Saturday, August 07, 2004

ஆக்ட்டு வுடுறவங்களுக்கு வெளிநாட்டு ஆபீஸர் சீட்டு

இனிமே வெளிநாட்டு தூதரா ஆரைன்னா சீட்டுல குந்த வெக்கணும்ன்னா பயாஸ்கோப்புல ஆக்ட்டு வுடுறவங்கள தான் வெக்கணும் போலக்கீதுபா. மேட்டரு இன்னான்றிங்களா? ஈராக்குல நம்ம ஆளுங்க மூணு பேர இஸ்துகின்னு போயி வெச்சிக்கீறாங்கோல்ல. அந்த மேட்டருல "அமிதாப்பும் தர்மேந்திராவும் பேசுனா தீவிரவாதிங்கோ ஆளுங்கள வெளில வுட்றுவாங்கோ"ன்னு அந்த வூருல நமக்காக தீவிரவாதிங்களாண்ட பேசிக்கின்னு கீற ஷேக் அல் துலைமி சொல்லிக்கீறாரு.

இந்த ரோசனைய சொன்னது மட்டுமில்லே, "எனுக்கு ஆஸா பரேக்குன்னா இஸ்டம். அத்தால அம்முணிய வந்து பேச சொல்லுங்கோ. அப்பாலிக்கா நா இன்னும் இஸ்பீடா இந்த மேட்டருல பேசுறேன்"ன்னு சொல்லி சந்துல சிந்து பாடிக்கீறாரு. இன்னா ஷேக்கு, ஆக்ட்டு வுடுறவங்கோ மேல கீற ஷோக்கு இன்னும் போவலியா?

இந்த மேட்டர பட்ச்சதுலேந்து குப்ஸாமிக்கும் மண்டைக்குள்ள கிர்ர்ர்ர்ர்ருன்னு கீதுபா. ஆரைன்னா ரெண்டு பேர எஸ்கேப் பண்ணியாந்து வெச்சிக்கின்னு "இன்னாபா கொய்ந்திங்களா, ஒங்கள வெளில வுடணும்ன்னா சோதிகாவும், சினேகாவும் என்னாண்ட வந்து பேசணும். அப்பாலிக்கா தான் வுடுவேன்"னு கொரலு வுடலாமான்னு ரோசனையா கீது.

Tuesday, August 03, 2004

அடிச்சு ஆடும் ஐயா

நம்ம மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்களுக்கு எதுனா அட்ச்சி ஒடிக்காம இர்ந்தா தூக்கம் வராது போலக்கீது. "தினமலரு நூஸ்ல ஐயாவ பத்தி இன்னாத்து நைனா ராங்கா எய்தினே"ன்னு கடலூர்ல தினமலர் ஆபீஸை அட்ச்சி நொறுக்கிப்புட்டாங்களாம்.

நூஸ் பேப்பருன்னா ஆயிரம் எய்த தான் செய்வாங்கோ. இன்னிக்கு வாள்த்தி எய்துவாங்கோ நாளைக்கு தாக்கி எய்துவாங்கோ. எதுனா எய்திக்கின்னு போவட்டும் இர்ந்தா அவன் பெர்ய மன்ஸன். "இன்னாத்துக்குபா எய்துனே"ன்னு கேட்டு ராங்கு பண்ணா அவன இன்னான்னு சொல்றது.

அட்ச்சி நொறுக்கின ஆளுங்கோ கரீட்டா கம்பூட்டர் ரூம்ல பூந்து அட்ச்சி நொறுக்கினத பாத்தா இது நேத்து பேசி இன்னிக்கு அட்ச்ச மேரி தெர்லபா. படா சோக்கா பிளான் பண்ணி ரீஜன் கெட்ச்சப்போ வந்து சந்துல சிந்து பாடின மேரி கீது. ஆராருக்கு இன்னான்னா முன்பகையோ......

Monday, August 02, 2004

கடலை

இன்னாபா அல்லாரும் எப்டிக்கீறிங்கோ. ரொம்ப நாளா சின்னவூட்டை மட்டும் கவனிச்சிக்கிட்டு இர்ந்த குப்ஸாமி இப்போ பெர்ய வூடு பக்கமும் போய் வர ஆரம்பிச்சுட்டான்பா.

இன்னிக்கு கடல போடுறதுக்கு சொம்மா ரெண்டு மூணு டிப்ஸு பெர்ய வூட்டுல குட்த்துக்கீறேன். எப்டிக்கீதுன்னு பட்ச்சி சொல்லுங்கோ.

Thursday, July 29, 2004

சினி நியூஸ்

ஷாக் படம் பார்த்த ஒருவருக்கு ஹார்ட் அட்டாக்

தோடா, அந்தப் பட்த்துல ஆர்ட்டுக்கு ஆப்படிக்கிற மேரி இன்னா கீதுன்னு ஒண்ணுமே பிர்யல. இத்தோட ஒரிஜினலு பூத்தையே ஒரு சைடா பீடி வளிச்சிக்கின்னு முன்னால கீற சீட்டு மேல காலத் தூக்கிப் போட்டுக்கின்னு ஒரு ரேஞ்சிலே பாத்தேன், இதுல இன்னா கீதுன்னு தெர்யல. படம் பொட்டிக்குள்ள போவாம இர்க்கோணும்ன்னு தாடிக்கார தியாகராசரே எதுனா டகுல்பாஜி வேல பண்றாரா?

மீரா வாசுதேவனுடன் முரளி மன்மதராசா ஆட்டம்

நைனா, இன்னாது இது.... வயசுப் பசங்க ஆடுற ஆட்டமெல்லாம் வயசான காலத்துல ஆடாத ராசா, அப்பாலிக்கா எங்கனா சுளுக்கிக்கப் போவுது.....

தன்னுடைய முதல் படத்தில் நடித்த சுதாகருக்கு நடிகை ராதிகா தனது டிவி தொடரில் வாய்ப்பளிக்கிறார்

ஆகா இதாம்மே பாசம்ன்னு சொல்லுவாங்கோ. பளைய பாசம் வுட்டுப்போவாம அப்டியே கீது போல. இன்னாமே அட்த்து பிரதாப்பு போத்தன், கேப்டனுக்கெல்லாம் சான்ஸு வுண்டா?

Tuesday, July 27, 2004

சிவசேனா போர்டு

இனிமே பயாஸ்கோப்பு எட்த்தா அத்த சென்ஸார் போர்டுக்கெல்லாம் கொண்டுபோவ வாணாம்ப்பா, நம்ம சிவசேனா போர்டுக்குக் கொண்டுபோனாக்கா போதும். இன்னாத்துக்குன்னு கேக்றிங்களா? மேட்டர் கீது. நீ இன்னா தான் சென்ஸார் போர்டுல குந்திக்கின்னு கீறவங்கோ கிட்டே கைல கால்ல வுய்ந்து பயாஸ்கோப்புல வெட்டு வாங்கி, வாங்காம படத்த ரிலீஸ் பண்ணாலும் சிவசேனா வுடாது. "நீ எப்டி நைனா பட்த்த இந்த மேரி எடுக்கலாம்"ன்னு கேட்டு தியேட்டராண்ட வந்து கலாட்டா பண்ணும். போன மாசம் பொட்டப்புள்ளிங்கோ (Girl Friend) படத்துக்கு இப்டி குதிச்சிக்கின்னு இர்ந்துச்சு, இப்போ புச்சா வந்துக்கீற ஜூலி படத்துக்கும் குதிச்சிக்கின்னு கீது. அத்தால இனி ஆரும் சென்ஸார் போர்டுக்கு போவாம சிவசேனா போர்டுக்குப் போனா போதும். படத்த பெரச்சனை இல்லாம ஓட்டலாம்.

இத்த சொல்றப்போவே குப்ஸாமிக்கு வேற ஒரு டவுட்டும் வர்துப்பா. அத்து இன்னான்றிங்களா, சொல்றேன் சொல்றேன். முன்னே ஒருக்கா சின்னப்பையன் டாவடிக்கிற படத்துக்கு (Ek choti si love story) பெரச்சனை பண்ணாங்கோ, படம் செம்ம கலெக்ஸன், அட்த்தாப்ல பொட்டப்புள்ளிங்கோ பட்த்துக்கு (Girl Friend) பட்த்துக்கு பெரச்சனை பண்ணாங்கோ, அதுவும் செம்ம வசூலு (ஓடின ஓட்டத்துல இப்போ இஸா அக்கா தான் வூர் ஒலகத்துல பெர்ய இஸ்டாரு). இப்போ ஜூலி பட்த்துக்கும் சிவசேனா பெரச்சனை பண்ணுது. இந்தப் படமும் பிச்சிக்கின்னு போவும். இதுல நம்ம டவுட்டு இன்னான்னா இந்த மேரில்லாம் பெரச்சனை பண்ணுங்கோ, அப்போ தான் நம்ம படம் சூப்புரா ஓடும்ன்னு படத்த எடுக்கிறவங்களே சிவசேனா கைல சொல்லி இந்த மேரில்லாம் பண்ண சொல்றாங்களான்னு தான். சிவசேனாவுக்கும் இப்போ கோயிலு கட்ற மேட்டரை விட இதுல தான் இண்ட்ரஸ்ட்டு அதிகமா பூட்ச்சு போலக்கீது. ஓசில பயாஸ்கோப்பும் பார்த்து அதுல பெரச்சனையும் பண்ணலாம்ன்னா ஆருக்கு தான் இண்ட்ரஸ்ட்டு வராது......

Monday, July 26, 2004

ஒண்ணும் தெர்யாத கொய்ந்த

 மொகமது அலி அண்ணாத்தே உள்ளே போய்க்கீற மேட்டரு நம்ம அல்லாருக்குமே தெர்யும். அவுரு ஒண்ணுமே தெர்யாத நல்ல மன்ஸன், அவுரு தாத்தா கைலே டிகால்டி காட்டினதால தான் வுள்ளே புட்ச்சிப் போட்டுட்டாங்கோன்னு அவுரோட வக்கிலு சொல்லிக்கீறாரு. கூடவே "ஒரு ஐபிஎஸ்ஸு வெளில வுட்டா ஓடியாப்பூடுவாரு. இன்னாத்துக்கு சாமீனு கொடுக்காம இர்க்காங்கோ"ன்னும் கேட்டுக்கீறாரு.

ஒரு கேஸ்ல இன்னாத்துக்கு இன்னாருக்கு சாமீனு கொடுக்காம இர்க்கோணும்? எந்தக் கேஸ்லேயாவது இன்னாரு ஐபிஎஸ்ஸு ஐஏஎஸ்ஸுன்னு பாத்தா சாமீனு கொட்க்கீறாங்கோ. கெடியாதே. இந்தாள வெளில வுட்டா இருக்கிற சாட்சிய கலைச்சுப்புடுவான்னு நீதிபதி ஐயாவுக்கு தோணுச்சின்னா சாமீன் கொட்க்க மாட்டாங்கோ. இஸ்டாம்பு பேப்பரு கேஸ்ல மீசக்கார அண்ணாத்தே மெயினு பார்ட்டின்னு சிபிஐ நம்புறாங்கோ, அப்டி இர்க்கசொல்லோ எப்டி அவருக்கு சாமீன் கொடுக்க முடியும்? இன்னா வக்கிலய்யா இத்தெல்லாம் ஒங்களுக்கு தெர்யாதா?

மரம் நடுங்கோ மரம் நடுங்கோ

மரத்த வெச்சவன் தண்ணி வூத்துவான், மரத்த வெட்னவன் இன்னா செய்வான்?. "மர்த்த நடுங்கப்பா, மர்த்த நடுங்கப்பா"ன்னு சொல்லி செஞ்ச பாவத்துக்கு புண்ணியம் தேடிப்பான். நம்ம மரவெட்டி ஐயாவும் இப்போ அத்த தான் செய்துகின்னு கீறாரு. அல்லாரும் மரம் நடணும், வூட்டுக்கு வூடு மரம் வளக்கணும், அப்டி செய்யாங்காட்டி எதுனா வரி அதிகமா போட சொல்லணும்ன்னு சொல்லிக்கீறாரு. ஐயாவோட புள்ள மட்டும் நிதியமைச்சரா இர்ந்தா இன்னேரத்துக்கு நாட்டுல நெறியா பேரு வரி கட்ற நெலமைக்கு வந்திருப்பாங்கோ.

சொல்றதெல்லாம் சோக்கா தான் கீது மரவெட்டி ஐயா. மரம் நடுறது நல்ல ரோசன தான். ஆனா அத்தெல்லாம் நீங்க வெட்டி வெட்டி ரோட்டுல சாய்ச்சப்போ ரோசன பண்ணவே இல்லியா. இத்த தான் "வூருக்கு ஒரு நாயம் வூட்டுக்கு ஒரு நாயம்"ன்னு சொல்லுவாங்களா?

Tuesday, July 20, 2004

ஆலோஸ்கேனுக்கு ஆப்பு

புளாக்கரு வெச்சிக்கீற மன்ஸங்கோ அதுல எதிர்கொரலு வுடுற மேட்டர எப்டி செய்றதுன்னு நம்ம கிறுக்கு சங்கரு சொல்லிக்கீறாரு. அப்டியே பேக்புளாக்குக்கு எப்டி ஆப்பு வெக்கிறதுன்னும் சொல்லிக்கீறாரு. புச்சா புளாக்கரு எதிர்கொரலு போடுறவங்கோ பளைய ஆலோஸ்கேனு எதிர்கொரலு இர்ந்தா இன்னா பண்றது, அத்த வெச்சிக்கணுமேன்னு ஃபீலாவாங்கோ. கிறுக்கும் அத்தப் பத்தி ஃபீலாகி "யார்னா அதுக்கு ஒரு வளி சொன்னிங்கன்னா அப்டியே நம்ம கைல கொஞ்சம் சொல்லுங்கபா"ன்னு சொல்லிக்கீறாரு.

கிறுக்கு, வளி கீதுபா கீது.

இந்தா புட்ச்சிக்கோ

ஆலோஸ்கேனு போட்டா

<a href="javascript:HaloScan('<$BlogItemNumber$>');"
target="_self"><script type="text/javascript">postCount('<$BlogItemNumber$>');
</script></a>
ன்னு ஒரு மேட்டர நம்ம புளாக்குல போட்டு வெப்போம்ல, அதுக்கு பதிலா

<script>if (hs["<$BlogItemNumber$>"]) {document.write('<a
href="javascript:HaloScan(\'<$BlogItemNumber$>\');" target="_self">Comments (' +
hs["<$BlogItemNumber$>"] + ')</a> | ');}</script>
ன்னு போட்டுக்கின்னா ஆலோஸ்கேன்ல எதிர்கொரலு இர்ந்தா அது கண்ணுக்கு தெர்யும், இல்லாங்காட்டி வராது. புச்சா போடுற மேட்டருக்கெல்லாம் புளாக்கரு எதிர்கொரலு வசதியே ஊஸ் பண்ணிக்கலாம்.

இன்னா கிறுக்கு, இத்து சோக்கா கீதா?

Sunday, July 18, 2004

ஷகீலாவுக்கு பெஸ்ட்டு ஆக்ட்டரஸு அவார்டு

நம்மூர்ல திடீர்ன்னு கில்மா பட்த்துக்கெல்லாம் ஒரு கூட்டம் போட்டு அதுல ஷகீலாவுக்கு அவார்டு குட்த்தாங்கன்னா எப்டி இர்க்கும். ஆக்ட்டு வுடுறவங்களுக்கு குண்ஸா கீதோ இல்லியோ அத்த பாக்குற நம்மூரு கொய்ந்த பசங்களுக்கு குஜாலா இர்க்கும். இத்த சொல்றப்போ "தோடா ஒண்ணுமே இல்லாத பொட்டப்புள்ளிங்கோ (கேர்ள் ஃப்ரண்ட்ஸ்) பட்த்துக்கே நம்மூர்ல கொடி புடிக்கிறாங்கோ, இந்த கண்டீஸன்ல அத்த எல்லாம் கொண்டாந்து அவார்டு குட்க்கிறாங்கோ வா நயினா'ன்னு உள்ளுக்குள்ளே குப்ஸாமி மன்ஸு கொரலு வுடுது.

இந்தியா வாணா அப்டில்லாம் இர்க்கலாம்பா, ஆனா நம்மள ஆண்ட பெர்ய மன்ஸங்கோ மெய்யாலுமே பெர்ய மன்ஸங்கோ தான். கில்மா படம் எட்க்கிறது எம்மா கஸ்டம்ன்னு புர்ஞ்சி அதுக்கும் இப்போ அவார்டு குட்க்கப் போறாங்களாம். எக்ஸ்ப்ளிசிட் 984ங்கிற கில்மா டிவி சேனல் தான் இதுக்கு ஸ்பான்ஸராம். இது செப்டம்பர்ல நடக்கப்போவுது. இன்னா மக்களே லண்டனுக்கு எப்போ கெளம்புறிங்கோ?

பிகு: இன்னா குப்ஸு நாங்க எல்லாம் கும்பகோணத்துல தீ புட்ச்ச மேட்டருல ஃபீலாயி கெடக்கிறோம். நீயி அத்த பத்தி ஒண்ணும் எய்தாம மேட்டரு படத்துக்கு மீட்டரு போடுறேன்னு கேக்குறிங்களா. குப்ஸுக்கும் ஃபீலிங்கு வுண்டுபா, ஆனா அத்த பத்தி ஒண்ணும் சொல்ல முடியாமக்கீறான். அம்புடுதான்..


Wednesday, July 14, 2004

சக்கரவள்ளி கெளங்கு.....

மொதலமைச்சரம்மா போட்ட குண்டுங்கள எல்லாம் தேர்தல் ரிசல்ட்டு மேட்டரால திருப்பி இஸ்துக்கின்ன பொறவு இப்போ தான் ஒரு உருப்படியான மேட்டரோட வந்துக்கீறாங்கோ. தண்ணி பத்தாக்கொறையோட கீற வெவசாயிங்கோ சக்கரவள்ளி கெளங்கு பயிரிடுற திட்டம். தண்ணி கெடிக்காம கஸ்டத்துல கீற நெறியா நாடுங்கள்ல இந்த மேட்டரு இஸ்டார்ட்டு ஆயிடுச்சு. இன்னாடா நம்மூருல மாத்திரம் இன்னும் பண்ணாம கீறாங்களேன்னு குப்ஸாமி ஃபீலானான். கரீட்டு டைமுக்கு அம்மா மேட்டர எட்த்து வுட்டுக்கீறாங்கோ.

இந்த மேட்டரு மெய்யாலுமே நல்ல மேட்டரு தான். தண்ணி செலவும் ஆவாது, துட்டும் கூடுதலா கெடிக்கும். தண்ணி இல்லாம கஸ்டப்படுற வெவசாயிங்க மேட்டர கப்புன்னு புட்ச்சி மீட்டராக்கினா குண்ஸா துட்டு பண்ணலாம். அப்பாலிக்கா "சக்கரவள்ளி கெளங்கு மாமா வெளஞ்சது எப்படி"ன்னு பாட்டும் பாடலாம்.

Monday, July 12, 2004

அருணு அண்ணாத்தேக்கு

வணுக்கம் அண்ணாத்தே, அங்கே சொல்லோணும்ன்னு நென்ச்ச மேட்டர இங்கேயே சொல்லிப்புடுறேன். கேப்டனைய்யா ஆக்ட்டு வுடுறுவங்கோ சங்கத்து கடன அடச்சது, சிவாசி ஐயா செத்து போனப்போ அல்லா நடிகருங்களும் லாரி மேலே போயி குந்திகின்னப்போவும் ஒத்த ஆளா கீளே நின்னுக்கிட்டு கூட்டத்தை எல்லாம் சரி பண்ணது அல்லாமே அவரோட தெறமைய காட்டுது, இல்லேன்னு நானுஞ்சொல்லல.

ஆனா கண்ணாலம் கட்டி குட்க்கிறது, சோறு போடுறதெல்லாம் அந்தக் கணுக்குல சேத்துக்க முடியாதுபா. கேப்டனு எம்சியாண்ட செஞ்ச அத்தே வேலிங்கள தான் இப்போ செஞ்சிக்கின்னு கீறாரு. எம்சியாரு ஆக்ட்டு வுட சொல்லோவே அரசியல்லேயும் ஒத்த கால வெச்சிக்கின்னு இர்ந்தாரு, ஆனா நம்மாளு அத்த மேரி செய்யாம நேரடியா சிஎம் சீட்டுக்கு வரணும்ன்னு கெனா காண்றாரு. அத்த தான் வாணான்னு சொல்றேன்.

அரசியலுக்கு வரணுமா நேரடியா வா, வந்து மக்களுக்கு எதுனா பண்ணு, அப்பாலிக்கா சிஎம் ஆவுற கெனாவெல்லாம் வர வெச்சிக்கோ. சினிமால கீற வெளிச்சத்த காட்டி சீனு போட்டு அத்த வெச்சி சிஎம் ஆவலாம்ன்னு கெனா வாணாம், இத்தான் நாஞ்சொல்றது.

குப்ஸாமி சொல்றது இப்போ வேணா ராங்கா உனுக்கு தோணும் அண்ணாத்தே, இன்னும் ரெண்டு வருசம் களிச்சுப் பாரு, அப்பாலிக்கா குப்ஸாமி சொல்றது கரீட்டுன்னு தெர்யும்.

கேப்டனுக்கு ஜே

நம்ம அருணு அண்ணாத்தே வுட்டாக்கா கேப்டனுக்கு கொளுக பரப்புச் செயலாளரா ஆயிப்புடுவாரு போலக்கீது. கேப்டனையா இத்த செய்துக்கீறாரு அத்த செய்துக்கீறாரு, அத்தால அவுரு மொதலமைச்சரா வரலாம்ன்னு சொல்லாம சொல்கிக்கீறாரு. ஆக்ட்டு குட்க்கிறவங்கோ அரசியல்ல வரக்கூடாதுன்னு பயாஸ்கோப்பு பொட்டிய தூக்கிக்கின்னு போறதுக்கு நா ஒண்ணும் மரவெட்டி ஐயா கெடியாது. ஆனா, அண்ணாத்த குட்த்த லிஸ்ட்டு மாத்திரம் சிஎம்மா வர்றதுக்கு போதுமாபா?

சினிமால பக்கம் பக்கமா டையலாக்கு வுடுற கேப்டன் நேர்ல எதுனா ஒரு மொதலமைச்சரு செய்யிற அக்குறும்புங்கள பத்தி எதுனா பேசிருப்பாரா? தாத்தா சீட்ல குந்திக்கின்னு இர்ந்தப்போ தாத்தாவுக்கு சோப்பு போட்டாரு, இப்போ அம்மாவுக்கு போடுறாரு. இப்போ கொஞ்ச நாளா கேப்டனுக்கு சிஎம் சீட்டு மேல கண்ணு. 2006க்கு மேல தாத்தா இர்ந்து பெர்சா ஒண்ணும் கிளிக்கப்போறது கெடியாது, அம்மா ஆட்சியும் மக்களுக்கு கொஞ்சம் டகால்டி காட்டுது, இந்த நேரத்திலே உள்ளே பூந்து ஆட்டய கலச்சா சீட்டப் புட்ச்சிடலாம், இத்தானே கேப்டனு திட்டமெல்லாம்....

கேப்டனைய்யா நேரடியா அரசியலுக்கு வரட்டும், மக்களுக்கு எதுனா நல்லது செய்யட்டும் (அன்னதான, கண்ணாலம் கட்டிக் குட்க்கிற இஸ்டண்டுல்லாம் மக்கள பிச்சக்காரனாவே வெச்சிக்கீற மேட்டருபா, அத்த வுட்டு வெளில வாங்கோ). இப்போ கேடுகெட்டு கெடக்கிற அரசியல்ல புச்சா எதுனா மீனு புடிக்கட்டும், அப்பாலிக்கா அவர "வா நைனா வா, வந்து கலாசு"ன்னு கூப்டுங்கோ அண்ணாத்தே. இப்போவே ரோசா மாலைய ரெடி பண்ணாதிங்கோ...

Wednesday, June 30, 2004

வுட்டாச்சு லீவூஊஊஊஊஊ

குப்ஸாமி ஒன் வீக் ரிக்ஸா வளிக்கிற ஜொலிய அப்பாலிக்கா தூக்கிப் போட்டுப்புட்டு குண்ஸா காலாட்டிக்கின்னு வூட்டுல பட்த்து தூங்கப் போறான்பா. இன்னா மேட்டருன்னு கேக்குறிங்களா? ரியாத்ல கீற குப்ஸாமிக்கு ஒன் வீக்கு அவனோட மொதலாளி வூட்ல போயி "என்ஸாய் பண்ணுபா"ன்னு லீவு குட்த்துக்கீறாரு.

