Monday, July 26, 2004

ஒண்ணும் தெர்யாத கொய்ந்த

 மொகமது அலி அண்ணாத்தே உள்ளே போய்க்கீற மேட்டரு நம்ம அல்லாருக்குமே தெர்யும். அவுரு ஒண்ணுமே தெர்யாத நல்ல மன்ஸன், அவுரு தாத்தா கைலே டிகால்டி காட்டினதால தான் வுள்ளே புட்ச்சிப் போட்டுட்டாங்கோன்னு அவுரோட வக்கிலு சொல்லிக்கீறாரு. கூடவே "ஒரு ஐபிஎஸ்ஸு வெளில வுட்டா ஓடியாப்பூடுவாரு. இன்னாத்துக்கு சாமீனு கொடுக்காம இர்க்காங்கோ"ன்னும் கேட்டுக்கீறாரு.

ஒரு கேஸ்ல இன்னாத்துக்கு இன்னாருக்கு சாமீனு கொடுக்காம இர்க்கோணும்? எந்தக் கேஸ்லேயாவது இன்னாரு ஐபிஎஸ்ஸு ஐஏஎஸ்ஸுன்னு பாத்தா சாமீனு கொட்க்கீறாங்கோ. கெடியாதே. இந்தாள வெளில வுட்டா இருக்கிற சாட்சிய கலைச்சுப்புடுவான்னு நீதிபதி ஐயாவுக்கு தோணுச்சின்னா சாமீன் கொட்க்க மாட்டாங்கோ. இஸ்டாம்பு பேப்பரு கேஸ்ல மீசக்கார அண்ணாத்தே மெயினு பார்ட்டின்னு சிபிஐ நம்புறாங்கோ, அப்டி இர்க்கசொல்லோ எப்டி அவருக்கு சாமீன் கொடுக்க முடியும்? இன்னா வக்கிலய்யா இத்தெல்லாம் ஒங்களுக்கு தெர்யாதா?

No comments: