்கின்னு கீற வைகோ தான் எதுனா கொஞ்சம் சொல்லிக்கலாம். அம்மா கூட கொஞ்சூண்டு எதுனா பேசிருப்பாங்கோ போல, ஆனா நம்ம தாத்தா அதுக்காக ஒரு கீரைய கூட கிள்ளிப்போடலையாம். ஆனா வூரு முளுக்க போஸ்டரா அட்ச்சி வொட்டிக்கீறாங்கோ. தாத்தா கைல அத்த பத்தி ஆர்னா கேட்டாக்கா பெர்ய மன்ஸன் கணுக்கா "இது எங்க கூட்டணி கெலிச்சதுபா, ஆளாளுக்கு தனித்தனியா கூவாதிங்கோ"ன்னு சொல்லிக்கீறாரு. அதுக்கு மேல எதுனா கொரலு வுட்டா "தோடா இந்தச் சேது வர்றதுக்காக தான் நா டெல்லியிலே கொடி புட்ச்சி கப்பல் துறை அமைச்சரா என்னோட ஆளுக்கு சீட்டு வாங்கி குட்த்தேன்"ன்னு சொல்லுவாரு. தாத்தா பலே கில்லாடி ஆச்சே....

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.