Tuesday, June 08, 2004

ஒம்போது கெட்டளைகள்

நம்ம வாத்யாரு பாரா தன்னோட வூட்டுல ஒம்போது கெட்டளைங்கோ எய்திக்கீறாரு. அதுவும் மொதோ நாளே அக்கம்பக்கத்துல வூடு கட்டிக்கீறவங்கள ஒரு சாத்து சாத்துறார். இஸ்கூலுக்கு போவசொல்லோ வாத்யாரு எதுனா சொன்னாக்கா அவுரு அந்தப்பக்கமா திர்ம்பசொல்லோ பிகிலடிப்போம். குப்ஸாமிக்கு பள்ளிக்கொட நெனப்பு இன்னும் மாறல. அத்தான் இங்கயும் ஒரு பிகிலு........... மன்ச்சிக்கோ வாத்யாரே....

1. சொந்தமாக ஒரு வலைப்பதிவு வைத்துக்கொள்ளுவது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக மட்டுமே. நமது மனத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த உபாயம். அவ்வளவே. மற்றபடி ஒண்ணரை மாசம் எழுதிவிட்டு, நாலுபேர் படிக்கிறார்கள் என்று தெரிந்ததுமே மனத்துக்குள் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா ரேஞ்சில் உருவகப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லது. எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

இன்னா தலீவா. மன்ஸூக்குள்ளே தானே நென்ச்சிக்கிறாங்கோ, அத்தால ஆருக்கு இன்னா நஸ்டம் வந்துடும். சுசாதா சுரா ரேஞ்சிலே நென்ச்சி எய்துனா அவுங்க எய்துனதுல ஒரு பாயிண்டு ரேஞ்சிக்காவது எதுனா கிறுக்கலாம்ன்னு நென்ச்சிருப்பாங்கோ. இதுக்கெல்லாம் ஃபீலாவாதிங்கோ.

2. முழ நீளக் கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள். (பெண்கள், ஆண்களில்லாத ஊரில்.) அப்படியே கவிதையை இட்டுத்தான் ஆவேன் என்று அடம்பிடிப்பவர்கள் முதலில் கவிதை எழுதக் கற்றுக்கொண்டு வலையேற்றுவது நலன் பயக்கும். யாஹு குழுமங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் வாசிக்கக் கிடைக்கிற கவிதைகள் நாராசமாக இருப்பது ஏன் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பீட்டாய்வு செய்து பார்த்துக்கொள்ளுவது அவர்களுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு நல்லது.

அல்லாரும் பொற்கசொல்லவே கவுத எய்த பட்ச்சிறாங்களா இன்னா. பத்திரிகைக்கு அனுப்புனா போட மாட்றாங்கோ. குளுவுல எய்துனா யாரும் கண்டுக்க மாட்றாங்கோன்னு தானே தனக்குன்னு ஒரு எடத்த புடிச்சி போட்டு அதுல எய்திக்கிறாங்கோ. புட்ச்சா பட்ச்சு ரஸிக்கலாம், இல்லாங்காட்டி வுடு ஜூட்ன்னு போய்கினே இர்க்கோணும். சரி வாத்யாரே, கவுத தான் பக்கம் பக்கமா வுடக்கூடாது, நாலு பக்க கதிய ஆர்னா பதிவுல போட்டு வெக்கிறாங்களே அவங்களுக்கு ஒண்ணும் சொல்லலியா. வெண்பாம் எய்துறவங்கோ இன்னா பண்ணலாம் தலீவா, அத்தையும் சொல்லிப்போடுங்கோ....

3. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தது பற்றியும் பன்னிரெண்டரையாவது பதிவை வெளியிட்டது பற்றியும் வலைப்பதிவுகளின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்துமே அடிக்கடி எழுதி போரடிக்காதீர்கள். நீங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து உங்களிடமிருந்து ஏராளம் பெறுவதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் வைக்கவும்.

எதுனா உருப்படியா எய்தணும்ன்னு நெனிக்கிற ஆளுங்கோ உண்டு. என்னிய மேரி எதுனா கிறுக்கணும்ன்னே வர்ற ஆளுங்களும் உண்டு. பதிவுங்கற்தே "வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" மேட்டரு தானே. குளுவிலே செல மேட்டரு எய்த முடியாம கீறதால நெறிய பேரு பதிவு பாக்க வந்துட்டாங்க. அங்கேயும் இன்னது தான் எய்தணும்ன்னு ரூல்ஸு போட முடியுமா இன்னா??

4. ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வலைப்பதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது. நாம் வலைப்பதியவில்லை என்பதற்காக ஒருத்தர் கூட ஒரு வேளை சோறைப் புறக்கணிக்கப்போவதில்லை. அப்படியிருக்க, இரண்டு மூன்று நாள் சோம்பலில் எழுதாமல் இருந்துவிட்டு, மீண்டும் எழுதும்போது எழுதாத தினங்கள் பற்றிய லெக்சரைத் தவிர்க்கவும்.

ஹீஹீஹீ, அக்ரீட். அல்லாரும் இத்தெ கேட்டுக்கோங்கபா. ஆனா வாத்யாரே, எய்தாமக்கீற நாளுல இன்னாத செஞ்சோம்ன்னு கொரலு வுடுறதா நென்ச்சிக்கோங்களேன்

5. சக வலைப்பதிவாளர்கள் நமது பதிவைப் படிக்கிறார்களா என்று அறிவதற்காகவே சம்பந்தமில்லாத மேட்டர்களுக்கு அவர்கள் பதிவில் போய் டிராக் பேக் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதேபோல் உங்கள் பதிவுக்கு யாராவது ஒருவர் அவரது பதிவில் லிங்க் கொடுத்ததற்காக ஒரு பக்கம் செலவழித்து நன்றியறிவிப்புப் பொதுக்கூட்டம் நடத்தாதீர்கள்.

பாரா மேரி ஒரு பெர்ய எய்த்தாளரு அவரோட பதிவுல குப்ஸாமி மேரி குண்ஸு பார்ட்டியோட லின்க் குட்த்துக்கீறாருன்னு வெய்ங்கோ, குப்ஸாமிக்கு ஒரு டாஸ்மாக்க ஜோடா கலக்காம அட்ச்ச மேரி இர்க்கும். ஒடனே இன்னா பண்ணுவான் "தலீவா நெம்ப டாங்ஸு தலீவா"ன்னு கொரலு வுடுவான். இத்தெல்லாம் மிஷ்டேக்கா எடுக்காத வாத்யாரே....

6. பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லி போரடிக்காதீர்கள். அடுத்தவரின் பின்னூட்டப் பெட்டிகளை மூத்திரச் சந்துகளாகக் கருதி அங்கே பத்துப் பத்து வரிகளில் சாராயச் சண்டை போடாதீர்கள். அப்படியே சண்டை போட்டே தீருவேன் என்பீர்களானால் யுனிகோடில் மட்டும் போடுங்கள். உங்கள் சோம்பலால் திஸ்கியில் சண்டை போட்டு அடுத்தவரை அவதிக்கு உள்ளாக்காதீர்.

பதிவுக்கு போனோமா மேட்டர பட்சோமான்னு வந்துரலாம் வாத்யாரே. ஆரு இன்னா சொன்னா நம்க்கு இன்னான்னு வந்துகினே இர்ந்தா சொல்றவன் திஸ்கில சொன்னா இன்னா உனிகோடுல சொன்னா இன்னா... இன்னா நாஞ்சொல்றது...

7. பிரபலங்களைத் தாக்குவதற்கும் பொத்தாம்பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தாதீர். வலைப்பதிவுகளுக்கு வருவோர், சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளரின் எழுத்துகளைப் படிக்க மட்டுமே அங்கே வருகிறார்கள். வாசிக்கும்போது ஒவ்வொருவரும் அவருடன் அந்தரங்கமாகப் பேசுவதாக, புரிந்துகொள்வதாக உணருகிறார்கள். இந்த அந்தரங்கத் தன்மையை உங்களது 138வது வட்டப் பொதுக்கூட்ட மைக் வீச்சுப் பேச்சாலும் எழுத்தாலும் அழித்து ஒழிக்காதீர்கள்.

"வோணும்ன்னா பட்ச்சிக்கோ, வாணான்னா வுட்டுடு" பாலிஸி தான் இதுக்கும்.

8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையத்தளங்களிலிருந்தும் ரீடிஃப், எண்டிடிவி, சிஎன்னென் போன்ற செய்தித் தளங்களிலிருந்தும் செய்திகளை வெட்டி ஒட்டி பஜனை பண்ணாதீர்கள். எழுத விஷயமில்லை என்றால் எழுதாமலிருப்பது உத்தமம்.

நாலு எட்த்துக்கும் போயி படிக்க வசதி இல்லாதவங்கோ இங்க வந்து நூஸ் பாத்துக்கலாம்ன்னு ஒரு நல்ல எண்ணத்துல செஞ்சிருப்பாங்கோ. வுட்டுத்தள்ளுங்கோ.

9. வெப் கவுண்ட் என்பது மிகப்பெரிய மாயை மற்றும் மோசடி. அந்த எண்ணிக்கையைப் பார்த்துப் பார்த்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். திரும்பத்திரும்ப ஐம்பது பேர்தான் சின்சியராக வலைப்பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதை எப்போதும் மனத்தில் இருத்தவும்.

வாத்யாரே, டெக்னிகல் மேட்டர்ல வுள்ள போறிங்களே. வெப் கவுண்ட மாயை ஆக்குறதும் ஆக்காததும் அத்த போடுறவன் கைல தான் கீது. எதுனா பெர்ய எணைய பத்திரிகைல "நைனா இங்க பாருபா நா முண்ணூத்தி முப்பத்தோறாவது கோடிய தொட்டுட்டேன்"னு சீன் போடுறதுக்கு வூஸ் பண்ற கவுண்ட்டு வேற. நம்ம பதிவுல எத்தன பேரு வராங்கோ, இதுல ஆராரு புச்சா வராங்கோன்னு தெர்ஞ்சிக்க தான் பதிவுல கவுண்ட்டு போட்டு வெச்சிக்கறதே. அத்த நென்ச்சில்லாம் ஃபீலாவாதிங்கோ.

3 comments:

ganesh said...

Freedom should never be compromised. I feel, blog is a private space to express oneself. The readers have to freedom to read what they want and the writers have the freedom to write what they want. If you don't like a certain blog...don't read. Blog readers have to learn to tolerate other bloggers views, writing styles, ideas, format, content. Rules. Rules are every where..lets not bring them into blogspace also.

Maravandu - Ganesh said...

§Â¡ù ÌôŠ À¢ÃÁ¡¾õ¡ À¢ýÉ¢ð¼( ¿¡ý ¸ð¼¨Ç¨Â Á£Ú¸¢§Èý)þÐììÌ §¾íìŠ Ñ ¦º¡øÄ¢ ¸ð¼¨Ç¨Â Á£È¢ôÒ¼¡¾¡ ¬Á¡ ¦º¡øÄ¢ð§¼ý

þ¾ò à츢 ÁÃò¾ÊÄ §À¡ÎôÀ¡

Boston Bala said...

கட்டளை கேட்டு கப்சிப் ஆகிட்டீரோ!?