Saturday, October 16, 2004

கடிக்குமா காட்டாமணக்கு?

முன்னே ஒருக்கா நம்ம அம்மா "அல்லாரும் மாற்றுப்பயிர் வூஸ் பண்ணுங்கோ, தண்ணி கொறவா இர்ந்தாலும் இத்த செய்யலாம்"ன்னு கொரலு குட்த்தாங்கோ. அத்த பாத்து குப்ஸாமி கூட குஸியா கொரலு வுட்டான். அப்பாலிக்கா அதுலேயும் பாலிடிக்ஸு பண்ண ஆரம்பிச்சாங்கோ. வெவசாயிக்கு நல்லது செய்யலைன்னாலும் பர்வாயில்லே, அத்த போட்டாக்கா இந்தப் பெர்ச்சன வரும் அந்தப் பெர்ச்சன வரும்ன்னு நூஸ் குட்க்க ஆரம்பிச்சாங்கோ செல ஆளுங்கோ.

இப்போ ஸூனியர் வெகடன்ல நம்ம வெவசாய மினிஷ்டரு "அத்தெல்லாம் ஒரு பெர்ச்சனையும் வராது"ன்னு சொல்லி அதுக்கு வெளக்கமெல்லாம் குட்த்துக்கீறாரு. வெளக்கமெல்லாம் சோக்கா தான் கீது. ஆனா ஒரு மேட்டரு இடிக்கிது. காட்டாமணக்கு ஆறு வர்ஸம் களிச்சு தான் பைசா குடுக்குமாம். அதுவரைக்கு வளத்துக்கின்னு வரணுமாம். அம்மா கவுருமெண்ட்டு வெவசாயிங்கோ கைலேந்து காட்டாமணக்கு வாங்க தனியார் ஆளுங்கள ரெடி பண்ணிக்கின்னு கீதாம். சரி ரெடி பண்ணிடுறாங்கன்னே வெச்சிக்குவோம். அப்பாலிக்கா இன்னா நடுக்கும்? இன்னும் ஒரு வர்ஸம் களிச்சு எலிக்ஸன் வரும். அப்போ அம்மா கெலிக்காம தாத்தா கெலிச்சா இன்னா நடுக்கும்? அம்மா காட்டாமணக்கு வாங்குவாங்கோன்னு வெவசாயிங்க கைல காட்டிவுட்ட தனியாரு ஆளுங்கள தாத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாரு. அப்பாலிக்கா காட்டாமணக்கு போட்ட வெவசாயிங்கோ கன்னத்துல கை வெச்சிக்கின்னு தாத்தா ஆரைன்னா புச்சா கைய காட்டுவாரான்னு குந்திக்கின்னு இர்க்கோணும். வெளய வெச்ச காட்டாமணக்கு ஒன்னித்துக்கும் ஒதவாம பூடும்.

"வூருக்கு எளச்சவன் புள்ளையாரு கோயில் ஆண்டி"ன்னு ஒரு டயலாக்கு கீது, இனிமே அத்த மாத்தி "வூருக்கு எளச்சவன் எங்கூரு வெவசாயி"ன்னு மாத்திடலாம்.

No comments: