Monday, February 13, 2006

புள்ளையப் பெத்தா

"தென்னையப் பெத்தா எளநீரு, புள்ளையப் பெத்தா கண்ணீரு"ன்னு ஒரு பளைய பாட்டுக்கீது. சோக்கான பாட்டுபா அது. இப்போ இன்னாத்துக்கு குப்ஸாமி அந்தப் பாட்டுன்னு கேக்குறிங்களா? மேட்டரு கீதுபா. இப்போ அந்தப் பாட்ட தான் நம்ம தமிழ்நாட்டு தாத்தா கலீஞரு பாடிக்கின்னு கீறாராம்.

இருக்குற 234 தொகுதிய கூட்டணிங்களுக்கு எப்டி பிர்ச்சி குட்கற்துன்னே தாத்தா மண்டைய பிச்சிக்கிறாரு (அங்க இன்னாகீது பிச்சிக்கன்னு யார்னா கேக்காதிங்கபா, அப்பாலிகா குப்ஸாமிக்கு பதிலு சொல்லத் தெர்யாது). இதுல உள்கச்சி மேட்டரு இன்னும் பிச்சிக்க வெக்கிது போல.

ஒரு சைடுல இஸ்டாலினு தலீவரு "நைனா எனுக்கு 50 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு, இன்னொரு சைடுல அளகிரி தலீவரு "நைனா எனுக்கு 40 சீட்டு குடு"ன்னு கேக்குறாரு. இருக்குற ரெண்டு புள்ளிங்கோ போதாதுன்னு வூட்டுக்காரம்மாவும் கேக்குறாங்கோ, அவுங்களுக்கு 5 சீட்டு வோணுமாம். பேராண்டிய வளத்துவுட்டு செண்ட்ரலுக்கு அனுப்பிப்புட்டா போச்சா, அவுருக்கு சீட்டு குடுக்கலன்னா ரீஜண்டா இர்க்குமா, அவுருக்கு 10 சீட்டு வோணுமாம்.

இப்டி அல்லாருக்கும் சீட்டுப் பிர்ச்சிக் குட்த்துட்டா தாத்தாவுக்கு எத்தன சீட்டு கீதுன்னு நெனிக்கிறிங்கோ? ஒரே ஒரு சீட்டு தான். அதுவும் அவுரு நிக்கிற தொகுதி மட்டும். இப்போ சொல்லுங்கபா, அவுரு இன்னா பாட்டுப் பாடுவாருன்னு???

1 comment:

யாத்ரீகன் said...

வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ..???

இந்த பாட்டு எப்டிருக்கு நைனா ???