ஆருக்குனா குப்ஸாமி கைல எதுனா பேசணும்ன்னு நென்ச்சா 04144-242278 நம்பர்ல கூப்டலாம். இன்னாபா யார்ன்னா குப்ஸாமிக்கு போன் பண்ணுவிங்களா??

Tuesday, June 29, 2004

தமிள் தேதி

நம்ம கிறுக்கு சங்கரு தன்னோட புளாக்குல தமிள் தேதி எப்டி வர வெக்கிறதுன்னு சொல்லிக்கீறாரு. அத்த இன்னும் கொஞ்சூண்டு அஜ்ஜீஸ் பண்ணி குப்ஸாமி எய்திக்கீறான். குப்ஸாமிது வோணும்ன்னா இத்த எட்த்துக்கோங்கோ, கிறுக்குது வோணும்ன்னா அங்கே எட்த்துக்கோங்க.

இத்த எட்த்து புளாக்கோட தலமாட்டுல (<head>) எங்கணா போட்டுக்கோங்கோ.


<script>
function ChangeDatetoTamil(dtmDate)
{
EnglishArray = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

TamilArray = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

for (i=0;i<19;i++)
{
dtmDate = dtmDate.replace(EnglishArray[i], TamilArray[i]);
}

return dtmDate
}
</script>


<$BlogDateHeaderDate$>ன்னு கீற எட்த்துல

<script>document.write(ChangeDatetoTamil("<$BlogDateHeaderDate$>"))</script>


போட்டுக்கோங்கோ. அப்பாலிக்கா தமிளு தேதி தான்.

வாள்க கிறுக்கு சங்கரு.....

Monday, June 28, 2004

கஜேந்திரா

பாபா கவுண்ட் டவுன் இஸ்டாப்பு ஆயி போச்சி, இப்போ கஜேந்திரா கவுண்ட் இஸ்டார்ட்டு ஆயிக்கீது. கஜேந்திரரு மரவெட்டி ஐயாவ சைடு காட்ட மரவெட்டி ஐயாவோட சிஸ்யப்புள்ளிங்கோ சிலுத்துக்கின்னாங்கோ. கஜேந்திரரோட அடிபொடிங்களும் சொம்மா இர்க்குமா, அதுங்களும் "கஜேந்திரரு பவரு காட்றோம் பாரு"ன்னு அட்ச்சி ஆடுதுங்கோ.

கஜேந்திரரு எடுக்குற பயாஸ்கோப்புக்கு ஆப்பு வெக்கிறோம்ன்னு மரவெட்டி சிஸ்யப்புள்ளிங்கோ கொரலு வுடுதுங்கோ. ஒடனே கஜேந்திரரு "நீயி முட்ஞ்சா செய்து பாருபா"ன்னு எதிர்கொரலு வுடுறாரு. பாபா படம் வூத்திக்கின்னது மரவெட்டி ஐயா தான் ரீஜன்னு இன்னமும் சூப்புரு பொலம்பிக்கின்னு கீறாரு. மெய்யாலுமே படம் பாக்குற மேரி இர்ந்தா மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போய்ட்டா மட்டும் படம் புட்டுக்குமா இன்னா? பாபா படமே ஒரு டுபுக்கு படம், அத்த மரவெட்டி ஐயா பொட்டிய தூக்கிக்கின்னு போவாம இர்ந்தாலும் படம் பணால் தான்.

இன்னும் ரெண்டு மாசத்துல கஜேந்திரா படம் ரிலீஸ் ஆவும். படம் என்னவோ படா வேஸ்ட்டு படம் தான். பக்கத்து இஸ்டேட்டுல கொய்ந்த பையன் ஜூனியர் எண்டிஆரு ஆக்ட்டு குட்த்த "சிம்மாத்ரி"ய இங்கே தமிளுல கஜேந்திரா ஆக்கிப்புட்டாரு நம்மாளு. படம் முளுக்க வெட்டு குத்து ப்ளட்டு தான். பக்கத்து இஸ்டேட்டுல படா இட்டு குட்த்த ஒரு படத்த நம்ம பிரசாந்து இப்படி கொண்டாந்து இங்கே வூத்திக்கிச்சு. கஜேந்திரரும் இப்டி வூத்திக்க சான்ஸு சோக்கா கீது.

படம் வூத்திக்கின்னா "தன்னோட பவரு"ன்னு மரவெட்டி ஐயா தலக்கீளா டான்ஸு ஆடுவாரு. படம் சோக்கா ஓடுச்சுன்னா கஜேந்திரரு சவுண்டு வுடுவாரு. என்னிய மேரி பாளாப்போன பொதுசனம் மட்டும் எப்பவும் கைய கண்ணத்துல வெச்சிக்கின்னு குந்திக்கின்னு இர்க்கும்.

Thursday, June 24, 2004

டைட்டிலு குட்க்கலாம் வாங்கப்பா

குப்ஸாமி வாய்க்கு அவலு கெடிக்கிலியேன்னு ரொம்ப ஃபீலாகி இர்ந்தான்பா. எய்த்தாளர் பாரா "இந்தா பையா புட்ச்சிக்கோ"ன்னு அள்ளி அவல குட்த்துக்கீறாரு.

தமிளுநாட்டுல கீற வலப்பதிவாளுங்கோ அல்லாருமா ஒரு நாளு மூட்டிங் போடலாம்ன்னு பிளான். அதுக்கு ஒரு நோட்டீஸ் வுட்டுக்கீறாரு. நோட்டீஸ்ல அல்லாரு பேரையும் போட்டுட்டு கூடவே வலப்பதிவு முன்னோடின்னு சொல்லி மாலனைய்யாவை சொல்லிக்கீறாரு. எனுக்கு பயாஸ்கோப்பு பாக்கசொல்லோ குபுக்குன்னு சிரிப்பு வர்ற மேட்டரு இன்னா தெர்யுமா, ஆக்ட்டு வுடுற அண்ணாத்தேங்களுக்கு போடுற டைட்டிலு தான். பாரா வலப்பதிவு முன்னோடின்னு சொல்றப்போவும் அத்தப் போலவே ஒரு சிரிப்பு சிரிச்சேன். மாலனைய்யா வலப்பதிவு முன்னோடின்னா அப்போ அதுக்கு முன்னே வலப்பதிவு செய்தவங்கள இன்னான்னு சொல்வாங்கோ, முன்னோடிக்கு முன்னோடியா? எதுக்கு தலீவா இந்த மேரி டைட்டிலெல்லாம். மாலன்னு சொன்னா ஆருக்கும் தெர்யாதா??

சரி, பாராவோட பதிவு, அவரு ஆரப் பத்தியும் இன்னா வேணா சொல்லலாம்ன்னு வுடுவோம். இத்த பட்ச்சி நம்ம மர்த்தடி சீமாச்சு இன்னும் கொஞ்சம் ஓவரா ஃபீலாயி பூட்டாரு. அரியண்ணாத்தேயை வலையண்ணான்னு டைட்டிலு குடுக்கலாமான்னு கேட்டுக்கீறாரு. வாணாந் தலீவா வாணா. இப்போ நீயி டைட்டிலு குட்ப்ப, அப்பாலிக்கா அந்த டைட்டில வெச்சி ஆர்ன்னா கலாசுவாங்கோ. இத்தெல்லாம் இன்னாத்துக்கு. அவரு செலருக்கு அரியண்ணா, எனுக்கு அரியண்ணாத்தே, இன்னும் செலருக்கு அரி. அப்டியே இர்ந்துட்டுப் போவட்டுமே, இன்னாத்துக்கு ஒரு டைட்டிலு....

Wednesday, June 16, 2004

ஓசி வெளம்பரம்

பயாஸ்கோப்பு எட்த்துபுட்டு அதுக்கு போஸ்டரு அடிக்காம, டிவி பொட்டில காட்டாம, நூஸ் பார்ட்டிங்களுக்கு துட்டு குட்க்காம வெளம்பரம் பண்ணனுமா, மேட்டரு ரொம்ப ஈஸிபா. பட்த்துல படா பேஜாரான மேட்டர்லாம் கீதுன்னு காவிப்பார்ட்டிங்கோ கைல சொல்லிட்டா போதும். படம் தெரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே கொரலு வுட ஆரம்பிச்சுடுவாங்கோ. ஒடனே நூஸ் பார்ட்டிங்களும் "இன்னாபா படம் இது, கண்ட கருமத்தை எல்லாம் புட்ச்சி போட்டு வெச்சிக்கீறாங்கோ"ன்னு எய்த ஆரம்பிச்சிடுவாங்கோ.

மெய்யாலுமே பட்த்துல தம்மாதுண்டு கலீஜி மேட்டரு கூட இர்க்காது, ஆனா இவனுங்கோ வுடுற கொரலுல படத்துக்கு பிரியாவே வெளம்பரம் கெட்ச்சிடும். குப்ஸாமி மேரி நல்லப்புள்ளிங்க அல்லாம் கூட இஸ்கிரீன்ல இன்னா தான் காட்றாங்கோன்னு தியேட்டராண்ட போயி கியூவுல நிண்ணு பயாஸ்கோப்பு பாத்துட்டு வர்வாங்கோ. படத்த எட்த்தவனுக்கு துட்டு செலவு இல்லாம வெளம்பரமும் ஆச்சு, படமும் செம்ம ரன்னிங்கு.

இப்போ புச்சா கேர்ள்பெரண்டுன்னு ஒரு படம் வந்துக்கீது. காவிப்பார்ட்டிங்கோ குதிக்க ஆரம்பிச்சாச்சு. படம் கண்டிப்பா பிச்சிக்கின்னு ஓடும். எட்த்த புண்ணியவானுக்கு நல்ல துட்டு வசூல். தமிளுல இஸ்து போத்திக்கின்னு ஆக்ட்டு வுட்ட இஸாவுக்கு இப்போ செம்ம டைமு போல, வர்மா அண்ணாத்தே ராசி, பார்ட்டிக்கு செம்ம ஓட்டம். இன்னும் நாலு படம் இப்டி ஆக்ட்டு வுட்டு அக்கா அப்டிக்கா எங்கனா போயி செட்டில் ஆயிடும். யக்கோவ் நீயி கலக்கு.......

பிட் நோட்டீஸ்

கெட்டள கேட்டு குப்ஸாமி பீஸாப்பூட்டானான்னு ஃபீலான அல்லாருக்கும் வண்க்கம்பா. குப்ஸாமியாண்ட இந்தக் கெட்டளல்லாம் வேலிக்காவாதுன்னு கெட்டள போட்டவருக்கே தெர்யும். கொஞ்சம் சவாரில பிஸியா இர்ந்தாச்சுபா, அத்தான் மேட்டரு.

Tuesday, June 08, 2004

ஒம்போது கெட்டளைகள்

நம்ம வாத்யாரு பாரா தன்னோட வூட்டுல ஒம்போது கெட்டளைங்கோ எய்திக்கீறாரு. அதுவும் மொதோ நாளே அக்கம்பக்கத்துல வூடு கட்டிக்கீறவங்கள ஒரு சாத்து சாத்துறார். இஸ்கூலுக்கு போவசொல்லோ வாத்யாரு எதுனா சொன்னாக்கா அவுரு அந்தப்பக்கமா திர்ம்பசொல்லோ பிகிலடிப்போம். குப்ஸாமிக்கு பள்ளிக்கொட நெனப்பு இன்னும் மாறல. அத்தான் இங்கயும் ஒரு பிகிலு........... மன்ச்சிக்கோ வாத்யாரே....

1. சொந்தமாக ஒரு வலைப்பதிவு வைத்துக்கொள்ளுவது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக மட்டுமே. நமது மனத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த உபாயம். அவ்வளவே. மற்றபடி ஒண்ணரை மாசம் எழுதிவிட்டு, நாலுபேர் படிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே மனத்துக்குள் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா ரேஞ்சில் உருவகப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லது. எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

இன்னா தலீவா. மன்ஸூக்குள்ளே தானே நென்ச்சிக்கிறாங்கோ, அத்தால ஆருக்கு இன்னா நஸ்டம் வந்துடும். சுசாதா சுரா ரேஞ்சிலே நென்ச்சி எய்துனா அவுங்க எய்துனதுல ஒரு பாயிண்டு ரேஞ்சிக்காவது எதுனா கிறுக்கலாம்ன்னு நென்ச்சிருப்பாங்கோ. இதுக்கெல்லாம் ஃபீலாவாதிங்கோ.

2. முழ நீளக் கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (பெண்கள், ஆண்களில்லாத ஊரில்.) அப்படியே கவிதையை இட்டுத்தான் ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள் முதலில் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு வலையேற்றுவது நலன் பயக்கும். யாஹு குழுமங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் வாசிக்கக் கிடைக்கிற கவிதைகள் நாராசமாக இருப்பது ஏன் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பீட்டாய்வு செய்து பார்த்துக்கொள்ளுவது அவர்களுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு நல்லது.

அல்லாரும் பொற்கசொல்லவே கவுத எய்த பட்ச்சிறாங்களா இன்னா. பத்திரிகைக்கு அனுப்புனா போட மாட்றாங்கோ. குளுவுல எய்துனா யாரும் கண்டுக்க மாட்றாங்கோன்னு தானே தனக்குன்னு ஒரு எடத்த புடிச்சி போட்டு அதுல எய்திக்கிறாங்கோ. புட்ச்சா பட்ச்சு ரஸிக்கலாம், இல்லாங்காட்டி வுடு ஜூட்ன்னு போய்கினே இர்க்கோணும். சரி வாத்யாரே, கவுத தான் பக்கம் பக்கமா வுடக்கூடாது, நாலு பக்க கதிய ஆர்னா பதிவுல போட்டு வெக்கிறாங்களே அவங்களுக்கு ஒண்ணும் சொல்லலியா. வெண்பாம் எய்துறவங்கோ இன்னா பண்ணலாம் தலீவா, அத்தையும் சொல்லிப்போடுங்கோ....

3. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தது பற்றியும் பன்னிரெண்டரையாவது பதிவை வெளியிட்டது பற்றியும் வலைப்பதிவுகளின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்துமே அடிக்கடி எழுதி போரடிக்காதீர்கள். நீங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து உங்களிடமிருந்து ஏராளம் பெறுவதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் வைக்கவும்.

எதுனா உருப்படியா எய்தணும்ன்னு நெனிக்கிற ஆளுங்கோ உண்டு. என்னிய மேரி எதுனா கிறுக்கணும்ன்னே வர்ற ஆளுங்களும் உண்டு. பதிவுங்கற்தே "வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" மேட்டரு தானே. குளுவிலே செல மேட்டரு எய்த முடியாம கீறதால நெறிய பேரு பதிவு பாக்க வந்துட்டாங்க. அங்கேயும் இன்னது தான் எய்தணும்ன்னு ரூல்ஸு போட முடியுமா இன்னா??

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வலைப்பதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது. நாம் வலைப்பதியவில்லை என்பதற்காக ஒருத்தர் கூட ஒரு வேளை சோறைப் புறக்கணிக்கப்போவதில்லை. அப்படியிருக்க, இரண்டு மூன்று நாள் சோம்பலில் எழுதாமல் இருந்துவிட்டு, மீண்டும் எழுதும்போது எழுதாத தினங்கள் பற்றிய லெக்சரைத் தவிர்க்கவும்.

ஹீஹீஹீ, அக்ரீட். அல்லாரும் இத்தெ கேட்டுக்கோங்கபா. ஆனா வாத்யாரே, எய்தாமக்கீற நாளுல இன்னாத செஞ்சோம்ன்னு கொரலு வுடுறதா நென்ச்சிக்கோங்களேன்

5. சக வலைப்பதிவாளர்கள் நமது பதிவைப் படிக்கிறார்களா என்று அறிவதற்காகவே சம்பந்தமில்லாத மேட்டர்களுக்கு அவர்கள் பதிவில் போய் டிராக் பேக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதேபோல் உங்கள் பதிவுக்கு யாராவது ஒருவர் அவரது பதிவில் லிங்க் கொடுத்ததற்காக ஒரு பக்கம் செலவழித்து நன்றியறிவிப்புப் பொதுக்கூட்டம் நடத்தாதீர்கள்.

பாரா மேரி ஒரு பெர்ய எய்த்தாளரு அவரோட பதிவுல குப்ஸாமி மேரி குண்ஸு பார்ட்டியோட லின்க் குட்த்துக்கீறாருன்னு வெய்ங்கோ, குப்ஸாமிக்கு ஒரு டாஸ்மாக்க ஜோடா கலக்காம அட்ச்ச மேரி இர்க்கும். ஒடனே இன்னா பண்ணுவான் "தலீவா நெம்ப டாங்ஸு தலீவா"ன்னு கொரலு வுடுவான். இத்தெல்லாம் மிஷ்டேக்கா எடுக்காத வாத்யாரே....

6. பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லி போரடிக்காதீர்கள். அடுத்தவரின் பின்னூட்டப் பெட்டிகளை மூத்திரச் சந்துகளாகக் கருதி அங்கே பத்துப் பத்து வரிகளில் சாராயச் சண்டை போடாதீர்கள். அப்படியே சண்டை போட்டே தீருவேன் என்பீர்களானால் யுனிகோடில் மட்டும் போடுங்கள். உங்கள் சோம்பலால் திஸ்கியில் சண்டை போட்டு அடுத்தவரை அவதிக்கு உள்ளாக்காதீர்.

பதிவுக்கு போனோமா மேட்டர பட்சோமான்னு வந்துரலாம் வாத்யாரே. ஆரு இன்னா சொன்னா நம்க்கு இன்னான்னு வந்துகினே இர்ந்தா சொல்றவன் திஸ்கில சொன்னா இன்னா உனிகோடுல சொன்னா இன்னா... இன்னா நாஞ்சொல்றது...

7. பிரபலங்களைத் தாக்குவதற்கும் பொத்தாம்பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தாதீர். வலைப்பதிவுகளுக்கு வருவோர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளரின் எழுத்துகளைப் படிக்க மட்டுமே அங்கே வருகிறார்கள். வாசிக்கும்போது ஒவ்வொருவரும் அவருடன் அந்தரங்கமாகப் பேசுவதாக, புரிந்துகொள்வதாக உணருகிறார்கள். இந்த அந்தரங்கத் தன்மையை உங்களது 138வது வட்டப் பொதுக்கூட்ட மைக் வீச்சுப் பேச்சாலும் எழுத்தாலும் அழித்து ஒழிக்காதீர்கள்.

"வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" பாலிஸி தான் இதுக்கும்.

8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையத்தளங்களிலிருந்தும் ரீடிஃப், எண்டிடிவி, சிஎன்னென் போன்ற செய்தித் தளங்களிலிருந்தும் செய்திகளை வெட்டி ஒட்டி பஜனை பண்ணாதீர்கள். எழுத விஷயமில்லை என்றால் எழுதாமலிருப்பது உத்தமம்.

நாலு எட்த்துக்கும் போயி படிக்க வசதி இல்லாதவங்கோ இங்க வந்து நூஸ் பாத்துக்கலாம்ன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருப்பாங்கோ. வுட்டுத்தள்ளுங்கோ.

9. வெப் கவுண்ட் என்பது மிகப்பெரிய மாயை மற்றும் மோசடி. அந்த எண்ணிக்கையைப் பார்த்துப் பார்த்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். திரும்பத்திரும்ப ஐம்பது பேர்தான் சின்சியராக வலைப்பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் இருத்தவும்.

வாத்யாரே, டெக்னிகல் மேட்டர்ல வுள்ள போறிங்களே. வெப் கவுண்ட மாயை ஆக்குறதும் ஆக்காததும் அத்த போடுறவன் கைல தான் கீது. எதுனா பெர்ய எணைய பத்திரிகைல "நைனா இங்க பாருபா நா முண்ணூத்தி முப்பத்தோறாவது கோடிய தொட்டுட்டேன்"னு சீன் போடுறதுக்கு வூஸ் பண்ற கவுண்ட்டு வேற. நம்ம பதிவுல எத்தன பேரு வராங்கோ, இதுல ஆராரு புச்சா வராங்கோன்னு தெர்ஞ்சிக்க தான் பதிவுல கவுண்ட்டு போட்டு வெச்சிக்கறதே. அத்த நென்ச்சில்லாம் ஃபீலாவாதிங்கோ.

Wednesday, June 02, 2004

கேள்வி கேக்குறவன் கேனையன்

கேள்வி கேக்குறவனையும் குந்திக்கின்னு பாக்குறவனையும் கேனையனா ஆக்குற டிவி நிகள்ச்சி எது தெர்யுமாபா. லைவ்வா காட்டுறேன்னு சொல்லிக்கின்னு ஆர்னா ஒரு பெர்ய மன்ஸாள கூட்டியாந்து ஒக்கார வெச்சி கேள்வி கேக்குறாங்கோ பாருங்கோ அத்தான் அந்த நிகள்ச்சி.

நம்ம பொதிக டிவி கீதே, அதுல ராத்திரி ஆனாக்கா யார்ன்னா சினிமாக்காரங்களையோ இல்ல வேற ஆரையாவது கூட்டியாந்து கேள்வி கேப்பாங்கோ. நேத்தி நைட்டும் அப்டி ஒரு பெர்ய மன்ஸன கூட்டியாந்தாங்கோ. ஐயா மெய்யாலுமே பெர்ய ஆளு தான். மொனைவரு கொய்ந்தசாமி அய்யா. அய்யா அண்ணா பல்கலைக்களகத்துல இர்ந்தவரு, இப்போ எணைய தமில் பல்கலைக்கழகத்த நட்த்திக்கின்னு வர்றவரு.

முன்னால குந்திக்கின்னு இர்ந்து கேள்வி கேட்டவரும் சொம்மா இல்ல, அவரும் எதோ பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சவராம். இந்த மேரி லைவ்வா காட்ட சொல்லோ முன்னால குந்தி இர்க்குறவங்கோ டெலிபோன்ல ஆர்ன்னா கேள்வி கேக்கசொல்லோ வந்துக்கீற பெர்ய மன்ஸனுக்கு புர்யாங்காட்டி எட்த்து சொல்லோணும். ஆனா முன்னால குந்திக்கின்னு இர்ந்த ஆளு அத்த ஒய்ங்காவே செய்யல.

ஒரு ஆளு "கணினில தமிளு தான் சுலுவா கொண்டு வர்ற மேரிக்கீதுன்னு சொல்றாங்களே, அத்த பத்தி கொஞ்சம் வெளக்குங்கோ"ன்னு கேக்குறாரு. ஒடனே நம்மாளு கேள்விய ஒளுங்கா வெளங்கிக்காம அய்யாகிட்டே வேற என்னமோ மாத்தி எட்த்து சொன்னாரு. சரி அத்த வுட்டுத்தள்ளுன்னு வுட்டாச்சு. மறுக்கா ஒர்த்தரு "ஐயா, நா சொவடில்லாம் ஆராய்ச்சி பண்றவனுங்கோ. எனுக்கு அத்த பத்தி செல பொஸ்தகமெல்லாம் தேவப்பட்து. இண்டர்நெட்டுல போயி தேடுனாலும் ஒய்ங்கே கெடிக்க மாட்டேங்குது. அதுக்கு எதுனா சொல்லுங்கய்யா"ன்னு கேட்டாரு. முன்னால குந்திக்கீறவரு "அதுல்லாம் மேட்டரே இல்லபா, நீயே ஒரு மென்பொருள எய்திடு"ன்னு சொல்லி லைன கட் பண்ணிட்டாரு.

கேள்வி கேக்குறவன் இன்னா கேக்குறான்னு பிர்யாம நீயா பதில் சொல்லி லைன கட் பண்ண இன்னாத்துக்குபா நீயி குந்திக்கின்னு கீற. கேள்வி கேட்டவன் எம்மா முக்கியமா கேக்குறான். அதுவும் அய்யா எணைய தமிளு பல்கலைக்களகமெல்லாம் வெச்சிக்கீறாரே, அவுருக்கு எதுனா தெர்யும்னு தானே கேக்குறான். கேள்வி கேக்குறவனுக்கு சம்மந்தமே இல்லாம நீயா ஒரு பதில சொன்னா இன்னாபா மீனிங்கு.

இத்த பாக்கசொல்லோ "கேள்வி கேக்குறவன் தான் கேனையன்"னு நென்ச்சிக்க வேண்டியதா கீது. டிவி பொட்டில எதுனா இத்த மேரி நிகள்ச்சி பண்றவங்கோ எதுனா சினிமா நடிகய கொண்டாங்கபா, அவுங்க கிட்டே எதுனா மக்கள பேச வுட்டுடுங்கோ. அத்த வுட்டுப்போட்டு ஆர்னா பெர்ய மன்ஸன கொண்டாந்து அப்பாலிக்கா அவங்களாண்ட கேள்வியும் கேக்க வுடாம பண்ணாதிங்கோ......