Wednesday, June 02, 2004

கேள்வி கேக்குறவன் கேனையன்

கேள்வி கேக்குறவனையும் குந்திக்கின்னு பாக்குறவனையும் கேனையனா ஆக்குற டிவி நிகள்ச்சி எது தெர்யுமாபா. லைவ்வா காட்டுறேன்னு சொல்லிக்கின்னு ஆர்னா ஒரு பெர்ய மன்ஸாள கூட்டியாந்து ஒக்கார வெச்சி கேள்வி கேக்குறாங்கோ பாருங்கோ அத்தான் அந்த நிகள்ச்சி.

நம்ம பொதிக டிவி கீதே, அதுல ராத்திரி ஆனாக்கா யார்ன்னா சினிமாக்காரங்களையோ இல்ல வேற ஆரையாவது கூட்டியாந்து கேள்வி கேப்பாங்கோ. நேத்தி நைட்டும் அப்டி ஒரு பெர்ய மன்ஸன கூட்டியாந்தாங்கோ. ஐயா மெய்யாலுமே பெர்ய ஆளு தான். மொனைவரு கொய்ந்தசாமி அய்யா. அய்யா அண்ணா பல்கலைக்களகத்துல இர்ந்தவரு, இப்போ எணைய தமில் பல்கலைக்கழகத்த நட்த்திக்கின்னு வர்றவரு.

முன்னால குந்திக்கின்னு இர்ந்து கேள்வி கேட்டவரும் சொம்மா இல்ல, அவரும் எதோ பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சவராம். இந்த மேரி லைவ்வா காட்ட சொல்லோ முன்னால குந்தி இர்க்குறவங்கோ டெலிபோன்ல ஆர்ன்னா கேள்வி கேக்கசொல்லோ வந்துக்கீற பெர்ய மன்ஸனுக்கு புர்யாங்காட்டி எட்த்து சொல்லோணும். ஆனா முன்னால குந்திக்கின்னு இர்ந்த ஆளு அத்த ஒய்ங்காவே செய்யல.

ஒரு ஆளு "கணினில தமிளு தான் சுலுவா கொண்டு வர்ற மேரிக்கீதுன்னு சொல்றாங்களே, அத்த பத்தி கொஞ்சம் வெளக்குங்கோ"ன்னு கேக்குறாரு. ஒடனே நம்மாளு கேள்விய ஒளுங்கா வெளங்கிக்காம அய்யாகிட்டே வேற என்னமோ மாத்தி எட்த்து சொன்னாரு. சரி அத்த வுட்டுத்தள்ளுன்னு வுட்டாச்சு. மறுக்கா ஒர்த்தரு "ஐயா, நா சொவடில்லாம் ஆராய்ச்சி பண்றவனுங்கோ. எனுக்கு அத்த பத்தி செல பொஸ்தகமெல்லாம் தேவப்பட்து. இண்டர்நெட்டுல போயி தேடுனாலும் ஒய்ங்கே கெடிக்க மாட்டேங்குது. அதுக்கு எதுனா சொல்லுங்கய்யா"ன்னு கேட்டாரு. முன்னால குந்திக்கீறவரு "அதுல்லாம் மேட்டரே இல்லபா, நீயே ஒரு மென்பொருள எய்திடு"ன்னு சொல்லி லைன கட் பண்ணிட்டாரு.

கேள்வி கேக்குறவன் இன்னா கேக்குறான்னு பிர்யாம நீயா பதில் சொல்லி லைன கட் பண்ண இன்னாத்துக்குபா நீயி குந்திக்கின்னு கீற. கேள்வி கேட்டவன் எம்மா முக்கியமா கேக்குறான். அதுவும் அய்யா எணைய தமிளு பல்கலைக்களகமெல்லாம் வெச்சிக்கீறாரே, அவுருக்கு எதுனா தெர்யும்னு தானே கேக்குறான். கேள்வி கேக்குறவனுக்கு சம்மந்தமே இல்லாம நீயா ஒரு பதில சொன்னா இன்னாபா மீனிங்கு.

இத்த பாக்கசொல்லோ "கேள்வி கேக்குறவன் தான் கேனையன்"னு நென்ச்சிக்க வேண்டியதா கீது. டிவி பொட்டில எதுனா இத்த மேரி நிகள்ச்சி பண்றவங்கோ எதுனா சினிமா நடிகய கொண்டாங்கபா, அவுங்க கிட்டே எதுனா மக்கள பேச வுட்டுடுங்கோ. அத்த வுட்டுப்போட்டு ஆர்னா பெர்ய மன்ஸன கொண்டாந்து அப்பாலிக்கா அவங்களாண்ட கேள்வியும் கேக்க வுடாம பண்ணாதிங்கோ......

1 comment:

Anonymous said...

மாமே கலக்கிட்டே மாமே
நம்ம பொதிகை எப்பவுமே திருந்தாது நைனா!

கொரலு வுட்டது puthiyavan