Wednesday, February 16, 2005

காதலுக்கு ஆப்பு

இப்போல்லாம் பயாஸ்கோப்பு எடுக்குற ஆளுங்களுக்கு பிரியா நோட்டீஸு போட்டு அட்டிடீஸ்மெண்ட்டு குட்த்துக்கின்னு கீறாங்கோ அல்லாரும். இங்கிலிபீஸுல பேரு வெச்சின்னா நம்ம மரவெட்டி ஐயாவும் அவரோட அம்பு தம்பி மீசக்கார அண்ணாத்தேயும் சேந்து வெளம்பரம் குட்ப்பாங்கோ. ஆனா "காதல்"ன்னு பேரு வெச்சா அவங்களால ஒண்ணும் பண்ண முடியாது. படம் அம்பது நாளு பிச்சிக்கின்னு ஓடுனது "கொய்ந்த பசங்கோ" ஷங்கருக்கு பத்தாது போல. இன்னாடா பண்ணலாம்ன்னு ரோசன பண்ணி இஸ்கூலுல சொல்லி "நீயி அடிக்கிற மேரி அடி, நா அயுற மேரி அயுவுறேன்"ன்னு சொல்லிருப்பாரு போல. இஸ்கூலுக்காரங்கோ "ஐய்யோ எங்க இஸ்கூலு பேர பயாஸ்கோப்புல காட்டி எங்க இமேஜு பீஸா பூடும் போலக்கீது. அத்தால ஒண்ணு படத்த நிறுத்து, இல்லாங்காட்டி இருவது லச்சரூவா துட்டு குடு"ன்னு கேஸு போட்டுக்கிறாங்கோ.

இந்த கேஸு வந்த நேரம் படம் இன்னும் பிச்சிக்கின்னு ஓடும். ஷங்கருக்கு இன்னும் வந்து துட்டு கொட்டும். அப்பாலிக்கா இருவது இன்னா முப்பது வோணும்ன்னாலும் குட்த்துடுவாரு. செலவே இல்லாம அல்லா நூஸ்பேப்பருலேயும் காதலு படத்த பத்தி பேச வெச்சி படத்தையும் சொம்மா சோக்கா ஓட்டணும்ன்னா இருவது லச்சம் சொம்ம ஜுஜூபி மேட்டருபா, அக்காங்...

2 comments:

Anonymous said...

அப்பால நாஸ்த்தா துன்னுக்குனு இருந்தேன் வாத்தியாரே. நீ சொன்னது நூத்துல ஒரு வார்த்த கண்ணு. நம்ம கமலுகூட இத மேரி தான் டபாயிக்குதா. ஒன்னுமே பிரிய மாட்டெங்குது நைனா. நாம தான் திருட்டு இணையத்துலேர்ந்து காதல இஸ்துக்குனு வந்து பாத்துபுட்டு அப்பால இங்க வந்து கலாயிக்கிர கும்பலாச்ச வாத்தியாரே! நம்கு என்னா தேவ..... காதலு படத்துல கச்சாமுச்சான் ஆச்சா? இல்லியா? அவ்லோதான். அதுக்கு பதிலு வேர சொன்னிக்கினாங்க லுக்கு உட்டுக்க...

கொரலு வுட்டது kanchi films

Anonymous said...

சரியா சொன்னே மாமே... கண்ணாலத்துக்கு அப்பரம உர்ப்படியா எய்திட்டே...

கொரலு வுட்டது c/o platform